பாராளுமன்றில் பலஸ்தீன சால்வையை அணிந்தார் சஜித் .
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். அவர் பலஸ்தீன கொடி மற்றும் இலங்கையின் தேசிய கொடி ஆகிய இரண்டு கொடிகளும் பொறிக்கப்பட்ட சால்வை அணிந்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (14), பலஸ்தீனம் மீதான தாக்குதல் தொடர்பிலான ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், பிரேரணை முன்வைத்து உரையாற்றினார். அதனை, ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான இம்தியாஸ் பாக்கிர் மார்க்கார் வழிமொழிந்து உரையாற்றினார்.
கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களை தடுப்பதற்கு கல்முனையில் நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களை தடுப்பதற்கு நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (14) காலை எட்டு முப்பது மணிக்கு இடம்பெற்றுள்ளதுடன் இச்சம்பவத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் காணாமல் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி ஆகியோருக்கு பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு குறித்த நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் போது கல்முனை பாண்டிருப்பு அரசடி அம்மன் ஆலய முன்றலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கம் பொதுமக்களுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வினை முன்னெடுத்திருந்தது.
எனினும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க தலைமையிலான பொலிஸார் கல்முனை நீதிவான் நீதிமன்ற தடை உத்தரவை காண்பித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் என்பவருக்கு தடை உத்தரவு உள்ளதாகவும் எனவே முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாக ஏற்பாடு செய்துள்ள குறித்த நிகழ்வினை நிறுத்துமாறு கூறி தடை உத்தரவை வழங்கினர். அத்துடன் ஏனைய அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி ஆகியோருக்கு பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவ்விடத்தில் இருந்து செல்லுமாறு எச்சரித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இது தவிர கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) இரவு முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாக செயற்பட்ட குற்றச்சாட்டில் திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில் மூன்று பேரும் பல்கலைக்கழக மாணவி ஒருவருமாக நால்வர் சம்பூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெண் சிறைக்காவலர் ஒருவரை கொலை செய்ய, சிறையில் உள்ள பெண் கைதி ஒருவருக்கு கன்ட்ரகட் வழங்கிய மற்றுமொரு பெண் சிறைக்காவலர் #இலங்கை
அக்குறனை அப்துல் ரஸ்ஸாக் பாத்திமா ஷப்னா இர்ஹாம் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு - இருவர் கைது #சம்மாந்துறை
மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் கைதான மௌலவியை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு
T20 உலகக் கிண்ண தொடருக்கு அமெரிக்கா செல்லும் இலங்கை அணி சக்தி வாய்ந்தது - எந்த அணிக்கும் சவால் விடுமளவு நல்ல நிலையில் உள்ளது ; தேர்வுக் குழுத் தலைவர் உபுல் தரங்க
உலகில் முதன்முறையாக பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திக்கொண்ட நபர் இரண்டு மாதங்களில் உயிரிழப்பு
இஸ்ரேல் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம் - சஜித் பிரேமதாசவும் களத்தில்
அப்பாவி பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்க வேண்டும் ; அசாத்சாலி வேண்டுகோள்
அப்பாவி பலஸ்தீனர்களை யுத்தக் கேடயங்களாகப் பாவிக்கும் இஸ்ரேலின் போக்குகளை ஆழமாக அவதானித்து வருவதாகத் தெரிவித்துள்ள தேசிய ஐக்கிய முன்னணி, இதை சர்வதேசம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
காசாவில் ஏற்பட்டுள்ள கொடிய அவலங்கள் குறித்து தேசிய ஐக்கிய முன்னணியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
காசாவில் ஏற்பட்டுள்ள யுத்த அவலங்கள் சர்வதேச நடைமுறைகளை மீறியுள்ளன. யுத்த தர்மங்களை மீறி இஸ்ரேல் கட்டவிழ்த்துள்ள வெறியாட்டம், பலஸ்தீனத்தை எரிந்த தேசமாக மாற்றும் வக்கிர நோக்கம்கொண்டது. சர்வதேசத்தின் பார்வைகள் இவ்விடயத்தில் பாரபட்சமாக உள்ளன.
ரபா எல்லையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள இஸ்ரேல், அப்பாவி பலஸ்தீனர்களை யுத்தக் கேடயங்களாகப் பாவிக்கிறது. இதை ஒருபோதும் அனுமதிக்க இயலாது. ரபா எல்லையைக் குறிவைத்து இஸ்ரேல் ஆரம்பித்துள்ள இராணுவ நடவடிக்கைகளால் மே 10இல் 110000 பேர் தப்பியோடியுள்ளனர். மேலும், ஒக்டோபர் 07இல் தொடுக்கப்பட்ட இஸ்ரேலின் இராணுவ நடிக்கைகளால் இதுவரை 2.2 மில்லியன் மக்கள் பலவந்தமாக வெளியேற நேரிட்டுள்ளது.
சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட பலஸ்தீனத்தின் ஆள்புல எல்லைக்குள் இஸ்ரேல் அத்துமீறியுள்ளமை, பிற நாட்டின் மீதான ஆக்கிரமிப்பே! சர்வதேச நியதிகளை புறந்தள்ளியுள்ள இச்செயற்பாடுகளை கண்டிப்பதற்கு மேலைத்தேயம் தயங்குவது ஏன்? சிவிலியன்களை கொன்றுகுவிக்கும் இஸ்ரேலியப் படைகளுக்கு இந்நாடுகள் இன்னும் உதவியளிப்பது வேதனைக்குரியது.
இவ்வாறு நடந்துகொள்ளும் சியோனிஸ அரசை தண்டிப்பதற்கு கீழ் கண்ட விடயங்களை ஐ.நா. அவசரமாகச் செய்ய வேண்டும் எனவும் தேசிய ஐக்கிய முன்னணி ஆலோசனைகளை முன்வைத்துள்ளது.
இஸ்ரேலுக்கான ஆயுத மற்றும் யுத்த தளவாடங்களை நிறுத்துதல், காசாவின் வான்பரப்புக்களில் விமானங்கள் பறப்பதற்கு தடைவிதித்தல், இஸ்ரேலுடனான ராஜதந்திர உறவுகளைப் பகிஷ்கரித்தல் மற்றும் விளையாட்டு, கலாசார உறவுகளிலிருந்து இஸ்ரேலை தனிமைப்படுத்தல். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணம் செல்வதாக முச்சக்கர வண்டிகளில் ஏறிச்சென்று சாரதிகளை அச்சுறுத்தி கொள்ளையடித்து வந்த நபர் சிக்கினார்.
வாடகைக்கு செல்வதாக கூறி முச்சக்கர வண்டிகளில் ஏறி சாரதிகளை அச்சுறுத்தி கொள்ளையடித்து வந்த நபர் ஒருவர் அங்குலான பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் 02 முச்சக்கர வண்டிகள், 02 கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தாமரை கோபுரத்தில் இருந்து குதித்தவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி .
தாமரை கோபுரத்தில் பாய்ச்சல் நிகழ்வை அனுபவிக்கும் போது வெளிநாட்டவர் ஒருவர் கீழே விழுந்ததில் காயம் அடைந்தார்.
சற்று முன்னர் தாமரை கோபுரத்தில் பேஸ் ஜம்ப் போட்டியில் கலந்து கொண்ட வெளிநாட்டவர் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
கோபுரத்தில் இருந்து குதித்த பின்னர் குறித்த வெளிநாட்டவர் தனது பரசூட்டை இயக்குவதில் தாமதித்ததாக சம்பவத்தைநேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.
காயமடைந்த வெளிநாட்டவர் உடனடியாக பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
VIDEO : ருமேனியாவில் வேலைக்கு செல்ல 7 முதல் 10 இலட்சம் பணம் செலுத்திய 128 பேர் - ஏஜென்சிகாரர் எஸ்கேப்
ருமேனியாவில் வேலை வாய்ப்பை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்ட நீர்கொழும்பு பகுதியில் இயங்கி வரும் வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்றின் முன்பாக நேற்று (12) பதற்றமான சூழல் ஏற்பட்டது.
128 இளைஞர்கள் தலா 7 முதல் 10 இலட்சம் ரூபா வரை பணம் இந்த வேலை வாய்ப்பிற்காக பணம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் நேற்று வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்திற்கு முன்பாக திரண்டனர்.
அங்கு அவர்கள் ஊடகங்ளிடம் கருத்து தெரிவிக்கையில்
“நான் வாத்துவையில் இருந்து வந்தேன்.. ருமேனியா செல்வதற்காக 7.45 லட்சம் ரூபாய் கொடுத்தேன். இதேபோன்று 120 பேர் இங்கே வந்துள்ளனர். நாளை நேர்முகத்தேர்வுக்கான திகதி வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்று அழைத்து அனைத்தும் இரத்து செய்யப்பட்டதாக கூறினர். ஒரு பாரிய மோசடியாகும்" என்றனர்.
தேவஹூவ கிராமத்தின் முதலாவது சட்டத்தரணியாக நிஸ்வர்தீன் பாத்திமா நிஸ்ரா உயர் நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம்.
( ஐ. ஏ. காதிர் கான் )
தேவஹூவ - புலனவெவ கிராமத்தைச் சேர்ந்த திருமதி நிஸ்வர்தீன் பாத்திமா நிஸ்ரா, இலங்கை சனநாயக சோசலிஷக் குடியரசின் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக, உயர் நீதிமன்றத்தில் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில், (2024.05.06) திங்கட்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
தேவஹூவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைப் பயின்ற இவர், தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முகாமைத்துவப் பீடத்திற்குத் தெரிவானார்.
இவர் அங்கு ஆங்கில மொழி மூலம் வாயிலாக, முகாமைத்துவமும் தகவல் தொழிநுட்பப் பிரிவில் "விஞ்ஞானமாணி" (BSE IN MIT) பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.
மேலும், ஆங்கில மொழி ஊடாக சிறப்புச் சித்தி பெற்று "சிறப்புச் சட்டமாணி" என்ற பட்டத்தையும் [LLB(Hons)] சூட்டிக்கொண்டார்.
சட்டக் கல்லூரியினால் நடாத்தப்படும், சட்டத்தரணிகளுக்கான இறுதிப் பரீட்சையிலும் தோற்றி சித்தியடைந்துள்ள பாத்திமா நிஸ்ரா, தேவஹூவ கிராமத்தின் முதலாவது சட்டத்தரணியாகத் தேர்வாகி, தனது கிராமத்திற்கும் தனது பெற்றோருக்கும் பேரும் புகழும் சேர்த்துள்ளார். அத்துடன், சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீனிடம் இதற்கான ஆரம்பப் பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டதையும் இவர், நன்றியுடனும் பெருமையுடனும் நினைவு கூர்ந்துள்ளார்.
இளம் வயதிலேயே சட்டத்தரணியாக புகழ் நாமம் சூட்டிக்கொண்ட இவர், தேவஹூவவைச் சேர்ந்த நிஸ்வர்தீன் - நிஸ்பா தம்பதியினரின் மூன்றாவது புதல்வியுமாவார்.
திருமதி நிஸ்வர்தீன் பாத்திமா நிஸ்ராவின் மூத்த சகோதரிகளான திருமதி நிஸ்வர்தீன் பாத்திமா நிஸ்கா, திருமதி நிஸ்வர்தீன் பாத்திமா நிஸ்திகா ஆகியோர், தேவஹூவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியைகளாகப் பணியாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )
நான் ஜனாதிபதியாக ஆட்சி செய்த போது எந்த அரச வளங்களையும் விற்பனை செய்யவில்லை - எமது பொருளாதார முகாமைத்துவத்தினால் ஒன்பது ஆண்டுகாலமாக நாட்டின் பொருளாதாரம் சீராக வளர்ச்சியடைந்தது ; மகிந்த
(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து புதிய அரசாங்கம் ஒன்று தோற்றம் பெறும் வரை அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கும்,தனியார் மயப்படுத்தவும் முன்னெடுத்துள்ள சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முழுமையாக இடைநிறுத்த வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறும் தரப்புக்கு கிடைக்கப் பெறும் மக்களாணைக்கு அமைய அரச சொத்துக்கள் மற்றும் வளங்கள் தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது தொடர்பில் விசேட ஊடக அறிக்கை வெளியிட்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அரசுக்கு சொந்தமான ஒருசில சொத்துக்கள் மற்றும் வியாபாரங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளால் தொழிற்சங்கங்கள்,அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் முரண்பாடற்ற தன்மை நிலவுகிறது. நட்டமடையும் அரச நிறுவனங்களுக்கான செலவுகளை குறைத்துக் கொள்ளதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்ட நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காகவும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.
2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதியாக ஆட்சி செய்த போது எந்த வளங்களையும் நான் தனியார் மயப்படுத்தவில்லை,விற்பனை செய்யவுமில்லை.எனக்கு முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தனியார் மயப்படுத்திய ஸ்ரீ லங்கா காப்புறுதி கூட்டுத்தாபனம்,ஸ்ரீ லங்கா ஹொஸ்பிடல் என்பனவற்றை மீண்டும் அரசுமடையாக்கினேன்.இந்த நிறுவனங்கள் இன்றும் இலாபமடைகின்றன.
அரச சொத்துக்கள் மற்றும் வியாபாரம் தொடர்பில் எனது அரசாங்கத்தின் கொள்கை முற்போக்கான நிலையில் காணப்பட்டது.ஏதேனும் அரச நிறுவனம் இலாபமடைந்து மக்களுக்கு சிறந்த சேவை வழங்குமாயின் அவற்றை தனியார் மயப்படுத்த வேண்டிய தேவை கிடையாது.ஒருசில வேளை பொருளாதார மேட்பாட்டுக்காகவும்,குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும் அரச நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் ஒருசில உற்பத்திகள் மற்றும் சேவைகளின் விலைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் மூலோபாய செயற்பாடுகளை முன்னெடுத்தது.மின்சாரத்துறை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
விலைக்கட்டுப்பாட்டினால் அரச நிறுவனங்கள் நட்டமடைந்த போதிலும் எமது பொருளாதார முகாமைத்துவத்தினால் ஒன்பது ஆண்டுகாலமாக பொருளாதாரம் சீராக வளர்ச்சியடைந்தது.அக்காலப்பகுதியில் கடன் செலுத்தவும்,நலன்புரி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.இக்காலப்பகுதியில் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது குறித்து எவரும் பேசவில்லை.
தனியார் மயப்படுத்தல் விடயத்தில் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு மாறுப்பட்ட தன்மையில் காணப்படுகிறது.தனியார் மயப்படுத்த கூடிய அனைத்தையும் விற்பனை செய்ய முயற்சிக்கப்படுகிறது.பெரும்பாலான தொழிற்சங்கங்கள் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது குறித்து தமது நிலைப்பாட்டை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் இடைக்கால பதவி காலத்தை நிறைவுப்படுத்தும் வகையில் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.இவ்வாறான நிலையில் அரச சொத்துக்களை அவசர அவசரமாக விற்பனை செய்தால் நாட்டுக்கு சிறந்த மற்றும் நிலையான பயன் ஏதும் கிடைக்காது.
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ளன.இவ்வாறான நிலையில் அரச சொத்துக்களை விற்பதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் தோற்றம் பெற்றுள்ளன.ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் புதிய அரசாங்கம் தோற்றம் பெறும் வரை அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கும்,தனியார் மயப்படுத்தவும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள சகல நடவடிக்கைகளையும் முழுமையாக இடைநிறுத்த வேண்டும் என்பது எனது யோசனையாக காணப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறும் தரப்பு அவர்களுக்கு கிடைக்கப் பெறும் மக்களாணைக்கு அமைய அரச சொத்துக்கள் மற்றும் வளங்கள் தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
VIDEO >> பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ரேஸ் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு அழகான பெண் வேடமணிந்த ஆண் பரிசு - 14 இளைஞர்கள் கைது
மஹரகமை - டேங்கோ போர்ட் சந்தியிலிருந்து பன்னிபிட்டிய நோக்கி அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பற்ற வகையில் ஓட்டிச் சென்ற 14 இளைஞர்களை மஹரகமை பொலிஸார் நேற்று (12) கைது செய்துள்ளனர்.
இது ஒரு பந்தயப் போட்டி என்றும், இணையத்தில் வெளியான செயலி மூலம் அவர்கள் இதில் இணைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
போட்டியில் வெற்றி பெறுபவருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகைக்கு மேலதிகமாக அழகான பெண் வேடமணிந்த இளைஞர் ஒருவரும் வழங்கத் தயார் நிலையில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 14 இளைஞர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுகேகொட நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
போட்டியில் பயன்படுத்தப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.