பெற்றெடுத்த குழந்தையை கொன்று புதைத்த தனிமையில் வாழும் பெண் கைது - குழந்தையை புதைத்த இடத்தில் நீதிபதி முன்னிலையில் சோதனை
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான உறவின் மூலம் கர்ப்பமடைந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த பெண் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிறந்த குழந்தையை கொலை செய்து புதைத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்ட நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் பெண்ணை கைது செய்துள்ளனர்.
அத்துடன் குழந்தையை புதைத்த இடத்தில் நீதிபதி முன்னிலையில் சோதனை நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளது.
ஏனைய கைதிகள் சிறைச்சாலை பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட அதேவேளை கெஹலிய ரம்புக்வெல்லவை மட்டும் குழந்தைகளின் வேனில் ஏற்றிச்சென்றது ஏன் ?
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பெண் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக யுனிசெப் வழங்கிய பேருந்தின் மூலம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பெண் கைதிகளின் குழந்தைகளின் நலனுக்காக மாத்திரம் பயன்படுத்தப்பட வேண்டும் என யுனிசெஃப் நிபந்தனை விதித்துள்ள போதிலும், சிறைச்சாலை அதிகாரிகள் ரம்புக்வெல்லவின் போக்குவரத்துக்கு இந்தப் பேருந்தை பயன்படுத்தியதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
ரம்புக்வெல்லவுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஏனையோர் சிறைச்சாலை பேருந்தில் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், ரம்புக்வெல்லவுக்கு ஏன் இவ்வாறான விசேட சலுகை வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பப்படுகிறது.
கோட்டபாயவின் முன்னாள் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் போதைப்பொருளுடன் கைது.
கண்டி இமாதுதீன் அமைப்பினால் குறுக்குதலை ஹுதா ஜும்மா பள்ளிவாயலில் நடாத்தப்பட்ட ஜனாஸா பயிற்சி நிகழ்வு
முதலில் ஜனாதிபதி தேர்தல் ; ரனில் அமைச்சரவைக்கு அறிவித்தார்.
முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ரனில் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
இன்று மாலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பொதுத்தேர்தலை நடத்துமாறு கோரிவரும் நிலையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வீட்டு உரிமையாளர் தராவீஹ் தொழச்சென்ற நேரம்பார்த்து வீட்டின் ஜன்னலை உடைத்து 39 இலட்சத்திற்கும் அதிக தங்கநகையை திருடிச்சென்ற 3 பேர் கைது.
நாடு முழுவதும் இரத்தினக்கற்களை கண்டறிய கணக்கெடுப்பு
தங்கும் அறை ஒன்றில் 27 வயது தாயொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 22 வயது இளைஞன் கைது.
அரிசி உருண்டை சாப்பிட்ட 14, 28 மற்றும் 34 வயதுடைய மூவர் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதி
காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்...
ரஷ்யா ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புதின் 88% வாக்குகளைப் பெற்று மிகப் பெரிய வெற்றியடைந்தார்.
தலசீமியா மேர்ஜர் நோயினால் பாதிக்கப்பட்டு அவசர சத்திர சிகிச்சையை எதிர்நோக்கும் M.R. ஷப்காவுக்காக நிதி உதவி கோரல்
நிலவும் வெப்பமான வானிலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கலாம்
நிலவும் வெப்பமான வானிலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் நாட்டின் சில பகுதிகளில் மாலை வேளையில் மழை பெய்யக்கூடும் என திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க குறிப்பிட்டார்.
ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை சூரியன் உச்சம் கொடுப்பதால், வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதுல கருணாநாயக்க கூறினார்.
இதேவேளை, இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் பகுதியிலேயே அதிகூடிய வெப்பநிலை பதிவாகியுள்ளது.
குருநாகலில் 38.3 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கொழும்பில் 33.9 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதேவேளை, சித்திரை புத்தாண்டிற்கு பின்னர் பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்யுமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக அவ்வாறான போட்டி நிகழ்ச்சிகளை சில வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த ஆலோசனைகளை சில பாடசாலைகள் மீறுவதை ஊடகங்கள் வழியாக தாம் அறிவதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
2026 முதல் க.பொ.த (சா/த) ஏழு பாடங்கள் மட்டுமே ஏ, பி, சி பாஸ்களுக்குப் பதிலாக ( சராசரி புள்ளி) ஜிபிஏ!
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை ஏழாக மட்டுப்படுத்தப்படும் மற்றும் ஏ, பி சி சித்திகளை முற்றாக நீக்கி, அதற்குப் பதிலாக தரப் புள்ளி சராசரி (ஜிபிஏ) மூலம் உறுதி செய்யப்படும். இதன் அடிப்படியில் எந்த மாணவரும் பரீட்சை தோல்வியடைபவராக கருத்தப்படமாட்டார்.
விஞ்ஞானம், கணிதம், தாய்மொழி, ஆங்கிலம், சமயம் , ஒழுக்கக் கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வரலாறு ஆகியவற்றுக்கான க.பொ.த. O/L பரீட்சையை பரீட்சைகள் திணைக்களம் 2026 ஆம் ஆண்டு முதல் நடத்தவுள்ளது.
இந்த திட்டம் 2025 முதல் பாடசாலைகளில் தொடங்கப்படும், இந்த மாற்றத்தின் அடிப்படியில் 2026 ஆம் ஆண்டு மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவர்.
மேலும் ஏ, பி சி பெறுபேறுகளை பதிலாக மாணவர்களுக்கு ஜிபிஏ (சராசரி புள்ளி) வழங்கப்படும் .
இந்த புதிய முறையின்படி, ஒவ்வொரு பரிட்சார்த்தியும் ஒரு குறிப்பிட்ட அளவிலான மதிப்பெண்களுடன் தோல்வி மதிப்பெண்கள் இல்லாமல் தேர்ச்சி பெறுவார்கள். குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் தொழிற்கல்வி பாடங்களை தொடர முடியும் .
இதன் மூலம் வருடாந்தம் க.பொ.த சா/த பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் க.பொ.த உயர்தர கல்விக்கு தகுதி பெற முடியும் என கல்வி மறுசீரமைப்பு நிபுணர் குழுவின் பேராசிரியர் குணபால நாணயக்கார தெரிவித்துள்ளார் .
வருங்கால SJB அரசாங்கம் ஆங்கில வழிக் கல்வியை கட்டாயமாக்கும்
வருங்கால SJB அரசாங்கம் ஆங்கில வழிக் கல்வியை கட்டாயமாக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வார இறுதியில் தெரிவித்தார்.
தரம் ஒன்று முதல் பதின்மூன்று வரையிலான மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியை கட்டாயமாக்குவோம் என குருநாகலில் நடைபெற்ற இளைஞர் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் தெரிவித்தார்.
மேலும், "இளைஞர்களுக்கு சீனம், இந்தி, ஜப்பானியம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவியல் ஆகிய மொழிகளை இலவசமாகக் கற்பிப்போம்" என்றும் அவர் கூறினார்.
இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 1000 கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக தகவல் வெளியானது
நான்கு மாணவர்கள் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த வேளை கம்பளை பொலிஸ் போதை ஒழிப்பு அதிகாரிகளால் கைது.
கம்பளை பிரதேசத்தில் உள்ள பிரபல அரச மற்றும் சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் நான்கு மாணவர்கள் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த வேளை கம்பளை பொலிஸ் போதை ஒழிப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கம்பளை புகையிரத பாதையில் மாணவர்கள் கஞ்சா புகைத்துக் கொண்டிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்கள் தினசரி ரமழான் நோன்பை திறந்த பின்னர் மேற்கண்ட இடத்தில் கஞ்சா புகைப்பதாக கம்பளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர், கம்பளை பிரதான நீதவான் திருமதி வாசனா நவரத்ன அவர்களுக்கு தலா மூவாயிரம் ரூபாவும் பன்னிரண்டாயிரம் ரூபாவும் அபராதம் விதித்தார்.
கம்பளை கஹடபிட்டிய, கண்டிவீதி , பபில மற்றும் சிங்கபிட்டிய ஆகிய பகுதிகளில் வசிக்கும் 15 மற்றும் 16 வயதுடைய நான்கு மாணவர்களுக்கே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்கள் கம்பளை நகரின் பிரபல வர்த்தகர்கள் நால்வரின் பிள்ளைகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்களிடம் இருந்து 365, 657, 680, 273 மில்லி கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு, அந்த தொகையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது
சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதியாகிவிட்டது ; SM மரிக்கார்..
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதியாகிவிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் குறிப்பிட்டார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதியாகிவிட்டது . சஜித் பிரேமதாசவுக்கும் அனுர குமாரவுக்கு இடையிலேயே போட்டி உள்ளது. மிக அண்மைய கருத்து கணிப்பு படி சஜித் பிரேமதாசவுக்கு 39 வீதம் வாக்குகள் கிடைக்கும் அனுரவுக்கு 20 வீதம் வாக்குகள் கிடைக்கும். இதுவரை எவருக்கு வாக்களிப்பது என தீர்மானிக்காத வாக்குகள் 24 வீதமான வாக்குகளில் பெரும்பான்மையான வாக்குகள் வெற்றி பெரும் வாக்காளருக்கே கிடைக்கும் என குறிப்பிட்டார்.
என்னை ஜனாதிபதியாக தேர்வு செய்யாவிட்டால் இரத்தக்களறி ஏற்படும் என டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை அழைத்து வந்து பிறந்த நாள் பார்ட்டி வைத்த பல்கலைகழக மாணவன் ..
தனியார் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தனது நண்பர்களுக்காக நடத்தப்பட்ட போதைப்பொருள் கொண்ட விருந்தொன்றை பொலிஸார் சோதனையிட்ட சம்பவம் ஒன்று அண்மையில் கஹதுடுவ பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது.
இக்கதை பின்வருமாறு படிப்படியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாணவனுக்கு 22 வயது. இவரது குடியிருப்பு தியத்தலாவ பிரதேசத்தில் உள்ளது. மாணவி தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். இந்த மாணவன் தனது படிப்பை மேற்கொள்வதற்காக ஹோமாகம அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தான். அங்குள்ள ஒரு வீட்டை இந்த மாணவன் மாதம் நாற்பத்தைந்தாயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் வாடகைக்கு எடுத்தான்.
மாணவியின் பிறந்தநாள் சமீபத்தில். அதற்காக தனது நண்பர்களுடன் பொழுதை கழிக்க விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார். இணைய உலாவல் மாணவர் தனது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள இணைய நண்பர்களை அழைத்தார். அன்று காலையிலிருந்து பிறந்தநாள் விழாவிற்கு நண்பர்கள் வருகிறார்கள். பல்வேறு தரத்தில் இருந்து ஆண்களும், பெண்களும் மாணவ, மாணவியரின் இல்லத்திற்கு வந்து வாழ்த்து தெரிவித்தனர். மதியம் விருந்து விறுவிறுப்பாக இருந்தது. பங்கேற்பாளர்கள் சாப்பிட்டு, குடித்து, மனதுக்கு நிறைவாகப் பாடினர்.
அபார்ட்மென்ட் வளாகத்தில் வசிப்பவர்களில் சிலருக்கு விருந்து ஒரு சலசலப்பைக் கண்டுபிடிக்க அதிக நேரம் எடுக்கவில்லை. விருந்து என்ற போர்வையில் குறித்த வீட்டில் சில சட்டவிரோத செயற்பாடுகளும் இடம்பெறுவதை சில குடியிருப்பாளர்கள் நீண்டகாலமாக அவதானித்திருந்தனர்.
இதன்படி, இது தொடர்பான தகவல் கஹதுடுவ பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுகஹதுடுவ பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் ஏ.எச்.கே. பிரியங்காவுக்கு கிடைத்த இந்தத் தகவலின் பேரில், அவரது அறிவுறுத்தலின்படி சம்பந்தப்பட்ட வீட்டைச் சோதனையிட அந்த நேரத்தில் ஒரு போலீஸ் குழு வீட்டிற்குச் செல்கிறது.
பார்ட்டி நடந்த வீட்டிற்கு போலீசார் வந்ததும் அனைவரும் திகைத்து நின்றனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் 100 வீதம் சரியானது எனவும், குறித்த வீட்டில் விருந்தோம்பல் என்ற போர்வையில் போதைப்பொருள் பாவனை இடம்பெறுவதையும் பொலிஸ் அதிகாரிகள் அவதானித்துள்ளனர்அதன்படி, சந்தேகத்தின் பேரில் அங்கிருந்த 27 பேரை பிடித்து விசாரித்தனர்.
அங்கு நடத்திய விசாரணையில் 20 மில்லி கிராம் ஆஷ் போதை மருந்து, மாத்திரைகள், செல்போன், வேகன்ஆர் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். குறித்த WagonR, காலியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது எனவும், இந்த விருந்தில் கலந்து கொள்வதற்காக காலியை சேர்ந்த மூவர் ஹோமாகமவிற்கு காரில் வந்துள்ளதாகவும், குறித்த வீட்டிற்கு போதைப்பொருள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த வீட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும் பணத்திற்காக தமது உடலையும் விற்பனை செய்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 21 பேர் ஹோமாகம வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் போதைப்பொருளை எடுத்துச் சென்றார்களா என்பதைக் கண்டறிந்து அவர்களின் பெற்றோரை அழைத்து வந்து ஒப்படைத்தனர்.
அலைக்கழிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும், போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர்களும் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று பெண்கள் தொடர்பாக சமூக அறிக்கை கோரப்பட்டது. அதனை அடுத்த நீதிமன்ற தினத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பதில் நீதவான் கெஸ்பேவா பொலிஸாருக்கு உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட 21 பேரும் 22 முதல் 28 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர், தனது நீண்டகால தோழியுடன் திருமண பந்தத்தில் இணைந்தார்.
அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தனது நீண்டகால தோழி சோபி அல்லோச்சசுடன் திருமண பந்தத்தில் இணைந்துகொண்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் இந்த ஒருபால் இனத்தவர்கள் திருமணம் உலகின் பேசுபொருளாகி உள்ளது
அடிலெய்ட் ஹில்ஸ் பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்ற இந்த திருமண நிகழ்வில் பிரதமர் அன்டனி அல்பெனிஸ் உட்பட தொழில்கட்சியின் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் இது குறித்த தகவல்களை பதிவிட்டு;ள்ள பெனிவொங் இந்த விசேடமான நாளை எங்களின் பல நண்பர்கள் குடும்பத்தவர்கள் எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடிந்தமை குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.
தனது வாழ்க்கை துணையுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட படத்தையும் பெனிவொங் வெளியிட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் 2007 இல் தனது வாழ்க்கை துணையை சந்தித்தார்.இவர்களிற்கு இரு பெண்பிள்ளைகள் உள்ளனர்.எனினும் இருவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விடயங்களை மிகவும் இரகசியமாக பேணிவருகின்றனர்.
நாட்டில் வேலைவாய்ப்பு வீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு
பண்டிகை காலத்தையொட்டி நிறுவனங்களுக்கு புதிய பணியாளர்களை உள்வாங்குதல் காரணமாக நாட்டில் வேலைவாய்ப்பு வீதம் அதிகரித்துள்ளது.
அதன்படி கடந்த ஜனவரி மாத்தில் 48.5 சதவீதமாக காணப்பட்ட வேலைவாய்ப்பு வீதம் பெப்ரவரி மாதத்தில் 51 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அத்துடன், பெப்ரவரி மாதத்தில் பணிகளுக்கான இலங்கை கொள்வனவாளர் முகாமையாளர் சுட்டெண் 53 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
அத்தோடு, போக்குவரத்து மற்றும் நிதிச் சேவைகளின் துணைத் துறைகளிலும் மேம்பாடுகளை அவதானிக்க கூடியதாக உள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
ஆயிரக்கணக்கான இஸ்ரேல் மக்கள் டெல் அவிவ் நகரில் மாபெரும் போராட்டம்
ஹமாஸ் போராளிகள் பிடியில் உள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்கக் கோரி இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன.
இருப்பினும், அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு, ஹமாஸால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் இன்னும் ஹமாஸின் காவலில் உள்ளனர்.
பணயக்கைதிகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி பணயக்கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசும் போராட்டக்காரர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு வருகிறது.
6 வயது சிறுமி கிணற்றில் விழுந்து (பாத்திமா சனா) மரணம்
மதுரங்குளிய விருத்தோடு பகுதியில் ஆறு வயது சிறுமி ஒருவர் வீட்டில் அரைவாசியாக கட்டப்பட்டிருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்தனர்.
மதுரங்குளிய விருத்தோட்டை வசிப்பிடமாகக் கொண்ட ஹலாம் பாத்திமா சனா (06) விருத்தோடு முஸ்லிம் கல்லூரியில் இந்த வருடம் முதலாம் தரத்தில் அனுமதிக்கப்பட்ட சிறுமி. இவ்வாறு உயிரிழந்த சிறுமி குடும்பத்தில் இளையவர் எனவும் அவருக்கு 11 வயதில் ஒரு சகோதரியொருவர் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.