வீதியின் குறுக்கே நின்றிருந்த மாட்டில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞன் பலி.



பொலன்னறுவை , வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவர் பொலன்னறுவை , வெலிகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞராவார்.


இவர் வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது வீதியின் குறுக்கே நின்று கொண்டிருந்த மாட்டின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரொருவரும் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிள் செலுத்தியவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
வீதியின் குறுக்கே நின்றிருந்த மாட்டில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞன் பலி. வீதியின் குறுக்கே நின்றிருந்த மாட்டில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞன் பலி. Reviewed by Madawala News on April 27, 2024 Rating: 5

கடலரிப்பை உடனே தடுங்கள்! இல்லையேல் - இராஜினாமா செய்க !! -





ஜனாதிபதிக்கு கை கொடுப்பதை விடுத்து சாய்ந்தமருது உட்பட - அம்பாரை மாவட்ட கடலோர மண்ணரிப்பை தடுக்க நிரந்தர திட்டமொன்றை செயற்படுத்துங்கள்.


இவ்வாறு - முஸ்லிம் காங்கிரஸ் பிரதிப் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் - அம்பாரை மாவட்ட எம்பிக்களுக்கு பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அறிக்கை ஒன்றின் மூலமாக - யஹியாகான் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :-


சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்ற ரீதியில் - சாய்ந்தமருது பகுதி கடலரிப்பு உட்பட மாவட்ட கடலரிப்பு தொடர்பில் நான் உட்பட பலரும் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றோம். ஆனால் , எதுவித தீர்வும் இதுவரை எட்டப்படவே இல்லை.


தேசிய காங்கிரஸ் தலைவரும் - அண்மையில் சாய்ந்தமருதில் , கடலரிப்பை தடுத்து விட்டது போன்று வீடியோ , புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தார். ஆனால் , அதுவும் சாத்தியப்படவில்லை என்றே புலனாகியது.


ஜனாதிபதியுடன் கைகொடுத்து , அருகில் நின்று - புகைப்படம் எடுக்கும் மாவட்ட  எம்பீமார் - சாய்ந்தமருது கடலரிப்பை தடுக்க ஆர்வம் காட்டுவதில்லை ஏன் ? என்ற கேள்வி மக்கள் மத்தியில் இன்று பரவலாக எழுந்துள்ளது. 


இவ்வாறு - கைகொடுக்கும் சந்தர்ப்பத்திலாவது இந்த கடலரிப்பு குறித்து ஜனாதிபதியிடம் தெளிவாக பேசியிருக்க முடியும். 


அம்பாரை மாவட்ட எம்பீக்களே ! ஜனாதிபதியை இவ்வாறு தனித்தனியாக சந்திப்பதை விடுத்து கட்சி ரீதியாக அல்லது மாவட்ட எம்பீக்கள் அனைவரும் ஒன்றுபட்டு முகா. தலைவர் ஹக்கீமுடன் சென்று சந்திக்க முடியுமாக இருந்தால் இன்னும் வலுவாக இருக்கும். தனித்தனியாக சென்று சந்திப்பதனால்தான் சகல அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் இடைநடுவில் நிற்கின்றன என்பது மக்களின் ஆதங்கமாக இருக்கின்றது.


கடலரிப்பு காரணமாக மீனவ சமுகம் மட்டுமன்றி முழு மக்களுமே கடும் ஆவேஷத்துடன் மாவட்ட எம்பீமாருடன் இருக்கின்றனர். இந்த எம்பீக்களை தேடித் தேடி தோற்கடிக்க வேண்டும் என்ற ஆத்திரம் மக்கள் மத்தியில் மேலோங்கி உள்ளது.


தயவுசெய்து - சாய்ந்தமருது பிரதேச கடலரிப்பு உட்பட மாவட்ட கரையோர கடலரிப்பை தடுக்க நிரந்தர முயற்சி செய்யுங்கள்; இல்லையேல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்யுங்கள்.


அம்பாரை மாவட்ட எம்பிக்களுக்கு  - இன்று நல்ல செல்வாக்கு அரசாங்கத்துடன் உள்ளதாக - அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகின்றது. அதைப் பயன்படுத்தியாவது - தலைவர் ஹக்கீமின் தலைமையில் சென்று - ஜனாதிபதியை சந்தித்து தீர்வைப் பெற முயற்சி செய்யுங்கள் என்றும் அந்த அறிக்கையில் - யஹியாகான் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடலரிப்பை உடனே தடுங்கள்! இல்லையேல் - இராஜினாமா செய்க !! - கடலரிப்பை உடனே தடுங்கள்! இல்லையேல் - இராஜினாமா செய்க !!  - Reviewed by Madawala News on April 27, 2024 Rating: 5

மனித உடலை ஒத்த உருவத்துடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த சம்பவம் இலங்கையில் பதிவு



மனித உடலை ஒத்த ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த சம்பவம், இலங்கையில் பதிவாகியுள்ளது.
தெனியாய - விஹாரஹேன, செல்வகந்த பகுதியில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.


குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்ட ஆடு ஒன்று, இவ்வாறு மனித உடலை ஒத்த ஆட்டுக்குட்டியை ஈன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


எவ்வாறாயினும், குறித்த ஆட்டுக்குட்டி பிறந்த சில நிமிடங்களிலேயே, உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உடலை ஒத்த உருவத்துடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த சம்பவம் இலங்கையில் பதிவு மனித உடலை ஒத்த உருவத்துடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த சம்பவம் இலங்கையில் பதிவு Reviewed by Madawala News on April 27, 2024 Rating: 5

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் தலதா மாளிகை தாக்குதல், காத்தான்குடி பள்ளிவாசல் தாக்குதல் என மத தலங்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றன... ஆனால் கோட்டபய ராஜபக்ஷவை மாத்திரமே விமர்சிக்கிறார்கள் ; மஹிந்தானந்த



(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தை அரசியலாக்குவதை பேராயரும், கத்தோலிக்க சபையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பேராயருக்கு சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரிடம் மாத்திரமா டீல் உள்ளது.

சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் வாக்களிக்குமாறு அஸ்கிரிய பீடம் குறிப்பிடவில்லை. கத்தோலிக்கர்களின் கௌரவத்தை இல்லாதொழிப்பதை கத்தோலிக்க சபை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் பல விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்காக மாத்திரம் 150 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பேராயரும், கத்தோலிக்க சபையும் மக்கள் மத்தியில் மாறுப்பட்ட நிலைப்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறது. கத்தோலிக்கர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக அவர்கள் குரல் கொடுக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

இருப்பினும் இந்த தாக்குதல் நாட்டில் இடம்பெற்ற முதலாவது தாக்குதல் அல்ல, தலதா மாளிகை, ஸ்ரீ மா விகாரை,காத்தான்குடி பள்ளிவாசல் தாக்குதல் என மத தலங்கள் மீது அடிப்படைவாதிகளாலும்,
பயங்கரவாதிகளாலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

தலதா மாளிகை தாக்குதல், அரந்தலாவ பிக்குகள் படுகொலை சம்பவங்களை சிங்கள பௌத்தர்கள் இழுத்துக் கொண்டு செல்லவில்லை. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்தாரிகளையும், தாக்குதலை தடுக்க தவறியவர்களையும் கத்தோலிக்க சபை குற்றஞ்சாட்டுவதில்லை. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை மாத்திரமே விமர்சிக்கிறார்கள். குற்றஞ்சாட்டுகிறார்கள்.

கத்தோலிக்க மக்களுக்கு இந்த நாட்டில் உள்ள கௌரவத்தை இல்லாதொழிக்க வேண்டாம் என பேராயரிடமும், கத்தோலிக்க சபையிடமும் கைக்கூப்பி வேண்டிக் கொள்கிறேன். சஜித்துக்கும், அநுரவுக்கும் வாக்களிக்குமாறு பேராயர் குறிப்பிடுகிறார். தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று இவரால் எவ்வாறு குறிப்பிட முடியும்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோட்டபய ராஜபக்ஷவுக்கு சிங்கள பௌத்தர்கள் வாக்களித்தார்கள். ஆனால் அஸ்கிரிய பீடம் கோட்டபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்குமாறு சிங்கள மக்களிடம் குறிப்பிடவில்லை. மத தலைவர்கள் அரசியல் மேடைகளுக்கு வருவதில்லை. சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரிடம் மாத்திரமா பேராயர் டீல் வைத்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களிக்குமாறு பேராயர் குறிப்பிடுகிறார்.ஆனால் குண்டுத்தாக்குதல்தாரிகளின் தந்தை மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினர். இந்த கட்சிக்கு வாக்களிக்குமாறு குறிப்பிடும் அளவுக்கு பேராயர் ஏன் தள்ளப்பட்டுள்ளார் என்பதை அறியவில்லை. ஆகவே இவரது கருத்துக்கள் துரதிஷ்டவசமானது.

தலதா மாளிகைக்கு தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் நாங்கள் ஒருபோதும் சிங்களவர்களுக்கு மாத்திரம் வாக்களிக்குமாறு குறிப்பிடவில்லை. ஆகவே உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களை அரசியலுக்காக பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டாம் என்பதை கத்தோலிக்க சபையிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் தலதா மாளிகை தாக்குதல், காத்தான்குடி பள்ளிவாசல் தாக்குதல் என மத தலங்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றன... ஆனால் கோட்டபய ராஜபக்ஷவை மாத்திரமே விமர்சிக்கிறார்கள் ; மஹிந்தானந்த ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் தலதா மாளிகை தாக்குதல், காத்தான்குடி பள்ளிவாசல் தாக்குதல் என மத தலங்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றன... ஆனால் கோட்டபய ராஜபக்ஷவை மாத்திரமே விமர்சிக்கிறார்கள் ;  மஹிந்தானந்த Reviewed by Madawala News on April 27, 2024 Rating: 5

மனிதர்கள் மட்டுமல்ல.... மிருகமும் சாப்பிட முடியாத அரிசி அரசாங்கத்தால் வழங்கப்பட்டது தொடர்பில் விசாரணை



நாட்டின் சில பகுதிகளுக்கு வழங்கப்பட்ட தரக்குறைவான அரிசி தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (26.04.2024) கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.

சபை நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


“ஏப்ரல் மாதம் முதல் அரிசி வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டத்தை நாங்கள் பாராட்டுகிறோம்.


ஆனால் தேர்வு நடைமுறையில் கடுமையான சிக்கல்கள் உள்ளன. சில இடங்களில் தரமற்ற அரிசி விநியோகம் நடக்கிறது. அவ்வாறானதொரு சம்பவம் ஹாலிஎல பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.


ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றும் ராஜித கீர்த்தி தென்னகோன் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

விநியோகிக்கப்பட்ட அரிசியின் தரத்தை பராமரிக்க வேண்டும். ஏனெனில் இவை நம் நாட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்டவை” என கூறியுள்ளார்..

தகவல் விபரம்....
நேற்று (25) ஹாலிஎல பிரதேசத்தில் ஜய maga திட்டத்தில் வழங்கிய இலவச அரிசியைப் பெற்றுக்கொண்ட நபர் ஒருவர், கெட்டுப்போன, உண்பதற்குத் தகுதியற்ற அரிசி பொதியை பெற்றுக்கொண்டதாகக் கூறி ஹாலிஎல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.


ஹாலிஎல, மெதபிடகம பிரதேசத்தைச் சேர்ந்த எச்.பண்டார என்பவர், அரசாங்கத்தினால் தமக்கு வழங்கப்பட்ட அரிசி பாவனைக்குத் தகுதியற்றது எனக் கூறி, தனக்குக் கிடைத்த அரிசியில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு, ஹாலிஎல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குச் சென்று, இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஹாலியால பொதுச் சுகாதார பரிசோதகர் திரு.தனுஜய பிரதீப் தெரிவிக்கையில், ஹாலியால மெதபிடகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் ஹாலியால சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு வந்து 10 கிலோ அரிசி அடங்கிய பையில் அரிசி இருந்ததாக முறைப்பாடு செய்துள்ளார். அரசாங்கம் கெட்டுப்போனது மற்றும் நுகர்வுக்கு தகுதியற்றது என்பது தொடர்பான விசாரணைகள் செய்யப்படுகின்றன.


மனிதர்கள் மட்டுமல்ல.... மிருகமும் சாப்பிட முடியாத அரிசி அரசாங்கத்தால் வழங்கப்பட்டது தொடர்பில் விசாரணை மனிதர்கள் மட்டுமல்ல....  மிருகமும் சாப்பிட முடியாத அரிசி அரசாங்கத்தால் வழங்கப்பட்டது தொடர்பில் விசாரணை Reviewed by Madawala News on April 26, 2024 Rating: 5

கர்ப்பம் தரித்த சிறுமி ஒருவர், உடல் நீதியான உறவில் ஈடுபட்ட அறிகுறிகள் எதுவும் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்ததை அடுத்து அவர், மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட்ட சம்பவம் பதிவு.



 உடலுறவு கொள்ளாமல் கர்ப்பம் தரித்த 13 வயது சிறுமி மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.


குருணாகல், ஹெட்டிப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியே இவ்வாறு கர்ப்பம் தரித்துள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் வைத்தியர்கள் விசாரணைகளை மேற்கொண்ட போதும் இது தொடர்பில் எந்தவித தகவலும் கிடைக்காததால் சிறுமி மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.


இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வயிற்று வலியினால் அவதிப்பட்டுள்ள நிலையில் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  பின்னர் வைத்திய பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.


இந்நிலையில், மேலதிக பரிசோதனைகளில் பாதிக்கப்பட்ட சிறுமி உடலுறவு கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கர்ப்பம் தரித்த சிறுமி ஒருவர், உடல் நீதியான உறவில் ஈடுபட்ட அறிகுறிகள் எதுவும் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்ததை அடுத்து அவர், மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட்ட சம்பவம் பதிவு. கர்ப்பம் தரித்த சிறுமி ஒருவர், உடல் நீதியான உறவில் ஈடுபட்ட அறிகுறிகள் எதுவும் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்ததை அடுத்து அவர்,  மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட்ட சம்பவம் பதிவு. Reviewed by Madawala News on April 26, 2024 Rating: 5

மகளையும், மகளின் நண்பியையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்தை மீது பிரதேச மக்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து குறிப்பிட்ட தந்தை கைது.



 தனது பன்னிரெண்டு வயது மகளையும்  மகளின் 11 வயது தோழியையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர்.


பிரதேச  மக்கள் வழங்கிய அறிவித்தலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர்.


சந்தேக நபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மகளையும், மகளின் நண்பியையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்தை மீது பிரதேச மக்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து குறிப்பிட்ட தந்தை கைது. மகளையும், மகளின் நண்பியையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்தை மீது பிரதேச மக்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து குறிப்பிட்ட தந்தை கைது. Reviewed by Madawala News on April 26, 2024 Rating: 5

பாகிஸ்தான் பெண் ஆயிஷா ரஷானுக்கு சென்னை மருத்துவமனையில் இந்திய நபரின் இதயம் பொருத்தப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் பதிவு.



 இதயம் செயலிழந்த பாகிஸ்தான் பெண்ணுக்கு இந்தியரின் இதயம் பொருத்தபட்டுள்ள  சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான அறுவை சிகிச்சை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது.


பாகிஸ்தானை சேர்ந்த 19 வயது பெண் ஆயிஷா ரஷான். இவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு, இதய செயலிழப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காகக் கடந்த 2014ல் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு ஆயிஷாவும், அவரின் குடும்பத்தினரும் வந்துள்ளனர். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆயிஷாவை பரிசோதித்த மருத்துவர்கள், இதய செயலிழப்பை சரி செய்யப் பொருத்தப்பட்டுள்ள இதய பம்ப் வால்வு ஒன்றில் கசிவு ஏற்பட்டுள்ளதால் கட்டாயம் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், இதற்குச் சுமார் 35 லட்சம் ரூபாய் செலவாகும் எனவும் கூறியுள்ளனர்.

இவ்வளவு பணத்திற்கு என்ன செய்வது எனத் தெரியாமல் விழித்துக்கொண்டிருந்த ஆயிஷாவின் குடும்பத்திற்கு ஐஸ்வர்யம் அறக்கட்டளை மூலமாக மருத்துவக்குழுெஉதவி பெற்றுக்கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், ஆயிஷாவிற்கு டில்லியில் மூளைச்சாவு அடைந்த ஒருவரிடமிருந்து பெறப்பட்ட இதயமும் வரவழைக்கப்பட்டது. தேவையான பணமும், இதயமும் கிடைத்ததை அடுத்து, ஆயிஷாவிற்கு சென்னை தனியார் மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.


இது தொடர்பாக ஆயிஷாவின் தாய் சனோபர் கூறுகையில், ”வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவுடன் ஒப்பிடுகையில், பாகிஸ்தானில் நல்ல மருத்துவ வசதிகள் இல்லை. பாக். கில் மாற்று அறுவை சிகிச்சைக்கான வசதிகள் இல்லையென மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தியாவில் நாங்கள் நட்பாக உணர்கிறோம். இந்திய அரசு மற்றும் இந்திய மருத்துவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.

பாகிஸ்தான் பெண் ஆயிஷா ரஷானுக்கு சென்னை மருத்துவமனையில் இந்திய நபரின் இதயம் பொருத்தப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் பதிவு. பாகிஸ்தான் பெண் ஆயிஷா ரஷானுக்கு சென்னை மருத்துவமனையில் இந்திய நபரின் இதயம் பொருத்தப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் பதிவு. Reviewed by Madawala News on April 26, 2024 Rating: 5

வீடொன்றில் இருந்து திருடப்பட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான 60 பவுண் நகைகள் அதே வீட்டின் கூரைப்பகுதியின் கீழ் இருந்து மீட்பு.



வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதாபின் வீட்டில் திருடப்பட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான 60 பவுண் நகைகள் அவரது வீட்டு கூரையில் இருந்து நேற்று (25) மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.


புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினரான வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதா அவர்களின் கோவில்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பகல் 60 பவுண் நகையும், கடவுச் சீட்டு ஒன்றும் திருடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளரால் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.


குறித்த முறைப்பாட்டையடுத்து வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். குறித்த விசாரணைகளின் போது அவர்களது வீட்டில் இருந்த CCTV கமராக்களும் காணாமல் போயிருந்தமை தெரியவந்தது.


விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் திருடப்பட்ட குறித்த வீட்டின் கூரைப்பகுதியில் கீழ் சூட்சுமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 60 பவுண் நகைகளும் மீட்டுள்ளதுடன், கடவுச்சீட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இச்சம்பவம் தொடர்பில் வீட்டில் நின்றவர்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்து தங்கியிருந்த அவர்களது உறவினர் ஆகியோர் பொலிஸாரால் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நகைகள் மீட்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் உள்ளதுடன் அதனை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


வீடொன்றில் இருந்து திருடப்பட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான 60 பவுண் நகைகள் அதே வீட்டின் கூரைப்பகுதியின் கீழ் இருந்து மீட்பு. வீடொன்றில் இருந்து திருடப்பட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான 60 பவுண் நகைகள் அதே வீட்டின் கூரைப்பகுதியின் கீழ் இருந்து மீட்பு. Reviewed by Madawala News on April 26, 2024 Rating: 5

கொழும்பு - கொத்தட்டுவ பிரதேசத்தில் ரம்மியமான சூழலில் அமைந்துள்ள வீடு விற்பனைக்கு



House for sale
Ambagaha junction
Gothatuwa
(100 MTR Distance to Awissawella road )

6 perches
2 stories
2 units
2 stories

Ground floor
Parking slot
Large hall
3 large bedrooms
Kitchen
Bathroom


1st floor
2 way balcony
Large living hall
Dining area
2 large bedrooms
1 bathroom

Masjid, Madrasa, Tuition, Montessori, food city, Restaurant in walking distance

Calm & Decent place

230 lakhs (selling due to migration)

Ifham 0778823444




கொழும்பு - கொத்தட்டுவ பிரதேசத்தில் ரம்மியமான சூழலில் அமைந்துள்ள வீடு விற்பனைக்கு கொழும்பு - கொத்தட்டுவ பிரதேசத்தில் ரம்மியமான சூழலில் அமைந்துள்ள வீடு விற்பனைக்கு Reviewed by Madawala News on April 26, 2024 Rating: 5

தேடப்பட்டு வரும் இந்த 5 பேர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையிடம் தெரிவிக்கிமாறு வேண்டுகோள்.



கல்பிட்டியில் 37 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்கள் ஐவரை கைது செய்ய இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.


கடந்த வருடம் நவம்பர் மாதம் கல்பிட்டி பிரதேசத்தில் நபர் ஒருவரை கடத்தி 37 கிலோ தங்கத்தை திருடிய சந்தேகநபர்கள் தேடப்பட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


கல்பிட்டி நீதவான் நீதிமன்றத்தினால் பெயரிடப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 5 பேரும் தமது வீடுகளை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாரை 071 8591763 அல்லது 071 8594916 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
தேடப்பட்டு வரும் இந்த 5 பேர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையிடம் தெரிவிக்கிமாறு வேண்டுகோள். தேடப்பட்டு வரும் இந்த 5 பேர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையிடம் தெரிவிக்கிமாறு வேண்டுகோள். Reviewed by Madawala News on April 26, 2024 Rating: 5

ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை சமூக ஊடகங்கள் - இணையத்தளங்களில் பதிவேற்றுபவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய காவல்துறை விசேட நடவடிக்கை



18 வயதிற்கு குறைந்த ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை சமூக ஊடகங்கள் அல்லது இணையத்தளங்களில் பதிவேற்றுபவர்களை அடையாளங் காண்பதற்காக காவல்துறை விசேட நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் சிறார்களுடன் தொடர்புடைய புகைப்படங்களை வெளியிட்ட 10 சம்பவங்கள் பதிவாகின.

இதன்படி, கூகுள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கைதானவர்கள் 20 வயதிற்கும் குறைவானவர்கள் என்றும் அவர்கள் 10 வயதிற்கும் குறைவான பாடசாலை செல்லும் மாணவிகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தளங்களில் தரவேற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை சமூக ஊடகங்கள் - இணையத்தளங்களில் பதிவேற்றுபவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய காவல்துறை விசேட நடவடிக்கை ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை சமூக ஊடகங்கள் - இணையத்தளங்களில் பதிவேற்றுபவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய காவல்துறை விசேட நடவடிக்கை Reviewed by Madawala News on April 26, 2024 Rating: 5

இராணுவ வாகனம் லொறியுடன் மோதியதில் இராணுவ சார்ஜன்ட் பலி - 9 பேர் காயம்



மாங்குளம் வசந்தநகர் சந்தியில் இராணுவ வாகனமொன்றும் லொறியும் மோதிய விபத்தில் இராணுவ சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்ததுடன் 9 சிப்பாய்கள் காயமடைந்துள்ளனர்.
இராணுவ வாகனம் லொறியுடன் மோதியதில் இராணுவ சார்ஜன்ட் பலி - 9 பேர் காயம் இராணுவ வாகனம் லொறியுடன் மோதியதில் இராணுவ சார்ஜன்ட் பலி - 9 பேர் காயம் Reviewed by Madawala News on April 26, 2024 Rating: 5

இந்த வருடம் அரசாங்கம் மாறப் போகின்றது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் - இல்லை..... அரசாங்கம் அப்படியே இருக்கும். இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் மட்டுமே நடக்கும். ; பிரசன்ன


                                                                                                 

Ø  சில அரச அதிகாரிகளின் தவறான முடிவுகளால், அரசுக்கும், மக்களுக்கும் பெரும் நஷ்டம்...

Ø  சில அரச நிறுவனங்களில் அதிகாரிகளின் அதிகாரத்துவம் காரணமாக அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன...


Ø  இந்த ஆண்டு அரசாங்கத்தில் மாற்றம் இல்லை...


- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க -


சில அரச அதிகாரிகளின் தவறான முடிவுகளினால் அரசாங்கமும் மக்களும் பாரிய நட்டத்தை எதிர்கொள்வதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


அதிகாரிகள் செய்யும் இவ்வாறான தவறுகளினால் இறுதியில் மக்களால் குற்றம் சுமத்தப்படுவது அரசியல்வாதிகள் தான் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


சில அரச நிறுவனங்களில் அதிகாரிகளின் அதிகாரத்துவம் காரணமாக அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


கம்பஹா மாநகரசபையில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நேற்று (24) கம்பஹா மாநகரசபையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கம்பஹா மாநகரசபையினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.


2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பராமரிப்புத் திட்டங்களின் நிலை குறித்து கம்பஹா மாநகர ஆணையாளரிடம் அமைச்சர் கேட்டறிந்தார். 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 33 பராமரிப்புத் திட்டங்களில் தற்போது 15 பணிகள் நிறைவடைந்துள்ளதாக மாநகர ஆணையாளர் தெரிவித்தார். 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பராமரிப்பு வேலைத்திட்டங்கள் இவ்வருடம் நான்கு மாதங்களாகியும் நிறைவு செய்யப்படவில்லை என அமைச்சர் அதிருப்தி தெரிவித்தார்.


எஞ்சிய பராமரிப்பு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் திகதி மற்றும் நிறைவு செய்யும் திகதி எப்போது என்பதற்கான அறிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் வழங்குமாறும், அந்த பராமரிப்புத் திட்டத்தை ஜூன் மாத இறுதிக்குள் முடிக்குமாறும் கம்பஹா மாநகர ஆணையாளருக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.


அதிகாரிகளின் பலவீனமே இத்திட்டங்கள் தாமதமாவதற்கு காரணம் என்று கூறிய அமைச்சர், இதுபோன்ற அதிகாரிகளை நீக்கிவிட்டு, பணியாற்றக்கூடிய அதிகாரிகளை கொண்டு பணிகளை தொடர தயார் என்றார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் கூறியதாவது:


கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பராமரிப்பு பணிகள் இன்று வரை முடிக்கப்படவில்லை. இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்தும் எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.


நகரசபையில் ஐந்து டிராக்டர்கள் உள்ளன. இன்று ஒரு டிராக்டர் மட்டுமே இயங்குவதாக கூறப்படுகிறது. மீதமுள்ள நான்கு டிராக்டர்களை ஏன் இது வரை பெற முடியவில்லை?


கம்பஹாவில் உள்ள ஏனைய உள்ளூராட்சி நிறுவனங்களில் இவ்வாறான பிரச்சினைகள் வருவதில்லை. கம்பஹா பிரதேச சபை, மினுவாங்கொடை நகர சபை, உள்ளுராட்சி சபையின் பணிகள் முறையாக நடைபெற்று வருகின்றன. அபிவிருத்தித் திட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. ஆனால் கம்பஹா நகர சபையின் பணிகள் எப்போதுமே தாமதமாகவே நடைபெறுகின்றன. அதிகாரிகளின் பலவீனமே இதற்கு காரணம். இதில் அதிகாரிகள் வேண்டுமென்றே காலதாமதம் செய்கின்றனர்.


நகரசபை எடுக்கும் முடிவுகளை முறையாக செயற்படுத்த வேண்டும். அதிகாரிகள் வேலை செய்யாததால், மக்கள் எங்களுக்கு ஏசுகின்றனர்.


அதிகாரிகளின் தாமதத்தால் அரசுக்கு எவ்வளவு இழப்பு? ஒருங்கிணைப்புக் குழுவின் முடிவுகளுக்கு அதிகாரிகள் செவிசாய்ப்பதில்லை. எடுக்கும் முடிவுகள் வெறும் பேச்சில் எடுக்கப்பட்ட முடிவல்ல. முடிவு செய்யப்பட்ட ஆவணங்கள் உள்ளன. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஒப்புதல் அளித்தவுடன், செயல்படுத்த வேண்டிய திட்டங்களை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு அனுப்புகிறோம். மதிப்பீடு செய்து தயார் நிலையில் வைக்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு தான். அனுமதி கிடைத்தவுடன் வேலைகளை ஆரம்பிக்க முடியும். இங்குள்ள மிகப்பெரிய தவறு வேலை செய்யும் போது ஒருங்கிணைப்பில் உள்ள சிக்கல். அவை சரி செய்யப்பட வேண்டும்.

அதிகாரிகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அரசாங்கம் மாறப் போகின்றது என்று. இல்லை அரசாங்கம் அப்படியே இருக்கும். இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் மட்டுமே நடக்கும்.


இலங்கையின் அனைத்து ஆளுநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், கம்பஹா மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கடின உழைப்பால் இன்று நடந்துள்ளது. சில அதிகாரிகள் வேண்டுமென்றே காலதாமதம் செய்கின்றனர். முடியாதவர்களை நீக்கிவிட்டு, வேலை செய்யக்கூடிய ஆட்களை போடச் சொல்கிறேன். நாம் பிரயாணம் செல்லும்போது, வேலை செய்யக்கூடியவர்கள் குழுவாக இருக்க வேண்டும்.


சில அரச நிறுவனங்களுக்குள் அரசியல்வாதிகள் நுழைய முடியாது என்ற கருத்து நிலவுகிறது. அப்படிச் செய்ய முடியாது. ஏனெனில் ஒரு அரசியல்வாதி இந்த நாட்டின் குடிமகன். இன்றைய உள்ளூராட்சி நிறுவனங்களில் அரசியல் அதிகாரம் இல்லை, எனவே அதிகாரத்துவம் உருவாக்கப்பட்டு வேலை செய்வதில்லை. பணத்தின் பின்னால் மட்டும் தான் ஓடுகிறார்கள். அரசியல் அதிகாரம் பொதுமக்களின் சார்பாக பேசியது இன்று நடக்கவில்லை.


நாங்கள் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளோம், மேலும் இந்த அமைப்பை விரைவுபடுத்தி திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாகும்.


இந்நிகழ்வில் கம்பஹா மாநகர சபையின் முன்னாள் மேயர் எரங்க சேனாநாயக்க, மேல்மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் என்.பி.ஆர்.வி.பெர்னாண்டோ, கம்பஹா மாநகர ஆணையாளர் சுலோச்சனா பாலசூரிய, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் லக்ஷ்மன் குணவர்தன, முன்னாள் நகர சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த வருடம் அரசாங்கம் மாறப் போகின்றது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் - இல்லை..... அரசாங்கம் அப்படியே இருக்கும். இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் மட்டுமே நடக்கும். ; பிரசன்ன இந்த வருடம் அரசாங்கம் மாறப் போகின்றது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் -  இல்லை..... அரசாங்கம் அப்படியே இருக்கும். இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் மட்டுமே நடக்கும். ; பிரசன்ன Reviewed by Madawala News on April 26, 2024 Rating: 5

மலையகத்தின் சில அரசியல் தலைவர்கள் மீண்டும் எமது காதுகளில் பூச்சுத்த நினைக்கின்றார்கள் , அது வெறும் பகற்கனவாகும்”



யு. சி. எம். சி. மற்றும் உமேடா தலைமைகள் இணைந்து கண்டனம் தெரிவிப்பு ! 


மேற்படி விடயமாக மலையக முஸ்லிம் சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் பாரியதொரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இது விடயமாக கடந்த சனிக்கிழமை பதுளை பாத்திமா வழிகாட்டல் மையத்தினூடாக மலையக முஸ்லிம் கவுன்சில் (UCMC) மற்றும் உமேடா ஆகிய சிவில் அமைப்புகள் இணைந்து ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்.


 இக்கூட்டத்தில், கூட்ட நோக்கத்தை விளக்கும் நோக்கில் கருத்துரைத்த ஏ எம் எம் முஸம்மில் அவர்கள் உரை நிகழ்த்தும் போது தெரிவித்ததாவது , 

  
“ மலையக தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு ஆசிரிய உதவியாளர்களை நியமிப்பது சமபந்தமாக கடந்த 2024/01/24 ந் திகதி அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது. 


இது விடயமாக கல்வியமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா அவர்களின் கையொப்பத்துடன் கடந்த 2024/02/15ந் திகதி  மாகாண செயலாளர்களுக்கு அனுப்பிவைக்கப்  பட்டுள்ள கடிதத்தில்  மேற்படி விடயம் தொடர்பான விதிமுறைகள் மற்றும் விளக்கங்கள் தெரிவிக்கப் பட்டுள்ளது.



குறித்த சுற்றுநிருபத்தில் முதலாவது தெரிவிக்கப் பட்டுள்ள விடயம் பின்வருமாறு அமைந்துள்ளது. “ மலையக பெருந் தோட்ட பாடசாலைகளில் நீண்ட நாட்களாக நிலவி வரும் ஆசிரிய பற்றாக் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் , இம்முறைக்கு மாத்திரம் வரையறை செய்யப்பட்டு எதிர்காலத்தில் இந்த நடைமுறையை பின்பற்றுவதற்கு இம்முறைமையை உதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது எனும் நிபந்தனைக்கு உட்பட்டு பாடசாலையில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களுக்கு அமைய இந்த நியமனங்கள் வழங்கப் படவேண்டும்” என்று குறிப்பிடப் பட்டுள்ளது. “ 

என்று குறிப்பிடப் பட்டுள்ளதாக கூறி குறித்த கடிதப் பிரதியை ஆதாரமாக காட்டி விளக்கப் படுத்தினார். க பொ த (உ/த) சித்தியடைந்த மற்றும் பட்டதாரிகளான அபேட்சகர்கள் மத்தியில் தொடர்ந்தும் உரை நிகழ்த்திய முன்னாள் அதிபர் முஸம்மில் அவர்கள் மேலும் கூறியதாவது,


குறித்த கடிதத்தில் “இம்முறைக்கு மாத்திரம் வரையறை செய்யப்பட்டு எதிர்காலத்தில் இந்த நடைமுறையை பின்பற்றுவதற்கு இம்முறைமையை உதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது எனும் நிபந்தனைக்கு உட்பட்டு பாடசாலையில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களுக்கு அமைய இந்த நியமனங்கள் வழங்கப் படவேண்டும்” என்று குறிப்பிட்டுக் கூற வேண்டிய அவசியம் என்ன ? . 


இது ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அமையும் ஓர் நியமனம் அல்ல . இதில் எங்கோ நெறி பிறழ்வு ஏற்பட்டுள்ளது. எனும் விடயம் புலப்படுகின்றதல்லவா ? 
 

     மலையக தமிழ் மொழி மூல ஆசிரிய நியமனங்கள் வழங்கப் படும் போது ஒவ்வொரு முறையும் முஸ்லிம்களை புறக்கணிக்கும் வகையில் பல உக்திகளை இவர்கள் கையாள்கின்றார்கள். 2005 ம் ஆண்டில் இவ்வாறு நியமனங்கள் வழங்கப் படும் போது அதற்கான அடிப்படை தகுதியாக சமயப் பாடத்தில் இந்து சமயம் அல்லது கிறிஸ்தவ சமய பாடங்களுக்கு திறமை சித்தி எடுத்திருக்க வேண்டும் என்று நிபந்தனை வித்திக்கப் பட்டது . ஆகவே இஸ்லாம் பாடத்தை சமய பாடமாக எடுத்த முஸ்லிம் அபேட்சகர்கள் இதன் மூலம் புறக்கணிக்கப் பட்டார்கள். இதற்கெதிராக நாங்கள் நீதிமன்ற நடவடிக்கைகள் மேட்கொண்டதால் அறுநூறு முஸ்லிம் அபேட்சகர்களுக்கும் நியமனம் வழங்க வேண்டிய நிலை உருவானது.
2005ம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் முஸ்லிம்களை புறம் தள்ள நினைத்து அதற்கெதிராக நீதிமன்றம் சென்று போராடியதால் கிடைக்கப் பெற்ற 6௦௦ ஆசிரிய நியமனங்களில் ஊவா மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு கிடைக்கப் பெற்ற 190 ஆசிரியர்கள் ...  
 

    அதே போல் தான் 2014ம் ஆண்டும் இவ்வகையில் மலையக தமிழ் மொழிமூல ஆசிரிய நியமனம் ஒன்று வழங்கப் பட்டது. அதிலும் முஸ்லிம் அபேட்சகர்களை ஓரங்கட்டும் சில விதிமுறைகளை மேட்கொண்டார்கள். இம்முறை இவர்கள் குறிப்பிடுவது போல் பாடசாலைகளில்  நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்பும் வகையில் ஆசிரிய நியமனங்கள் வழங்கப் படுவதாக கூறி நூறு வீதம் பெருந் தோட்ட தமிழ் பாடசாலைகளை மாத்திரம் தெரிவு செய்து அதை வர்த்தமானியில் வெளியிட்டார்கள். 


இதில் ஒரு முஸ்லிம் பாடசாலையும் உள்வாங்கப் பட்டிருக்க வில்லை. இந்த அநீதிக்கு எதிராகவும் நாம் அப்போது குரல் எழுப்பினோம் ,  முன்னாள் அமைச்சர்களான ரவுப் ஹகீம் மற்றும் ரிஷாத் பதியுத்தீன் ஆகியோருடன் இணைத்துக் கொண்டு, அப்போதைய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களுடன் ஒரு நேரடி சந்திப்பில் இது விடயமாக நீண்டதொரு கலந்துரையாடலை நடத்தினோம் . 


அப்போது கல்விச் செயலாளராக இருந்த ராஜமநோகரி புலேந்திரன் அவர்களை நேரடியாக அழைத்த கல்வியமைச்சர் இது பற்றியா விளக்கத்தை கேட்டார். அப்போது விளக்கமளித்த கல்விச் , “ செயலாளர்குறித்த இந்த நியமனங்கள் பெருந் தோட்ட தமிழ் பாடசாலைகளுக்கு மாத்திரம் என்று மட்டுபடுத்தி தான் அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது.



( 2014ம் ஆண்டு அப்போதைய கல்வ்யமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களுடன்  ரவுப் ஹகீம் ரிஷாத் பதியுத்தீன் மற்றும் மலையக முஸ்லிம் கவுன்சில் உறுப்பினர்கள் குறித்த ஆசிரிய நியமனங்கள் விடயமாக கலந்துரையாடிய போது. ) 
இதில் நகர்புற பாடசாலைகளுக்கு வாய்ப்பளிக்க முடியாது என்று விளக்கமளித்தார். அபோது தோட்டப் புற மற்றும் நகர்புற பாடசாலைகளை பிருக்கும் அளவு கோல் எது ? ஏற்றுக் கொள்ளப் பட்ட அவ்வாரனதோர் பிரிவுக் கோடு கல்வியமைச்சின்  நடைமுறையில் உள்ளதா ?  என்று நாம் மேலும் வினவி நின்றோம். முறையான தெளிவை தர முடியாது தடுமாறிய செயலாளரிடம் நாம் மேலும் வினவினோம் , “ தெல் தோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயம் தேயிலை மரங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு முஸ்லிம் பாடசாலை . குறித்த இந்த பாடசாலையிலும் கடுமையான ஆசிரிய பற்றாக் குறைகள் நிலவுகின்றன. 


ஆகவே இந்த நியமனகளில் எப்படி அந்த முஸ்லிம் பாடசாலை விடுபடலாம்” ? . என்று கேள்வி எழுப்பினோம் .


 அதற்கும் முறையானதொரு தெளிவை தர தவறினார் , கல்விச் செயலாளர். உடனடியாக பதிலளித்த கல்வியமைச்சர் உண்மையில் முஸ்லிம் அபேட்சகர்களுக்கு இவ்விடத்தில் ஒரு அநீதி நடந்துள்ளது. ஆகவே முஸ்லிம்களுக்கும் நாம் 15௦௦ நியமனங்களை வழங்க உடனடி நடவடிக்கைகளை மேட்கொல்வோம் என்று தமது அபிப்ராயத்தை வெளியிட்டார் கல்வியமைச்சர். இம்முடிவுக்கு ஒப்புக் கொண்ட முஸ்லிம் அரசியல் தலைமைகள் குறித்த நூறு நாள் அரசாங்க களத்தில் அதை நடைமுறை சாத்தியமாக்குவதில் வழமை போல் தமது இயலாமையை பறைசாற்றினார்கள். 
ஆனால் இம்முறையும் முஸ்லிம்களை ஒதுக்கிவிட்டு இந்த நியமனங்கள் வழங்கப் படுமாயின் அதை வெறும் பார்வையாளர்களாக பார்த்துக் கொண்டு சும்மா இருந்து விட மாட்டோம் என்றும கூறினார். 



இக் கூட்டத்தில் அடுத்ததாக உரை நிகழ்த்திய உமேடாவின் செயலாளர் ஏ எம் நவாஸ் ஆசிரியர் அவர்கள் கூறுகையில், ஊவா வில் நாம் அரசியல் அனாதைகள் எனும் விடயம் காலத்திற்குக் காலம் நிரூபணம் ஆகிக் கொண்டே இருக்கின்றது. அநேகமாக எமது பள்ளிவாயில்களை தேர்வு செய்து அங்கொன்றும் இங்கொன்றுமாக பத்தாயிரம் பதினைந்தாயிரம் என்று சிறு தொகைகளை பங்கிடும் ஒரு சில அரசியல் வாதிகள் தேர்தல் காலங்களில் நான் அந்த பள்ளிக்கு இவ்வலவு கொடுத்தேன் , இந்த பள்ளிக்கு இவ்வலவு கொடுத்தேன் என்று பட்டியல் போட்டு சொல்வார்கள் . நாங்கள் முஸ்லிம்களின் வாக்குகளால் தான் இம்முறை பாராளுமன்றத்திட்கு தெரிவானோம் என்றும் சொல்வார்கள் . 


ஆனால் வளங்களை பங்கீடு செய்யும் போது எமது முஸ்லிம் பாடசாலைகளை வசதியாக மறந்து விடுவார்கள் அண்மையில் கூட பாடசாலை மாணவர்களுக்கு சீருடை பங்கிடும் போது எந்தவொரு முஸ்லிம் பாடசாலையும் உள்வாங்கப் படவில்லை. ஆனால் ஒரு சில தமிழ் பாடசாலைகளுக்கு மூன்று நான்கு எனும் தொகையில் பங்கீடு செய்தார்கள் . குறிப்பாக பதுளை தமிழ் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு மும்மூன்று சோடி வெள்ளாடைகள் வழங்கப் பட்டிருந்தன . 


அதில் ஆண்பிள்ளைகளுக்கு வழங்கப் பட வேண்டிய சீருடைகளும் இருந்துள்ளன. அவற்றை பெற்றுக் கொண்ட ஒரு சில பெண்மாணவிகள் சில கடைகளுக்கு சென்று ஆண்பிள்ளைகளின் சீருடைக்கு பதிலாக பெண்பிள்ளைகளின் சீருடைகளை மாற்றி எடுக்க முயன்றதாகவும் அறிய முடிகின்றது. 


இது விடயங்கள் பற்றி அமைச்சரிடம் விசாரித்தபோது கடந்த முறை வழங்கப் பட்ட சீருடை தொகுதியில் எஞ்சியிருந்த வற்றையே இவ்வாறு தாம் பங்கீடு செய்ததாக விளக்கமளித்துள்ளார் எமது கல்வி ராஜாங்க அமைச்சர். நாம் அவரிடம் கேட்கின்றோம் அவ்வாறு எந்தவொரு விதிமுறையையும் பின்பற்றாமல் இவ்வாறு தாம் நினைத்தவாறு சீருடை பங்கீடு செய்வதற்கு அமைச்சர் வீட்டு சொத்தையா அமைச்சர் பங்கீடு செய்தார் ? என்று நாம் அவரிடம் கேட்கின்றோம். 
இவ்வாறு இவர்கள் தமக்கு கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை வாய்ப்பை பயன் படுத்தி முஸ்லிம்களை ஓரங்கட்டி ஒதுக்கி வைப்பதை நாம் தொடர்ந்தும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். 



ஆகவே  வழங்கப் படப் போகும் இந்த நியமனகளில் முஸ்லிம்களுக்கும் இத்தனை நியமனகள் வழங்கப் படவேண்டும் என்ற நிலைபாட்டில் இருந்து கொண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வில்லை என்று நாம் அறிந்துக்கொண்டால் குறித்த இந்த அநீதிக் கெதிராக ஜனநாயக ரீதியிலான அத்தனை முயற்சிகளை மேற்கொண்டு எமக்கான நியாயத்தை நாம் பெற்றுக் கொள்வோம் . என்று கூறினார் !  இக்கூட்டத்தில் மலையக முஸ்லிம் கவுன்சில் தலைவர் எம் பி செய்யத் முஹம்மத் அவர்களும், உமேடாவின் உதவித் தலைவர் அல் ஹாஜ் ஏ ஏ ஜுனைதீன் அவர்களும் ப/ ராசீக் பரீத் மு ம வி அதிபர் ஜனாப் எம் ஏ சி எம் முனவவ்வர் அவர்களும் கருத்துக்களை தெரிவித்தார்கள் . குறித்த நியமனங்களுக்காக விண்ணப்பிக்கக் கூடிய தகுதிபெற்ற அபேட்சகர்களும் தத்தமது ஆட்சேபனங்களை தெரிவித்து கருத்துரைத்தார்கள் .  



இவ்விடயம் தொடர்பாக வெலிமடை , மொனராகலை , பதுளை போன்ற பிரதேச ங்களிலும்  மேலும் பல தெளிவூட்டல் கூட்டங்களை நடத்தி முஸ்லிம் தரப்பில் நியாயம் பெறுவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் என்றும் தீர்மானிக்கப் பட்டு கூட்டம் முடிவுற்றது.   

- உம்மு ஹைதம் -       


                            
மலையகத்தின் சில அரசியல் தலைவர்கள் மீண்டும் எமது காதுகளில் பூச்சுத்த நினைக்கின்றார்கள் , அது வெறும் பகற்கனவாகும்” மலையகத்தின் சில அரசியல் தலைவர்கள் மீண்டும் எமது காதுகளில் பூச்சுத்த நினைக்கின்றார்கள் , அது வெறும் பகற்கனவாகும்” Reviewed by Madawala News on April 26, 2024 Rating: 5

உயிரை மாய்த்துக்கொண்ட இளம் ஆசிரியை - பொலிஸார் விசாரணை



பதுளை - லுணுகலை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பதுளை - பிட்டமாருவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றிய ஆசிரியை ஒருவரே இவ்வாறு தன் உயிரை மாய்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.


இவர் குறித்த பாடசாலையின் ஆசிரியை விடுதியில் வசித்து வந்துள்ள நிலையில், இவர் நேற்று (24) பாடசாலையில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பின் விடுதிக்குச் சென்றுள்ளார்.


இந்நிலையில் ஆசிரியை விடுதிக்குச் சென்றவர் மீண்டும் பாடசாலைக்கு திரும்பாததால் அவருடன் கடமையாற்றும் ஏனைய ஆசியைகள் குறித்த விடுத்திக்குச் சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்து கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரை மாய்த்துக்கொண்ட இளம் ஆசிரியை - பொலிஸார் விசாரணை உயிரை மாய்த்துக்கொண்ட இளம் ஆசிரியை - பொலிஸார் விசாரணை Reviewed by Madawala News on April 25, 2024 Rating: 5

பாதாள உலக குற்றச் செயல்களை ஒடுக்க புதிய மோட்டார் சைக்கிள் படையணி அறிமுகம் - பயப்படாமல் ஆயுதங்களை பயன்படுத்துமாறு படையணிக்கு அமைச்சர் உத்தரவு



நாட்டில் பாதாள உலகம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பான நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக இலங்கை காவல்துறை புதிய மோட்டார் சைக்கிள் படையணியை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய படைப்பிரிவுக்கான மோட்டார் சைக்கிள்கள் களுத்துறை, கட்டுகுருந்தவில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) முகாமில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் அவர்களினால் கையளிக்கப்பட்டது.

இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை இல்லாதொழிப்பதே முக்கிய இலக்காகும் என பொலிஸ் அதிகாரிகளிடம் உரையாற்றிய அமைச்சர் அலஸ் கூறினார்.

அதிகாரிகள் தங்கள் ஆயுதங்களை சரியான காரணத்திற்காக பயன்படுத்த பயப்பட வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார், அதிகாரிகள் சரியான நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் தங்கள் ஆதரவை வழங்குவார்கள் என்று கூறினார்.

தற்போதுள்ள படையணிகள் தமது இலக்கை அடைய போதுமானதாக இல்லாவிட்டால் மேலதிக விசேட குழுக்கள் ஈடுபடுத்தப்படும் என அமைச்சர் அலஸ் தெரிவித்துள்ளார்.

“எங்களுக்கு ஒரு இலக்கு உள்ளது. அனைத்து காவல்துறை அதிகாரிகளும் இலக்கு பற்றி அறிந்திருக்கிறார்கள். நான் விரும்புவது இலக்கை அடைய வேண்டும் என்பதுதான். உங்கள் சம்பளம் மற்றும் இதர சலுகைகளை உயர்த்தியுள்ளோம். உங்களிடமிருந்து நான் எதிர்பார்ப்பது எங்களுடைய இலக்கை நோக்கி பாடுபடுவதை மட்டுமே” என்று அவர் மேலும் கூறினார்.
பாதாள உலக குற்றச் செயல்களை ஒடுக்க புதிய மோட்டார் சைக்கிள் படையணி அறிமுகம் - பயப்படாமல் ஆயுதங்களை பயன்படுத்துமாறு படையணிக்கு அமைச்சர் உத்தரவு பாதாள உலக குற்றச் செயல்களை ஒடுக்க புதிய மோட்டார் சைக்கிள் படையணி அறிமுகம் - பயப்படாமல் ஆயுதங்களை பயன்படுத்துமாறு படையணிக்கு அமைச்சர் உத்தரவு Reviewed by Madawala News on April 25, 2024 Rating: 5

இளம் தம்பதிகளும் விவாகரத்தும்.



முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்று முஸ்லிம் இளம் தம்பதிகளிடம் விவாகரத்து அதிகரித்துச் செல்கின்றன. 

இந்த நவீன உலக ஒழுங்கின் முதலாழித்துவ நுகர்வுக்கலாசாரத்தின் பக்கவிளைவுகளினால் எமது இளம் முஸ்லிம் சமுதாயத்தின் நிலை அதோ பரிதாபம். திருமணம் முடிக்க இருக்கும் எமது சகோதர சகோதரிகளின் குடும்ப வாழ்கை பற்றிய இஸ்லாமிய அறிவுரைகளும் , வழிகாட்டல்களும் காலத்தின் இன்றியமையாத தேவை.

எமது சமூகத்தில் இளம் தம்பதிகள் எளிதில் தீர்க்க முதியுமான பிரச்சினைகளுக்கு Qazi court சென்று instant Divorced கேட்க்கும் அளவுக்கு மிகவும் கவலையான நிகழ்வுகள் நடை பெறுவதை பார்க்கிறோம்.

இது அவர்களிடத்தில் குடும்ப வாழ்க்கை பற்றிய போதிய அறிவு, அனுபவங்கள் இல்லாமையும் மற்றும் பெற்றோர்களின் முறையான அறிவுரைகள் இல்லாமையே…!!! என்பது கசப்பான உண்மை.

கணவன் மனைவிக்கிடையில் தோன்றும் பிரச்சினைகளுக்கு சில சமகால conflicts களை பின்வருமாறு கூறலாம்.

1. கணவன் மனைவிக்கிடையே போதிய matured understand இல்லாமை.
2. பெற்றோர்களின் பக்கச் சார்பான அறிவுரைகள்.
3. 3.பெற்றோரகள் தாங்கள் வாழ்நாள் முழுவதிலும் பெற்ற அனுபவங்களை பிள்ளைகளின் ஒளிமயமான எதிர்கால வாழ்க்கைக்கு வழங்காமை. அல்லது பெற்றோர்களின் எதிர்பார்ப்பு வித்தியாசங்கள்.
4. கணவனுக்கு கட்டுப்பட வேண்டிய விதத்தில் கட்டுப்படாமை.
5. குடும்ப ஆதரவின்மை.
6. பொருளாதார அழுத்தம்/ மன அழுத்தம்.
7. உலக ஆசை/மிகை நுகர்வு.
8. பிரயோசனம் இல்லாத வாதங்கள்.
இப்படி அடிக்கொண்டே போகலாம். இவ்வாறான முரண்பாடுகள் வெறுமனே இரு தம்பதிகளுக்கிடையில் மட்டும் சுருங்கி விடுவதில்லை. ஒரு சமூகத்தையே ஆட்டங்கான செய்யும் கொடிய வைரஸாகும். ஏனெனில் சிறந்த சமூகத்தின் அடிப்படை ஆரோக்கியமான குடும்பமாகும். ஆரோக்கியமான பல குடும்பங்கள் நாகரீகமான சமூகத்தை உருவாகின்றது. நாகரீகமான சமூகம் பலத்த சமூக - அரசியல் - பொருளாதார கொள்கைகளை வகுத்து வழி நடாத்தும். நிற்க, மனித வரலாற்றில் தம்பதிகளுக்கிடையில் பிணக்குகள் ஏற்படாத குடும்பங்கள் என்று சொல்லும் அளவுக்கு ஒரு குடும்பம் இருக்கவே முடியாது. ஏனெனில் இந்த உலக வாழ்க்கையானது சோதனைகளும் துன்பங்களும் நிறைந்த களமாகும். இந்த சோதனையில் யார் நல்லமல்கள் செய்து வெற்றி பெறுவாரோ அவரே அல்லாஹ்வின் திருப்பொருத்தை பெற்றவராவார். அதனாலேயே திருமறை பின்வருமாறு கூறுகின்றது.

اۨلَّذِىْ خَلَقَ الْمَوْتَ وَالْحَيٰوةَ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்.
(அல்குர்ஆன் : 67:2)
செயல்களில் மிகவும் அழகானவர் என்பது மேற்கூறிய, தனிநபர் , குடும்ப , சமூக , அரசியல், பொருளாதாரம் என்று பல மட்டங்களிலும் பிரதிபலிப்பவை.

தம்பதிகளிடையே சின்னஞ்சிறு  பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இது தான் யதார்த்தம். பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு வாழ்க்கையின்  தத்துவங்களையும் படிப்பினைகளையும் பக்குவமாக கற்றுக் கொடுப்பது "குடும்ப வாழ்க்கையை பாதுகாத்தல்"  என்கிற அம்சம் இருக்க வேண்டுமே தவிர  பெற்றோர்களின் மாறாத சாராம்சப் பண்பாக அதனை முன்வைத்திட கூடாது. இதுவே சிறந்த வழிகாட்டலாகும்.

ஏனெனில், நாம் (பெற்றோர்கள்) தமது கடந்த கால வாழ்க்கை பற்றி சிறிது நேரம் சிந்தித்தால் அது தெளிவை ஏற்படுத்தும்.

நாளை சிறந்த ஆசிரியர்கள் , வைத்தியர்கள் , பொருளியலாளர்கள் , கணக்காளர்கள், வழக்கறிஞர்கள் சமூகத் தலைவர்கள் என அவர்களின் பொருளாதார நலனிற்காக பல திறமையாளர்களை  உருவாக்குவதற்கு, 
O/L and A/L பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்காக day and night seminars and classes களை இலவசமாகவோ அல்லது கட்டணம் செலுத்தப்பட்டதாகவோ நடத்துகிறோம். 

எனில், சமூகத்தின் முதுகெழும்பான குடும்ப ஸ்திரத்தன்மையை பேணவேண்டிய தம்பதிகளின் வாழ்க்கைக்கான seminars and classes களை ஏன் செய்யகூடாது????
"உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே" (அல்ஹதீஸ்)

சில முக்கியமான வழிகாட்டல்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

1. கணவன் - மனைவி இருவர்களுக்குமிடையில் உள்ள வித்தியாசங்கள்.
Ex: 
Abilities difference 
Thinking patterns difference 
Behaviors difference
Capacities difference
Responsibilities difference 
2. குடும்பம் என்றால் என்ன? அதன் நோக்கம்/ இலக்குகள் என்ன? 
3. முரண்பாடுகள் ஏற்படும் போது இருவரும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? முரண்பாடுகளின் காரணத்தை எவ்வாறு இணங்கான்பது? 
4. பிரச்சினைகளின் போது இஸ்லாம் வழிகாட்டும் தீர்வுகள் யாவை? அவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதற்கான methodologies என்ன? 
5. கணவன் மனைவிகளுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்த சைத்தான் மேற்கொள்ளும் தந்திரமான வழிகளை observation செய்து அவற்றின் கதவுகளை அடைப்பதற்கு அல்லாஹ்வின் உதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து ஆலோசனைகளை வழங்கல். 

மேற்படி திருமணம் முடிக்க இருப்பவர்களுக்கும், இளம் தம்பதிகளுக்கும் இந்த வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
By wafa shazulei
இளம் தம்பதிகளும் விவாகரத்தும். இளம் தம்பதிகளும் விவாகரத்தும். Reviewed by Madawala News on April 25, 2024 Rating: 5

கட்டாரில் இருந்து வந்த தம் மகன் மாவனெல்லை ரஷாட் மாயம் - தேடி அலையும் பெற்றோர்



கட்டாரில் இருந்து வந்த மகனை காணவில்லை!
தேடி அலையும் பெற்றோர்.

கட்டாரில் சுமார் 2 வருட காலம் பணிபுரிந்து விட்டு நாடு திரும்பிய தமது பிள்ளையை காணவில்லையென பெற்றோர் பொலிசாரிடம் முறைப்பாடு செய்து தேடிவருகின்றனர்.


மாவனெல்லை சபியா வத்தையை சேர்ந்த A.S.முஹமட் ரஷாட் எனும் 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.


விமான நிலைய CCTV காணொளிகளின் படி கடந்த மாதம் 28ம் திகதி இலங்கைக்கு வந்த மேற்படி ரஷாட் கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து மாலை 6:35 மணியளவில் வெளியேறி உள்ளார்.

அதன் பின்னர் எந்த வாகனத்தில் யாருடன் எங்கு சென்றார் என்ற விபரம் எதுவும் இதுவரைக்கும் இல்லை.

ரஷாட் பயன்படுத்திய தொலைபேசி இலக்கமும் இணைப்பில் இல்லை.

இதனால் பெற்றோர்கள் பெரும் மன உழைச்சலுக்கு ஆட்பட்டுள்ளனர்.

எனவே படத்தில் காணப்படும் இவர் பற்றிய தகவல்கள் ஏதும் உங்களுக்கு தெரிந்தால் உடனடியாக பெற்றோர்களை தொடர்பு கொண்டு அறியத்தாருங்கள்.

“எங்கள் பிள்ளை எங்கேனும் உயிருடன் இருக்கிறார் என்ற செய்தியாவது கிடைத்தால் எங்களுக்கு அதைவிடவும் நிம்மதியான செய்தி எதுவுமில்லை” என பெற்றோர் அழுகின்றனர்.

எனவே #ரஷாட் பற்றிய தகவல் ஏதேனும் தெரிந்தவர்கள் உடனடியாக கீழ்வரும் இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு வேண்டுகிறோம்.
👇👇
தாய் : 077 114 5645
தந்தை : 077 186 5828


#Almashoora Madawala News #AlmashooraBreakingNews #KEEP_THE_FAITH
கட்டாரில் இருந்து வந்த தம் மகன் மாவனெல்லை ரஷாட் மாயம் - தேடி அலையும் பெற்றோர் கட்டாரில் இருந்து வந்த தம் மகன் மாவனெல்லை ரஷாட் மாயம் - தேடி அலையும் பெற்றோர் Reviewed by Madawala News on April 25, 2024 Rating: 5

என் மீது சுமத்தபட்டுள்ள குற்றச்சாட்டுகளை வன்மையாக மறுக்கிறேன் - ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத் தவறியது அப்போதைய CID தலைமையின் தோல்வியே ஆகும் ; கோட்டபாய ராஜபக்ஷ



 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக கர்தினால் கர்தினால் ரஞ்சித் தம்மீது அண்மையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வியாழன் (25) வன்மையாக மறுத்துள்ளார்.

250 க்கும் மேற்பட்டோரின் உயிர்களை பலிவாங்கியது மற்றும் நூற்றுக்கணக்கானவர்களை காயப்படுத்திய படுகொலையின் 5 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வில் கார்டினல் நான்கு குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக   முன்வைத்தார்.


முதலாவது குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, “ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை என்னிடம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நான் கார்டினலுடன் தொலைபேசியில் பேசவில்லை எனவும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியாது எனவும் நான் உறுதியாகக் கூறுகின்றேன். அது மக்களைக் கைது செய்வதற்கும் என்னுடன் இணைந்த அமைப்புகளைத் தடை செய்வதற்கும் கூட வழிவகுக்கும்.


இரண்டாவது குற்றச்சாட்டைப் பொறுத்தவரை, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் (பிசிஓஐ) அறிக்கையின் முதல் தொகுதியின் நகலை கார்டினாலிடம் ஒப்படைப்பதில் 'தாமதம் இல்லை' என்று ராஜபக்ச வலியுறுத்தினார்.


“ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை 2021 பெப்ரவரி 1ஆம் திகதி என்னிடம் கையளிக்கப்பட்டது. அதனை நானே ஆராய்ந்து சட்டமா அதிபருக்கு அனுப்பிவைத்து, 2021 பெப்ரவரி 23ஆம் திகதி பாராளுமன்ற சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டு 2021 மார்ச் 1ஆம் திகதிக்குள் பிரதிகள் கையளிக்கப்பட்டன. வணக்கத்திற்குரிய மகாநாயக்க தேரர்கள், கர்தினால் மற்றும் கத்தோலிக்க ஆயர்களுக்கு வழங்கப்பட்டது.


ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட பல்வேறு குழுக்கள் மற்றும் ஆணைக்குழுக்கள் வழங்கிய பரிந்துரைகளில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்துமாறு 6 பேர் கொண்ட அமைச்சரவை உபகுழுவிடம் தாம் கேட்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.


ஈஸ்டர் தாக்குதல்களை விசாரிக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை இடமாற்றம் செய்யவில்லை என்றும், விசாரணையை சீர்குலைக்கும் வகையில் மூத்த அதிகாரி ஒருவரை சிறையில் அடைக்கவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மேலும் மறுத்தார்.


ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக கர்தினால் ரஞ்சித் தன்னைத் தொடர்ந்து 'இடைவிடாமல் தாக்கி விமர்சித்து வருவதை' சாடிய ராஜபக்ச, தாக்குதலைத் தடுக்கத் தவறியது அதன் அப்போதைய இயக்குனரின் கீழ் இருந்த சிஐடியின் தோல்வி என்று கூறினார்.





என் மீது சுமத்தபட்டுள்ள குற்றச்சாட்டுகளை வன்மையாக மறுக்கிறேன் - ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத் தவறியது அப்போதைய CID தலைமையின் தோல்வியே ஆகும் ; கோட்டபாய ராஜபக்ஷ என் மீது சுமத்தபட்டுள்ள குற்றச்சாட்டுகளை வன்மையாக மறுக்கிறேன் - ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத் தவறியது அப்போதைய CID தலைமையின் தோல்வியே ஆகும் ; கோட்டபாய ராஜபக்ஷ Reviewed by Madawala News on April 25, 2024 Rating: 5

பழைய நிலைமை மாறிவிட்டது - மீண்டும் 80 ரூபாய்க்கு ஒரு கோப்பை பால் தேநீர் குடிக்கும் வாய்ப்பு மக்களுக்கு கிடைத்துள்ளது என தேசிய நுகர்வோர் முன்னணி தலைவர் அசேல சம்பத் பெருமிதம் .



இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்பு சலுகையை நுகர்வோருக்கு வழங்கும் வகையில் ஒரு கோப்பை பால் தேநீரை 80 ரூபாய்க்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.


அத்துடன், டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் காரணமாக இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பால்மா இறக்குமதியாளர்கள் பால் மாவின் சில்லறை விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.


அண்மைகாலமாக பால்மா விலை உயர்வு காரணமாக, பால் தேநீர் அருந்துவதற்கு ஹோட்டல்களுக்கு வருவதை மக்கள் தவிர்த்து வந்தனர்.


தற்போது அந்த நிலை மாறி, மீண்டும் 80 ரூபாய்க்கு ஒரு கோப்பை பால் தேநீர் குடிக்கும் வாய்ப்பு மக்களுக்கு கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பழைய நிலைமை மாறிவிட்டது - மீண்டும் 80 ரூபாய்க்கு ஒரு கோப்பை பால் தேநீர் குடிக்கும் வாய்ப்பு மக்களுக்கு கிடைத்துள்ளது என தேசிய நுகர்வோர் முன்னணி தலைவர் அசேல சம்பத் பெருமிதம் . பழைய நிலைமை மாறிவிட்டது - மீண்டும் 80 ரூபாய்க்கு ஒரு கோப்பை பால் தேநீர் குடிக்கும் வாய்ப்பு மக்களுக்கு கிடைத்துள்ளது என தேசிய நுகர்வோர் முன்னணி தலைவர் அசேல சம்பத் பெருமிதம் . Reviewed by Madawala News on April 25, 2024 Rating: 5

3,000 கோடி இந்திய ரூபாய் செலவில் கொழும்பில் அமைக்கப்பட்டுவந்த பிரமாண்டமாக சொகுசு நட்சத்திர ஹோட்டல் சற்றுமுன்னர் திறந்து வைக்கப்பட்டது.



கொழும்பு காலிமுகத்திடலிலுக்கு அருகில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ITC ரத்னதீப  அதி சொகுசு நட்சத்திர ஹோட்டல் சற்றுமுன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.


இந்த திட்டத்திற்கு சுமார் 3,000 கோடி இந்திய ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இரண்டு கட்டிடங்களாக கட்டப்பட்டிருக்கும் இந்த ஹோட்டலில் முதல் கட்டிடம் 30 அடுக்கு ஹோட்டலாகவும் இரண்டாவது கட்டிடம் 50 அடுக்குமாடி குடியிருப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தரையிலிருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் இந்த இரண்டு கட்டிடங்களையும் இணைக்கும் ஒரு பாலமும் கட்டப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.



3,000 கோடி இந்திய ரூபாய் செலவில் கொழும்பில் அமைக்கப்பட்டுவந்த பிரமாண்டமாக சொகுசு நட்சத்திர ஹோட்டல் சற்றுமுன்னர் திறந்து வைக்கப்பட்டது.  3,000 கோடி இந்திய ரூபாய் செலவில் கொழும்பில்  அமைக்கப்பட்டுவந்த பிரமாண்டமாக சொகுசு நட்சத்திர ஹோட்டல் சற்றுமுன்னர் திறந்து வைக்கப்பட்டது. Reviewed by Madawala News on April 25, 2024 Rating: 5

உலக நாடுகளில் மிகவும் ஒர் கொடியவர்கள் இஸ்ரவேலர்கள்தான் - இஸ்லாம் உலக நாடுகளில் வளர்ச்சி அடைவதை இவர்களினால் பொறுத்துக் கொள்ள முடியாது ; இலங்கையில் ஈரான் ஜனாதிபதி



( அஷ்ரப் ஏ சமத்)

ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி 24 பி.பகல் கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து அங்கு அவர் உரையில் ......

ஈரான் நாட்டின் புரட்சித் தலைவர் தனது தலைவர் காலம் சென்ற இமாம் கொமெயினி அவர்கள் காலத்தில் 45 வருடங்களுக்கு முன்பே பலஸ்தீன் நாடு விடுவிக்கப்பட வேண்டும் என அன்றே அவர் பலஸ்தீன் பூமிக்கும் அந்த மக்களுக்காக குரல் கொடுத்திருந்தார்

.

இந்த உலக நாடுகளில் மிகவும் ஒர் கொடியவர்களாக இஸ்ரவேலர்களான சியோனிஸ்ச வாதிகள் செயல்படுகின்றார்கள் இவர்களது செயற்பாடுகளை உலகில் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். குழந்தைகள் வயதானவர்களை கொலை செய்து வருகின்றனர். .இதற்காக அமெரிக்கா துனை நிற்கிறது. இஸ்லாம் உலக நாடுகளில் வளர்ச்சி அடைவதை இவர்களினால் பொறுத்துக் கொள்ள முடியாது

ஆனால் எங்களது நாடான ஈரான் இந்த உலகில் நவீன விஞ்ஞான தொழில்நுட்பம் ,பொறியியல், நீர் மின்சாரம் போன்ற துறைகளில் உலகின் மேலோங்கி நிற்கும் நாடாக நாங்கள் முன்னேற்றம் கண்டு வருகிறோம்.

உலகில் 20 நாடுகளுக்கு மேல் எமது நீர் மின்சாரம், பொறியியல் மற்றும் விஞ்ஞானத்துறைகளில் எமது திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஓர் அங்கமாகவே உங்களது நாட்டில் நட்புறவாக இத் திட்டத்தினை அங்குராப்பணம் செய்த திட்டமாகும்.அத்துடன் எங்களது விஞ்ஞான வளர்ச்சிகளை பகிர்ந்து கொண்டுள்ளோம்.

இந்த உலகில் உள்ள முஸ்லிம் நாடுகள் சுதந்திரமாகவும் அவரவர்களது இறையாண்மைக்கு பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் இருத்தல் வேண்டும். ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் இந் நாடுகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க எத்தனிக்கின்றன அதற்காக சில யுக்திகளை கையாண்டு யுத்தங்களையும் நாடுகளுக்கிடையே பிணக்குகளும் ஏற்படுத்துகின்றனர்.

பலஸ்தீன் நாட்டுக்கு அந்த மக்களுக்கு நடைபெறும் அநியாயங்கள் அழிவுகளை அமேரிக்கா ஆதரவளித்து உதவியும் வருகிறது.

ஈரானின் அபிவிருத்திகளையும் ஏனைய நாடுகளுடன் ஈரான் நட்பாக இருப்பது நமது எதிரிகள் வேறு கோணத்தில் அவதானிக்கினறனர்.

8 வருடங்களாக ஈரான்- ஈராக் யுத்தம் நடைபெற்றது. அந்த யுத்த்தினால் பலர் அழிந்தார்கள் அத் யுத்தினால் அவர்கள் வெற்றியடையவில்லை.

ஈரான் ஜனாதிபதி புதன்கிழமை 24 மஹ்ரிப் தொழுகைக்காக கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு வருகை தந்திருந்தார்.. அவர் பள்ளிவாசலில் மக்களோடு மக்களாக சகலருக்கும் கைகொடுத்து சலாம் சொல்லிக் கொண்டார்.

அத்துடன் அவர் இமாமாக நின்று மஹ்ரிப் தொழுகையை அங்கு நிறைவேற்றினார் அவர் பின் நின்று அவருடன் வருகை தந்த பாதுகாப்பு மற்றும் அதிகாரிகள், ஈரான் துாதுவர் உட்பட தொழுகையை நிறைவேற்றினார்கள்...

..

இந் நிகழ்வில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செயலாளர் அஷ்ஷேக் அர்க்கம் நுாரி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள் அத்துடன் வெளிநாட்டு அமைச்சர் அலி சபறியும் ஈரான் இலங்கைக்கு உதவியதையும் 3 மாதங்களுக்கு முன்பே நானும் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவும் , ஈரான் ஜனாதிபதியை இலங்கைக்கு வந்து உமா ஓயா திட்டத்தினை திறந்து வைப்பதற்காக அழைப்பு விடுத்தோம். பலஸ்தீன் நாட்டின் சார்பாகவே இலங்கை செயல்பட்டு வருகின்றமையும் அலி சப்ரி அங்கு உரையாற்றினார்

உலக நாடுகளில் மிகவும் ஒர் கொடியவர்கள் இஸ்ரவேலர்கள்தான் - இஸ்லாம் உலக நாடுகளில் வளர்ச்சி அடைவதை இவர்களினால் பொறுத்துக் கொள்ள முடியாது ; இலங்கையில் ஈரான் ஜனாதிபதி உலக நாடுகளில் மிகவும் ஒர் கொடியவர்கள் இஸ்ரவேலர்கள்தான் - இஸ்லாம் உலக நாடுகளில் வளர்ச்சி அடைவதை இவர்களினால் பொறுத்துக் கொள்ள முடியாது ; இலங்கையில் ஈரான் ஜனாதிபதி Reviewed by Madawala News on April 25, 2024 Rating: 5

பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் என்ற ரீதியில் நாம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என ஒரு அறிவிப்பு வெளியானது.



இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை மீண்டும் குறைப்பதற்கு சங்கம் என்ற ரீதியில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


பால் மாவின் விலை திருத்தம் தொடர்பில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என அதன் ஊடகப் பேச்சாளர் திரு.அசோக பண்டார தெரிவித்துள்ளார்.


கடந்த மாதம், பால் மாவின் விலையை 400 கிராமுக்கு ரூ.60 ஆகவும், ஒரு கிலோவுக்கு ரூ.150 ஆகவும் குறைக்க, பால் மா இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுத்தனர்.


அதன்படி, தற்போது பால் மா சந்தையில் பல்வேறு விலைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், பால் மாவின் விலையை குறைப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அசோக பண்டார குறிப்பிட்டுள்ளார்.


எவ்வாறாயினும், இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பால் மாவின் விலையை குறைப்பதாக நியூசிலாந்தில் இருந்து பால் மாவை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்று நேற்று (24) அறிவித்தது அறிந்ததே


இதன்படி, இறக்குமதி செய்யப்படும்,

ஒரு கிலோகிராம் பால் மா பொதியின் விலை 250 முதல் 350 ரூபா வரையிலும்,

400 கிராம் பால் மா பொதியின் விலை 100 முதல் 140 ரூபா வரையிலும் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான அறிக்கைக்கும் பால் பவுடர் இறக்குமதியாளர் மன்றத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்தார்

பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் என்ற ரீதியில் நாம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என ஒரு அறிவிப்பு வெளியானது. பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் என்ற ரீதியில் நாம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என ஒரு அறிவிப்பு வெளியானது. Reviewed by Madawala News on April 25, 2024 Rating: 5

பல்கலைகழக பெண்கள் விடுதிக்குள் உள்ளாடையுடன் புகுந்த மர்ம நபர் : தகவலறிந்த மாணவியொருவரின் தாயார் மாரடைப்பால் உயிரிழப்பு



பல்கலைகழக பெண்கள் விடுதிக்குள் உள்ளாடையுடன் புகுந்த மர்ம நபர் :

வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர் ஒருவர் நுளைந்தமையால் மாணவிகள் மத்தியில் அச்சநிலை ஏற்ப்பட்டுள்ளது.


குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…..


பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் இரவு வேளையில் இனம் தெரியாத நபர் ஒருவர் உள்நுளைந்துள்ளார்


இதனை அவதானித்த மாணவி ஒருவர் கூச்சலிட்டு சத்தம் போட்டதும் குறித்த மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்


குறித்த சம்பவத்தால் அச்சமடைந்துள்ள மாணவிகள் விடுதியில் இருந்து முற்றாக வெளியேறியுள்ளனர்


இதேவளை குறித்த மாணவி இது தொடர்பாக தனது பெற்றோருக்கு தகவலை வழங்கியிருந்த நிலையில் மறுநாள் அம்மாணவியின் தாயார் மாரடைப்பில் உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது


இதேவேளை உள்ளாடையுடன் உள்நுளைந்த நபர் தொடர்பாக கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பல்கலைகழக பெண்கள் விடுதிக்குள் உள்ளாடையுடன் புகுந்த மர்ம நபர் : தகவலறிந்த மாணவியொருவரின் தாயார் மாரடைப்பால் உயிரிழப்பு  பல்கலைகழக பெண்கள் விடுதிக்குள் உள்ளாடையுடன் புகுந்த மர்ம நபர் : தகவலறிந்த மாணவியொருவரின் தாயார் மாரடைப்பால் உயிரிழப்பு Reviewed by Madawala News on April 25, 2024 Rating: 5
Powered by Blogger.