Jobs 💼 நீர்கொழும்பில் அமைந்துள்ள பிரபல அழகுசாதனப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் வேலைவாய்ப்பு





நீர்கொழும்பில் அமைந்துள்ள பிரபல அழகுசாதனப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் விற்பனை உதவியாளர் வேலைவாய்ப்பு 

இடம்: நீர்கொழும்பு

வேலை வகை: முழுநேரம்

கிடைக்கும் வசதிகள் : அறை மற்றும் உணவுடன் நல்ல சம்பளம்

• அழகுசாதனப் பொருட்களில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

வயது : 35க்கு கீழ்

தொடர்பு கொள்ளுங்கள்
0778 333 662





Jobs 💼 நீர்கொழும்பில் அமைந்துள்ள பிரபல அழகுசாதனப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் வேலைவாய்ப்பு Jobs 💼 நீர்கொழும்பில் அமைந்துள்ள பிரபல அழகுசாதனப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் வேலைவாய்ப்பு Reviewed by Madawala News on March 19, 2024 Rating: 5

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியது



 குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


அதன்படி, இரண்டு மாதங்களுக்கு இனங்காணப்பட்ட 2.75 மில்லியன் குடும்பங்களுக்கு 10 கிலோ கிராம் நாட்டரிசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.




ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியது ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி வழங்க  அமைச்சரவை அனுமதி வழங்கியது Reviewed by Madawala News on March 19, 2024 Rating: 5

பெற்றெடுத்த குழந்தையை கொன்று புதைத்த தனிமையில் வாழும் பெண் கைது - குழந்தையை புதைத்த இடத்தில் நீதிபதி முன்னிலையில் சோதனை



சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான உறவின் மூலம் கர்ப்பமடைந்துள்ளார்.


இந்த நிலையில் குறித்த பெண் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிறந்த குழந்தையை  கொலை செய்து புதைத்துள்ளார்.


இந்நிலையில் குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்ட நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் பெண்ணை கைது செய்துள்ளனர்.


அத்துடன் குழந்தையை புதைத்த இடத்தில் நீதிபதி முன்னிலையில் சோதனை நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளது. 

பெற்றெடுத்த குழந்தையை கொன்று புதைத்த தனிமையில் வாழும் பெண் கைது - குழந்தையை புதைத்த இடத்தில் நீதிபதி முன்னிலையில் சோதனை பெற்றெடுத்த குழந்தையை கொன்று புதைத்த தனிமையில் வாழும் பெண் கைது - குழந்தையை புதைத்த இடத்தில் நீதிபதி முன்னிலையில் சோதனை Reviewed by Madawala News on March 19, 2024 Rating: 5

ஏனைய கைதிகள் சிறைச்சாலை பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட அதேவேளை கெஹலிய ரம்புக்வெல்லவை மட்டும் குழந்தைகளின் வேனில் ஏற்றிச்சென்றது ஏன் ?



விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பெண் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக யுனிசெப் வழங்கிய பேருந்தின் மூலம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


பெண் கைதிகளின் குழந்தைகளின் நலனுக்காக மாத்திரம் பயன்படுத்தப்பட வேண்டும் என யுனிசெஃப் நிபந்தனை விதித்துள்ள போதிலும், சிறைச்சாலை அதிகாரிகள் ரம்புக்வெல்லவின் போக்குவரத்துக்கு இந்தப் பேருந்தை பயன்படுத்தியதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.


ரம்புக்வெல்லவுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஏனையோர் சிறைச்சாலை பேருந்தில் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், ரம்புக்வெல்லவுக்கு ஏன் இவ்வாறான விசேட சலுகை வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பப்படுகிறது.

ஏனைய கைதிகள் சிறைச்சாலை பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட அதேவேளை கெஹலிய ரம்புக்வெல்லவை மட்டும் குழந்தைகளின் வேனில் ஏற்றிச்சென்றது ஏன் ? ஏனைய கைதிகள் சிறைச்சாலை பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட அதேவேளை கெஹலிய ரம்புக்வெல்லவை  மட்டும் குழந்தைகளின் வேனில் ஏற்றிச்சென்றது ஏன் ? Reviewed by Madawala News on March 19, 2024 Rating: 5

கோட்டபாயவின் முன்னாள் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் போதைப்பொருளுடன் கைது.



(ஷேன் செனவிரத்ன)
இலங்கை இராணுவத்தின் கொமாண்டோ படையில் லான்ஸ் கோப்ரல் ஆக பணியாற்றிய முன்னாள் சிப்பாய் ஒருவர் இரண்டு கிராம் ஹெரோயினுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி முன்னாள் ஜனாதிபதிக்கு நெருக்கமாக இருந்த இந்த சந்தேகநபர், ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டபாய வெளியேறிய பின்னர் இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


யஹலதன்ன நெல்லிகல பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் ஹெரோயின் போதைப்பொருள் கடத்துவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரது வீட்டை சோதனை செய்கிறது.
கோட்டபாயவின் முன்னாள் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் போதைப்பொருளுடன் கைது. கோட்டபாயவின் முன்னாள் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் போதைப்பொருளுடன் கைது. Reviewed by Madawala News on March 19, 2024 Rating: 5

கண்டி இமாதுதீன் அமைப்பினால் குறுக்குதலை ஹுதா ஜும்மா பள்ளிவாயலில் நடாத்தப்பட்ட ஜனாஸா பயிற்சி நிகழ்வு



கண்டி இமாதுதீன் அமைப்பினால் குறுக்குதலை ஹுதா ஜும்மா பள்ளிவாயலில் நடாத்தப்பட்ட ஜனாஸா பயிற்சி நிகழ்வு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வேண்டுகோளிற்கிணங்க கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் அவர்களது ஒத்துழைப்புடன் இமாதுதீன் அமைப்பினால் நடாத்தப்பட்ட ஜனாஸா பயிற்சி நிகழ்வு நேற்றைய தினம் கடுகண்ணாவை குறுக்குதலை ஹுதா ஜும்மா பள்ளிவாயலில் நடைபெற்றது.

ஜனாஸா குளிப்பாட்டும் முறை, ஜனாஸா கஃபனிடும் முறை,
ஜனாஸா தொழுகை, மற்றும் ஜனாஸா குறித்த ஏனைய இஸ்லாமிய வழிகாட்டல்கள் செயன்முறை பயிற்சி உடன் கூடிய வகையில் பயிற்றுவிக்கப்பட்டன.

“ஒரு மனிதன் மரணித்த பின்னர் அந்த மனிதனின் ஜனாஸாவிற்கு செய்ய வேண்டிய கடமைகள் குறித்த ஒரு விழிப்புணர்வை எமது சமூகத்தில் ஏற்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. அதனை நிவர்த்தி செய்யும் நோக்கிலேயே மேற்குறித்த இந்நிகழ்வு நடத்தப்பட்டது.”

மேலும் இந்நிகழ்வில் வளவாளராக பங்கேற்ற அல்ஹாஜ் நுஃமான் அவர்கள், கண்டி மாவட்ட வக்ப் சபையின் பொறுப்பதிகாரி ஸியாத் அவர்கள், குறுக்குதலை ஜனாஸா நலன்புரி அமைப்பின் மற்றும் பள்ளிவாயலின் நிர்வாக அங்கத்தவர்கள், நலன் விரும்பிகள், இமாதுதீன் அமைப்பின் சார்பில் வதூத், பிர்தௌஸ் மற்றும் ரூமி ஆகியோருடன் ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


கண்டி இமாதுதீன் அமைப்பினால் குறுக்குதலை ஹுதா ஜும்மா பள்ளிவாயலில் நடாத்தப்பட்ட ஜனாஸா பயிற்சி நிகழ்வு கண்டி இமாதுதீன் அமைப்பினால் குறுக்குதலை ஹுதா ஜும்மா பள்ளிவாயலில் நடாத்தப்பட்ட ஜனாஸா பயிற்சி நிகழ்வு Reviewed by Madawala News on March 19, 2024 Rating: 5

முதலில் ஜனாதிபதி தேர்தல் ; ரனில் அமைச்சரவைக்கு அறிவித்தார்.



முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என  ரனில் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.


இன்று மாலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பொதுத்தேர்தலை நடத்துமாறு கோரிவரும் நிலையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முதலில் ஜனாதிபதி தேர்தல் ; ரனில் அமைச்சரவைக்கு அறிவித்தார். முதலில் ஜனாதிபதி தேர்தல் ; ரனில் அமைச்சரவைக்கு அறிவித்தார். Reviewed by Madawala News on March 18, 2024 Rating: 5

வீட்டு உரிமையாளர் தராவீஹ் தொழச்சென்ற நேரம்பார்த்து வீட்டின் ஜன்னலை உடைத்து 39 இலட்சத்திற்கும் அதிக தங்கநகையை திருடிச்சென்ற 3 பேர் கைது.



20 பவுண் நகைகளை திட்டமிட்டு களவாடிய 3 சந்தேக நபர்கள் கைது

பாறுக் ஷிஹான்

பல இலட்சம் பெறுமதியான 20 பவுண் நகைகளை திட்டமிட்டு களவாடிய 3 சந்தேக நபர்களை சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 5 ஆம் கொலனி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 14.03.2024 அன்று வியாழக்கிழமை இரவு வீடு ஒன்றின் ஜன்னல் உடைக்கப்பட்டு உள் நுழைந்தவர்களால் சுமார் 39 இலட்சத்திற்கும் அதிகமான 20 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளதாக முறைப்பாடு 15.04.2024 மறுநாள் வெள்ளிக்கிழமை கிடைக்கப்பெற்ற நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது களவு இடம்பெற்ற வீட்டின் உரிமையாளர்கள் நோன்பு இரவு நேர வணக்க வழிபாட்டிற்காக பள்ளிவாசலுக்கு சென்ற சமயம் பார்த்து 3 சந்தேக நபர்கள் இச்செயலை மேற்கொண்டதுடன் சுமார் 20 பவுண் நகைகளை குறித்த வீட்டின் ஜன்னலை உடைத்து எடுத்து சென்றிருந்தனர்.

இந்நிலையில் உடனடியாக செயற்பட்ட சவளக்கடை பொலிஸார் இத்திருட்டில் ஈடுபட்ட சாளம்பைக்கேணியை சேர்ந்த 33, 26 ,28, வயது மதிக்க தக்க சந்தேக நபர்களை கைது செய்ததுடன் சந்தேக நபர்கள் வசம் இருந்து களவாடி செல்லப்பட்ட 20 பவுண் நகைகளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டன.

இந்நடவடிக்கையில் சவளக்கடை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான எம்.எம். அஸ்ரப் வழிகாட்டலில் பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமான எஸ் .ரவீந்திரராசா, உப பொலிஸ் பரிசோதகர் ஐயூப்கான், பொலிஸ் சார்ஜன்டுகளான அன்சார் (44203), ஜெசில்(44060), சம்பத்(70337),
பொலிஸ் உத்தியோகத்தர்களான திசாநாயக்க (70302) ,சாந்தன்(73628), ஆகியோர் ஈடுபட்டிருந்ததுடன் சந்தேக நபர்களை கல்முனை நீதிவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Thanks & Best Regards,

பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
வீட்டு உரிமையாளர் தராவீஹ் தொழச்சென்ற நேரம்பார்த்து வீட்டின் ஜன்னலை உடைத்து 39 இலட்சத்திற்கும் அதிக தங்கநகையை திருடிச்சென்ற 3 பேர் கைது. வீட்டு உரிமையாளர் தராவீஹ் தொழச்சென்ற நேரம்பார்த்து வீட்டின் ஜன்னலை உடைத்து 39 இலட்சத்திற்கும் அதிக தங்கநகையை திருடிச்சென்ற 3 பேர் கைது. Reviewed by Madawala News on March 18, 2024 Rating: 5

நாடு முழுவதும் இரத்தினக்கற்களை கண்டறிய கணக்கெடுப்பு



எதிர்காலத்தில் சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் மாணிக்கக் கல் அகழ்வு பணிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


இதன்படி, இலங்கையின் இரத்தினக்கல் வர்த்தகர்களுக்கு அந்த பகுதிகளில் சுரங்க தொழில்களை ஆரம்பிக்க பூரண வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் மாணிக்கக்கல் மற்றும் சுரங்க வியாபாரத்தை ஆரம்பிக்க முடியுமா என்பது தொடர்பில் கணக்கெடுப்பு நடத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைகள், இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலைப் பாதித்துள்ள பிரச்சினைகள் மற்றும் தொழில் தொடர்பான ஏனைய விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
நாடு முழுவதும் இரத்தினக்கற்களை கண்டறிய கணக்கெடுப்பு நாடு முழுவதும் இரத்தினக்கற்களை கண்டறிய  கணக்கெடுப்பு Reviewed by Madawala News on March 18, 2024 Rating: 5

தங்கும் அறை ஒன்றில் 27 வயது தாயொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 22 வயது இளைஞன் கைது.



சீதுவ பிரதேசத்தில் தங்கும் அறையொன்றில் இரண்டு பிள்ளைகளின் தாயை கொன்ற சந்தேக நபர், அதிகளவு வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொண்டதால், ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.


மடங்வல, பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பலாங்கொடை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைச்சாலை அதிகாரிகளின் மேற்பார்வையில் பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்று வருகின்றார்.

27 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் கடந்த 14ஆம் திகதி ரத்தொலுவ முத்துவடியா வீதியிலுள்ள தங்கும் அறையொன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.


அநுராதபுரம் பாமுகொல்லாவ பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாயான திலினி சசிகலா பிரியபாஷினி என்ற பெண்மணி ஆவார்.


22 வயதுடைய இந்த இளைஞனுடன் சில காலமாக தொடர்பு இருந்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞனே இந்த கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சீதுவில் உயிரிழந்த பெண் தங்கியிருந்த தங்கும் அறைக்கு குறித்த இளைஞன் பல தடவைகள் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலைச் சம்பவத்துக்குப் பிறகு, தங்கும் அறைக்குச் சென்ற போலீஸார், அந்த அறையில் தூக்கில் தொங்க தயாராக கயிறு கட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததைக் கவனித்தனர்.

கொலையின் பின்னர் சந்தேக நபர் தற்கொலைக்கு தயாராகி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கொலைச் சம்பவம் இடம்பெற்ற 13ஆம் திகதி இரவு இந்த அறையில் இருந்த சந்தேக நபர் மறுநாள் காலை அறையை விட்டு வெளியேறியதை விடுதியின் உரிமையாளர் அவதானித்துள்ளார்.

கொலையின் பின்னர், சந்தேகநபர் தொலைபேசியில் தனது நண்பரிடம் முழு சம்பவத்தையும் ஒப்புக்கொண்டார்.
தங்கும் அறை ஒன்றில் 27 வயது தாயொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 22 வயது இளைஞன் கைது. தங்கும் அறை ஒன்றில் 27 வயது தாயொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 22 வயது இளைஞன் கைது. Reviewed by Madawala News on March 18, 2024 Rating: 5

அரிசி உருண்டை சாப்பிட்ட 14, 28 மற்றும் 34 வயதுடைய மூவர் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதி



உலர் அரிசியில் தயாரிக்கப்பட்ட அக்கல சாப்பிட்ட மூவர் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆபத்தான நிலையில் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மீகஹகிவுல கனுகொல்ல கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். கோமரிக்க கனுகொல்ல கிராமத்தில் வசிக்கும் 14, 34 மற்றும் 28 வயதுடைய மூவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உலர்ந்த அரிசி, தேங்காய், சீனி போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அக்கலவை, ஞாயிற்றுக்கிழமை (17) மாலையில் உட்கொண்டு தேநீர் அருந்தியுள்ளனர். அதன்பின்னர் அதிக வாந்தி எடுத்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
அரிசி உருண்டை சாப்பிட்ட 14, 28 மற்றும் 34 வயதுடைய மூவர் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதி அரிசி உருண்டை சாப்பிட்ட 14, 28 மற்றும் 34 வயதுடைய மூவர் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதி Reviewed by Madawala News on March 18, 2024 Rating: 5

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்...



காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்...
·
அது 1990களின் பிற்பகுதி. க.பொ.த. (உ.த) பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் சிறந்த பெறுபேறுகளை பெற்றிருந்த மாணவி காஞ்சனா,

மாவட்ட அடிப்படையில் பயிலுநர் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையிலும் சித்தியடைந்து அந்த பாடசாலைக்கு ஆங்கில ஆசிரியையாக நியமனம் பெற்று வருகிறாள்.


பொலன்னறுவை மாவட்டத்தின் எல்லை கிராமமொன்றில் அமைந்திருக்கும் சுங்காவில் முஸ்லிம் மகா வித்தியாலயத்துக்கு அதுவரை ஆங்கிலப்பாட ஆசிரியர்கள் எவரும் நியமனம் செய்யப் பட்டிருக்கவில்லை

 பாடசாலையின் அதிபர் ஃபளீல் அவர்கள்தான் தனது இடையறாத வேலைப்பளுக்களுக்கு மத்தியிலும் இயல்பாகவே அவருக்குக் கைவரப்பெற்றிருந்த ஆங்கில மொழிப்புலமையையும், போதனா தலைமைத்துவ ஆற்றலையும் உபயோகித்து பெரிய வகுப்புகளுக்கு ஆங்கிலம் கற்பித்து வந்தார். 


ஆசிரியை காஞ்சனாவின் வருகையின் காரணமாக அதிபரது வேலைப்பளு கணிசமாகக் குறைந்ததோடு கனிஷ்ட பிரிவு மாணவர்களுக்கும் ஆங்கிலப்பாடத்தை முறையாகக் கற்பதற்கான வாய்ப்பு கிட்டியது.

 ஆசிரியப்பணியை பொறுப்பேற்று சிறிது காலத்திற்குள்ளாகவே அவள் மாணவர்களின் அபிமானத்துக்குரிய ஆசிரியையாக பரிணமித்துவிட்டிருந்தாள். 

இந்நிலையில் க.பொ.த. (உ.த) பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்றன. பரீட்சை வெட்டுப்புள்ளிகளின்படி காஞ்சனா  பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கு தெரிவு செய்யப்படுகிறாள். 

தான் மருத்துவபீடத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் மகிழ்ச்சி ஒரு புறம், பல்கலைக்கழக செலவுகளை ஈடுகட்டுவதற்கு தனது குடும்பம் எதிர்நோக்கவுள்ள சிரமங்கள் குறித்த கவலை ஒரு புறம். மிகுந்த மன சஞ்சலத்துக்குள்ளாகியிருந்த காஞ்சனாவுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. 

பல்கலை உதவிக்கொடுப்பனவு கிடைக்கும் வரையாவது ஆசிரியப்பணியில் நீடித்திருக்க வாய்ப்பளிக்க முடியுமென்றால் தனக்கு அது ஒரு பெரிய உபகாரமாக இருக்கும் எனவும், தன்னாலியன்ற உச்சபட்ச சேவையை பாடசாலைக்கு வழங்குவற்கு சித்தமாக இருப்பதாகவும் அதிபரிடம் பிரஸ்தாபித்து அதன் நடைமுறை சாத்தியம் குறித்து அவரிடம் வினவுகிறாள். 


அதிபருக்கும் அந்த யோசனையின் சாத்தியப்பாடு குறித்து சந்தேகம் இருந்தாலும், ஆசிரியை காஞ்சனாவின் வார்த்தைகள் வெறும் உதட்டளவிலிருந்து வெளிப்படுபவை அல்ல, உள்ளத்திலிருந்து வெளிப்படுபவை என்ற நம்பிக்கை இருந்தது. தன்னிடம் உதவி கோரும் ஆசிரியைக்கும் இன்னும் நான்கைந்து மாதங்களில் க.பொ.த. (சா.த) பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கும் ஒருசேர நன்மை பயக்கக்கூடிய அந்த யோசனையை பரிசீலித்துப் பார்க்கலாம் என தீர்மானிக்கிறார். 


அடுத்த நாள் வலயக்கல்விப் பணிமனைக்குச் செல்லும் அதிபர் வலயக்கல்விப் பணிப்பாளரிடம் இவ்விடயம் குறித்து ஆலோசனை கேட்கிறார். 

“ඒක ප්‍රායෝගික නෑනේ, විදුහල්පතිතුමා. අනික ඕවා ගස්‍ යන වැඩ. කවුද ඔය ඉංග්‍රීසි මිස්? ගමේද?” 
(அது நடைமுறை சாத்தியமானதாக இல்லையே அதிபரே. தவிரவும் அதெல்லாம் பிரச்சினைக்குத்தான் வழிவகுக்கும். யாரந்த இங்லிஷ் மிஸ்? உங்கள் ஊரா?)

“එයා කාංචනා ආරියදාස. පදිංචිය කදුරුවෙල ටවුමෙ.”
(பெயர் காஞ்சனா ஆரியதாச. வசிப்பது கதுருவெல டவுன்.)

“මොකක්? කාංචනා කිව්වා? සිංහල ළමයෙක් ගැනද ඔය ඔච්චර වද වෙන්නෙ?”
(என்னது? காஞ்சனாவா? ஒரு சிங்களப் பிள்ளைக்காகவா இவ்வளவு கரிசனை எடுக்கிறீர்?) 

பணிப்பாளரின் இறுக்கம் தளர்கிறது. அந்த ஆண்டு இறுதிவரை காஞ்சனாவின் சேவை பாதிக்கப்படாத வகையில்   அவளது கோவையைப் பேணுவதற்கு இணங்குகிறார். 


பல்கலைக்கழக மருத்துவபீட பட்டதாரி மாணவியான காஞ்சனா ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் அந்த எல்லை கிராமத்துக்கு வந்து தங்கியிருந்து வார இறுதிகளில் பாடசாலையில் வகுப்புகளை நடத்தி அவ்வந்த வாரத்துக்குரிய பாடவேளைகளை பூர்த்தி செய்கிறாள். 

அந்த ஆண்டின் க.பொ.த. (சா.த) பரீட்சை நெருங்குகிறது. அதற்கு சமாந்தரமாக காஞ்சனாவுக்கு பல்கலைக்கழக உதவிக்கொடுப்பனவும் கிடைக்க ஆரம்பிக்கிறது. மாணவர்களை சிறப்பாக பரீட்சைக்குத் தயார் செய்த மனநிறைவுடன் காஞ்சனா ஒரு முழுநேர மருத்துவபீட மாணவி ஆவதற்காக உரிய முறைப்படி ஆசிரியர் சேவையை விட்டு விலகுவதற்குத் தீர்மானிக்கிறாள். 

பிரியாவிடை வைபவத்தில் பாடசாலை சார்பில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இதயத்துடிப்பு மானி (stethoscope) இன்றளவும் Dr. காஞ்சனா ஆரியதாச கழுத்தில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. 


குறிப்பு: அதிபர் ஏ.எம். ஃபளீல் அவர்கள் நாவலப்பிட்டியைச் சேர்ந்தவர். நாவலப்பிட்டி புனித மரியாள் முஸ்லிம் மகா வித்தியாலயம், கம்பளை ஸாஹிரா கல்லூரி ஆகிய பாடசாலைகளின் பழைய மாணவரான இவர் பின்பு மாணவர் ஆசிரியராக நியமனம் பெற்று புனித மரியாள் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சிறிது காலம் பணியாற்றியதன் பின்னர் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்தார். அதனைத்தொடர்ந்து கட்டாய கஷ்டப்பிரதேச சேவை காலத்தில் சுங்காவில் முஸ்லிம் அரசினர் கல்லூரியில் பணியாற்றினார். பின்னர் மீண்டும் நாவலப்பிட்டி புனித மரியாள் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பயிற்றப்பட்ட ஆசிரியராக பணியாற்றியதோடு பகுதித்தலைவர், பிரதி அதிபர் என படிப்படியாக தனது வாண்மைத்துவப் படிக்கட்டுகளில்  முன்னேறி 1993ஆம் ஆண்டு இலங்கை அதிபர் சேவை போட்டிப்பரீட்சையில் சித்தியெய்தி சுங்காவில் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஏறக்குறைய ஒரு தசாப்த காலம் அதிபராகக் கடமையாற்றினார். அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்று தற்போது பரகஹதெனியவில் வசித்து வரும் அதிபர் ஃபளீல் ஆழ்ந்த வாசிப்பும் ஆக்கத்திறனும் உள்ளவர். அத்துடன் புறக்கிருத்தியைச் செயற்பாடுகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.  இன்றும்கூட அரபு எழுத்தணி, வீட்டுத்தோட்டம், தச்சுவேலை, புத்துருவாக்கம் என சுறுசுறுப்பாய் இயங்கும் அதிபர் ஃபளீல் அவர்களை ‘ஓய்வுநிலை’ அதிபர் எனக்கூறுவது பொருத்தமில்லை என்றே தோன்றுகிறது.


[அறிவுப்புல ஆளுமைகளின் படிப்பினைச்சுவடுகள்’ நூலிலிருந்து...]
 Uduniwaranews
காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்... காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்... Reviewed by Madawala News on March 18, 2024 Rating: 5

ரஷ்யா ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புதின் 88% வாக்குகளைப் பெற்று மிகப் பெரிய வெற்றியடைந்தார்.



ரஷ்யாவில் நடந்த அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் 88% வாக்குகளைப் பெற்று மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் அதிபர் பதவியில் தொடர்வது உறுதியாகியுள்ளது.

உலகிலேயே மிகப் பெரிய நாடாக இருப்பது ரஷ்யா.. இந்தியாவை விட பல மடங்கு பெரியதாக ரஷ்யா இருந்தாலும் அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை வெறும் 15 கோடி தான்.

1999இல் அதிகாரத்திற்கு வந்த புதின், ரஷ்யாவில் மிகவும் சக்திவாய்ந்த நபராக உருவெடுத்துள்ளார். ரஷ்யா மற்றும் சோவியத் ஒன்றியத்தில் கடந்த 200 ஆண்டுகளில் அதிக காலம் தலைவராக இருந்தவர்கள் பட்டியலில் ஜோசப் ஸ்டாலினை புதின் ஓவர்கேட் செய்துள்ளார்.

உக்ரைன் போருக்குப் பிறகு அங்கே நடக்கும் முதல் தேர்தலாக இது இருக்கும் நிலையில், புதின் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
ரஷ்யா ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புதின் 88% வாக்குகளைப் பெற்று மிகப் பெரிய வெற்றியடைந்தார். ரஷ்யா ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புதின் 88% வாக்குகளைப் பெற்று மிகப் பெரிய வெற்றியடைந்தார். Reviewed by Madawala News on March 18, 2024 Rating: 5

தலசீமியா மேர்ஜர் நோயினால் பாதிக்கப்பட்டு அவசர சத்திர சிகிச்சையை எதிர்நோக்கும் M.R. ஷப்காவுக்காக நிதி உதவி கோரல்



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

சத்திர சிகிச்சைக்கான நிதி உதவி கோரல்
2024.03.18

D 80/4, அம்பருப்ப, ஹெம்மாதகம. என்ற முகவரியில் வசிக்கும் முஹம்மது ரிஷாம் ராசிக் அவர்களின் மகள் எம். ஆர். ஷப்கா (வயது 15) என்பவர் பிறந்து ஆறு மாதகாலத்திலிருந்து தலசீமியா மேர்ஜர் நோயினால் பாதிக்கப்பட்டு இன்றுவரை அதற்குரிய சிகிச்சையினை பேராதெனிய வைத்தியசாலையின் நான்காம் பிரிவில் பெற்று வருகிறார்.

இவ்வாறு இருக்க தற்போது 15 வயது வரை வளர்ந்திருக்கும் எம்.ஆர் ஷப்கா வினைப் பரிசோதிக்கும் வைத்தியரான டாக்டர் கிரிஷ்ன பிரதீப் மகளுக்குரிய சத்திர சிகிச்சையை அவசரமாக மேற்கொள்ளுமாறு வேண்டிக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் மகளின் சத்திர சிகிச்சையானது வைத்தியரின் ஆலோசனைப்படி இந்தியாவில் மேற்கொள்ளப்பட இருக்கின்றது. குறித்த சத்திர சிகிச்சைக்காக இந்தியாவில் ஆறுமாதகாலம் தங்க வேண்டிய ஒரு நிலையையும் இருக்க, சத்திர சிகிச்சைக்காகவும், (55000 US Dollars - சுமார் Rs. 18 MillIon) தங்கும் வசதிகளுக்காகவும் சுமார் 22 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதற்கான உதவிகளை குடும்பத்தவர்களிடமிருந்து சேகரித்துக் கொண்டிருக்கும் அதேவேளை, தொகை பெரிதாக இருப்பதினால் உங்களின் மேலான உதவிகளையும் எதிர்பார்க்கின்றோம்.

"ஒரு மனிதனை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்" (அல்குர்ஆன் 5:32 )

அல்லாஹ் உங்களை பொருத்திக் கொள்வானாக!

மேலதிகத் தகவல்களுக்கு :
1. அல்ஹாஜ் எம்.எச்.எம் நிஸாம் 0777601109
(தலைவர், பள்ளிவாயல்கள் மத்திய சம்மேளனம் - ஹெம்மாதகம)
2. அல்ஹாஜ் எம்.ஆர்.எம் அஸாம் 0769200093
(தலைவர், மஸ்ஜிதுந் நூர் ஜும்ஆ பள்ளிவாயல் - அம்பருப்ப, ஹெம்மாதகம)
3. எம்.ஆர்.எம் ரிஷாம் - 00968 92733242 (தந்தை)
4. எம்.ஆர் ரிஸாஸ் முஹம்மத் 0774227200
(குடும்ப உறுப்பினர், ஆசிரியர்,
தல்கஸ்பிடிய மு.ம.வி - அரணாயக)

*Bank Details*

*Account Holders:* Mansoor Aboo Saheedu, Muhammadu Richard,MBAM Samsul Arifeen

*Bank Name* : People’s Bank
*Branch* : Hemmathagama
*Account Number* : 221-2-001-8-0041152
*Swift code* : PSBKLKLX

மருத்துவ ஆவணங்களை பார்க்க 👇🏼


Jazakallah ......
தலசீமியா மேர்ஜர் நோயினால் பாதிக்கப்பட்டு அவசர சத்திர சிகிச்சையை எதிர்நோக்கும் M.R. ஷப்காவுக்காக நிதி உதவி கோரல் தலசீமியா மேர்ஜர் நோயினால் பாதிக்கப்பட்டு அவசர சத்திர சிகிச்சையை எதிர்நோக்கும் M.R. ஷப்காவுக்காக நிதி உதவி கோரல் Reviewed by Madawala News on March 18, 2024 Rating: 5

நிலவும் வெப்பமான வானிலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கலாம்



நிலவும் வெப்பமான வானிலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் நாட்டின் சில பகுதிகளில் மாலை வேளையில்  மழை பெய்யக்கூடும் என திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க குறிப்பிட்டார். 


ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை சூரியன் உச்சம் கொடுப்பதால், வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என  அதுல கருணாநாயக்க கூறினார்.


இதேவேளை,  இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் பகுதியிலேயே  அதிகூடிய வெப்பநிலை பதிவாகியுள்ளது.


குருநாகலில் 38.3 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.


கொழும்பில் 33.9 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.


இதேவேளை, சித்திரை புத்தாண்டிற்கு பின்னர் பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்யுமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.


தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக அவ்வாறான போட்டி நிகழ்ச்சிகளை சில வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எவ்வாறாயினும், இந்த ஆலோசனைகளை சில பாடசாலைகள் மீறுவதை ஊடகங்கள் வழியாக தாம் அறிவதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

நிலவும் வெப்பமான வானிலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் நிலவும் வெப்பமான வானிலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் Reviewed by Madawala News on March 17, 2024 Rating: 5

2026 முதல் க.பொ.த (சா/த) ஏழு பாடங்கள் மட்டுமே ஏ, பி, சி பாஸ்களுக்குப் பதிலாக ( சராசரி புள்ளி) ஜிபிஏ!



புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை ஏழாக மட்டுப்படுத்தப்படும் மற்றும் ஏ, பி சி சித்திகளை முற்றாக நீக்கி, அதற்குப் பதிலாக தரப் புள்ளி சராசரி (ஜிபிஏ) மூலம் உறுதி செய்யப்படும். இதன் அடிப்படியில் எந்த மாணவரும் பரீட்சை தோல்வியடைபவராக கருத்தப்படமாட்டார்.


விஞ்ஞானம், கணிதம், தாய்மொழி, ஆங்கிலம், சமயம் , ஒழுக்கக் கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வரலாறு ஆகியவற்றுக்கான க.பொ.த. O/L பரீட்சையை பரீட்சைகள் திணைக்களம் 2026 ஆம் ஆண்டு முதல் நடத்தவுள்ளது.


இந்த திட்டம் 2025 முதல் பாடசாலைகளில் தொடங்கப்படும், இந்த மாற்றத்தின் அடிப்படியில் 2026 ஆம் ஆண்டு மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவர்.


மேலும் ஏ, பி சி பெறுபேறுகளை பதிலாக மாணவர்களுக்கு ஜிபிஏ (சராசரி புள்ளி) வழங்கப்படும் .


இந்த புதிய முறையின்படி, ஒவ்வொரு பரிட்சார்த்தியும் ஒரு குறிப்பிட்ட அளவிலான மதிப்பெண்களுடன் தோல்வி மதிப்பெண்கள் இல்லாமல் தேர்ச்சி பெறுவார்கள். குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் தொழிற்கல்வி பாடங்களை தொடர முடியும் .


இதன் மூலம் வருடாந்தம் க.பொ.த சா/த பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் க.பொ.த உயர்தர கல்விக்கு தகுதி பெற முடியும் என கல்வி மறுசீரமைப்பு நிபுணர் குழுவின் பேராசிரியர் குணபால நாணயக்கார தெரிவித்துள்ளார் .

2026 முதல் க.பொ.த (சா/த) ஏழு பாடங்கள் மட்டுமே ஏ, பி, சி பாஸ்களுக்குப் பதிலாக ( சராசரி புள்ளி) ஜிபிஏ! 2026 முதல் க.பொ.த (சா/த) ஏழு பாடங்கள் மட்டுமே ஏ, பி, சி பாஸ்களுக்குப் பதிலாக ( சராசரி புள்ளி) ஜிபிஏ! Reviewed by Madawala News on March 17, 2024 Rating: 5

வருங்கால SJB அரசாங்கம் ஆங்கில வழிக் கல்வியை கட்டாயமாக்கும்



வருங்கால SJB அரசாங்கம் ஆங்கில வழிக் கல்வியை கட்டாயமாக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வார இறுதியில் தெரிவித்தார். 


தரம் ஒன்று முதல் பதின்மூன்று வரையிலான மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியை கட்டாயமாக்குவோம் என குருநாகலில் நடைபெற்ற இளைஞர் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் தெரிவித்தார். 


மேலும், "இளைஞர்களுக்கு சீனம், இந்தி, ஜப்பானியம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவியல் ஆகிய மொழிகளை இலவசமாகக் கற்பிப்போம்" என்றும் அவர் கூறினார்.

வருங்கால SJB அரசாங்கம் ஆங்கில வழிக் கல்வியை கட்டாயமாக்கும் வருங்கால SJB அரசாங்கம் ஆங்கில வழிக் கல்வியை கட்டாயமாக்கும் Reviewed by Madawala News on March 17, 2024 Rating: 5

இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 1000 கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக தகவல் வெளியானது



இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக பிரித்தானியாவின் லேன்ட்செட் மருத்துவ சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது.

நாட்டில் சமூக பாதுகாப்பு நிலைமை வீழ்ச்சியடைந்த காரணத்தினால் இவ்வாறு அதிகளவு கருக்கலைப்புகள் பதிவாவதாக நிறுவனத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை பிள்ளைகள், பல்கலைக்கழக மாணவியர், திருமணமாகாத பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் உள்ளிட்டவர்கள் இவ்வாறு கருக்கலைப்பு செய்து கொள்வதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது என நிபுணத்துவ மருத்துவர் ஜீ.ஜீ சமால் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

நாட்டில் சமூகப் பாதுகாப்பு நிலைமைகளில் காணப்படும் குறைபாடு காரணமாக தகாத முறைக்குட்படுத்தப்படும் சிறுமியரின் எண்ணிக்கை அதிகமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பால்வினை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பால்வினை நோய்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவர்கள் பலர் வெளிநாடு சென்றுள்ளதாக சமால் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.


அத்தோடு மருத்துவர்கள் நாட்டின் சமூகப் பொருளாதார காரணிகளினால் இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளதாகவும் இதனால் பால்வினை நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 1000 கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக தகவல் வெளியானது இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 1000 கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக தகவல் வெளியானது Reviewed by Madawala News on March 17, 2024 Rating: 5

நான்கு மாணவர்கள் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த வேளை கம்பளை பொலிஸ் போதை ஒழிப்பு அதிகாரிகளால் கைது.



கம்பளை பிரதேசத்தில் உள்ள பிரபல அரச மற்றும் சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் நான்கு மாணவர்கள் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த வேளை கம்பளை பொலிஸ் போதை ஒழிப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


கம்பளை புகையிரத பாதையில் மாணவர்கள் கஞ்சா புகைத்துக் கொண்டிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


குறித்த மாணவர்கள் தினசரி ரமழான் நோன்பை திறந்த பின்னர் மேற்கண்ட இடத்தில் கஞ்சா புகைப்பதாக கம்பளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர், கம்பளை பிரதான நீதவான் திருமதி வாசனா நவரத்ன அவர்களுக்கு தலா மூவாயிரம் ரூபாவும் பன்னிரண்டாயிரம் ரூபாவும் அபராதம் விதித்தார்.


கம்பளை கஹடபிட்டிய, கண்டிவீதி , பபில மற்றும் சிங்கபிட்டிய ஆகிய பகுதிகளில் வசிக்கும் 15 மற்றும் 16 வயதுடைய நான்கு மாணவர்களுக்கே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


குறித்த மாணவர்கள் கம்பளை நகரின் பிரபல வர்த்தகர்கள் நால்வரின் பிள்ளைகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


மாணவர்களிடம் இருந்து 365, 657, 680, 273 மில்லி கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு, அந்த தொகையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது

நான்கு மாணவர்கள் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த வேளை கம்பளை பொலிஸ் போதை ஒழிப்பு அதிகாரிகளால் கைது. நான்கு மாணவர்கள் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த வேளை கம்பளை பொலிஸ் போதை  ஒழிப்பு  அதிகாரிகளால் கைது. Reviewed by Madawala News on March 17, 2024 Rating: 5

சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதியாகிவிட்டது ; SM மரிக்கார்..



எதிர்வரும் ஜனாதிபதி  தேர்தலில் சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதியாகிவிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் குறிப்பிட்டார்.


ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,


எதிர்வரும் ஜனாதிபதி  தேர்தலில் சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதியாகிவிட்டது . சஜித் பிரேமதாசவுக்கும் அனுர குமாரவுக்கு இடையிலேயே போட்டி உள்ளது. மிக அண்மைய கருத்து கணிப்பு படி சஜித் பிரேமதாசவுக்கு 39 வீதம் வாக்குகள் கிடைக்கும் அனுரவுக்கு 20 வீதம் வாக்குகள் கிடைக்கும். இதுவரை எவருக்கு வாக்களிப்பது என தீர்மானிக்காத வாக்குகள் 24 வீதமான வாக்குகளில் பெரும்பான்மையான வாக்குகள் வெற்றி பெரும் வாக்காளருக்கே கிடைக்கும் என குறிப்பிட்டார்.

சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதியாகிவிட்டது ; SM மரிக்கார்.. சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதியாகிவிட்டது ; SM மரிக்கார்.. Reviewed by Madawala News on March 17, 2024 Rating: 5

என்னை ஜனாதிபதியாக தேர்வு செய்யாவிட்டால் இரத்தக்களறி ஏற்படும் என டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு



அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தை ட்ரம்ப் தொடங்கியுள்ளார்.


அந்த வகையில், ஓஹியோ மாகாணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய டொனால்ட் ட்ரம்ப், தன்னை ஜனாதிபதியாக தேர்வு செய்யாவிட்டால் இரத்தக்களறி ஏற்படும் என்று எச்சரித்தார்.


டொனால்ட் ட்ரம்ப் பேசுகையில், "அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதி தேர்தல் மிகவும் முக்கியமான நாளாகும். தன்னை மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு செய்யவில்லை என்றால் இரத்தகளரி ஏற்படும்" என்றார். ஆனால் எதற்காக இப்படி ட்ரம்ப் பேசினார் என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. அமெரிக்காவில் வாகன இன்டஸ்ட்ரீஸ்க்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பேசும் போது இவ்வாறு ட்ரம்ப் கூறியதால், தொழில் துறை தொடர்பாக எச்சரிக்கும் விதமாக பேசியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
என்னை ஜனாதிபதியாக தேர்வு செய்யாவிட்டால் இரத்தக்களறி ஏற்படும் என டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு என்னை ஜனாதிபதியாக தேர்வு செய்யாவிட்டால் இரத்தக்களறி ஏற்படும் என டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு Reviewed by Madawala News on March 17, 2024 Rating: 5

விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை அழைத்து வந்து பிறந்த நாள் பார்ட்டி வைத்த பல்கலைகழக மாணவன் ..



தனியார் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தனது நண்பர்களுக்காக நடத்தப்பட்ட போதைப்பொருள் கொண்ட விருந்தொன்றை பொலிஸார் சோதனையிட்ட சம்பவம் ஒன்று அண்மையில் கஹதுடுவ பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது. 


இக்கதை பின்வருமாறு படிப்படியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.


இந்த மாணவனுக்கு 22 வயது. இவரது குடியிருப்பு தியத்தலாவ பிரதேசத்தில் உள்ளது. மாணவி தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். இந்த மாணவன் தனது படிப்பை மேற்கொள்வதற்காக ஹோமாகம அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தான். அங்குள்ள ஒரு வீட்டை இந்த மாணவன் மாதம் நாற்பத்தைந்தாயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் வாடகைக்கு எடுத்தான்.


மாணவியின் பிறந்தநாள் சமீபத்தில். அதற்காக தனது நண்பர்களுடன் பொழுதை கழிக்க விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார். இணைய உலாவல் மாணவர் தனது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள இணைய நண்பர்களை அழைத்தார். அன்று காலையிலிருந்து பிறந்தநாள் விழாவிற்கு நண்பர்கள் வருகிறார்கள். பல்வேறு தரத்தில் இருந்து ஆண்களும், பெண்களும் மாணவ, மாணவியரின் இல்லத்திற்கு வந்து வாழ்த்து தெரிவித்தனர். மதியம் விருந்து விறுவிறுப்பாக இருந்தது. பங்கேற்பாளர்கள் சாப்பிட்டு, குடித்து, மனதுக்கு நிறைவாகப் பாடினர்.


அபார்ட்மென்ட் வளாகத்தில் வசிப்பவர்களில் சிலருக்கு விருந்து ஒரு சலசலப்பைக் கண்டுபிடிக்க அதிக நேரம் எடுக்கவில்லை. விருந்து என்ற போர்வையில் குறித்த வீட்டில் சில சட்டவிரோத செயற்பாடுகளும் இடம்பெறுவதை சில குடியிருப்பாளர்கள் நீண்டகாலமாக அவதானித்திருந்தனர்.


இதன்படி, இது தொடர்பான தகவல் கஹதுடுவ பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுகஹதுடுவ பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் ஏ.எச்.கே. பிரியங்காவுக்கு கிடைத்த இந்தத் தகவலின் பேரில், அவரது அறிவுறுத்தலின்படி சம்பந்தப்பட்ட வீட்டைச் சோதனையிட அந்த நேரத்தில் ஒரு போலீஸ் குழு வீட்டிற்குச் செல்கிறது.


பார்ட்டி நடந்த வீட்டிற்கு போலீசார் வந்ததும் அனைவரும் திகைத்து நின்றனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் 100 வீதம் சரியானது எனவும், குறித்த வீட்டில் விருந்தோம்பல் என்ற போர்வையில் போதைப்பொருள் பாவனை இடம்பெறுவதையும் பொலிஸ் அதிகாரிகள் அவதானித்துள்ளனர்அதன்படி, சந்தேகத்தின் பேரில் அங்கிருந்த 27 பேரை பிடித்து விசாரித்தனர்.


அங்கு நடத்திய விசாரணையில் 20 மில்லி கிராம் ஆஷ் போதை மருந்து, மாத்திரைகள், செல்போன், வேகன்ஆர் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். குறித்த WagonR, காலியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது எனவும், இந்த விருந்தில் கலந்து கொள்வதற்காக காலியை சேர்ந்த மூவர் ஹோமாகமவிற்கு காரில் வந்துள்ளதாகவும், குறித்த வீட்டிற்கு போதைப்பொருள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 


குறித்த வீட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும் பணத்திற்காக தமது உடலையும் விற்பனை செய்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


கைது செய்யப்பட்டவர்களில் 21 பேர் ஹோமாகம வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் போதைப்பொருளை எடுத்துச் சென்றார்களா என்பதைக் கண்டறிந்து அவர்களின் பெற்றோரை அழைத்து வந்து ஒப்படைத்தனர். 


அலைக்கழிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும், போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர்களும் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று பெண்கள் தொடர்பாக சமூக அறிக்கை கோரப்பட்டது. அதனை அடுத்த நீதிமன்ற தினத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பதில் நீதவான் கெஸ்பேவா பொலிஸாருக்கு உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட 21 பேரும் 22 முதல் 28 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை அழைத்து வந்து பிறந்த நாள் பார்ட்டி வைத்த பல்கலைகழக மாணவன் .. விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை அழைத்து வந்து பிறந்த நாள் பார்ட்டி வைத்த பல்கலைகழக மாணவன் .. Reviewed by Madawala News on March 17, 2024 Rating: 5

அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர், தனது நீண்டகால தோழியுடன் திருமண பந்தத்தில் இணைந்தார்.



 அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தனது நீண்டகால தோழி சோபி அல்லோச்சசுடன் திருமண பந்தத்தில் இணைந்துகொண்டுள்ளார். 

அவுஸ்திரேலியாவின் இந்த ஒருபால் இனத்தவர்கள் திருமணம் உலகின் பேசுபொருளாகி உள்ளது 


அடிலெய்ட் ஹில்ஸ் பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்ற இந்த திருமண நிகழ்வில் பிரதமர் அன்டனி அல்பெனிஸ் உட்பட  தொழில்கட்சியின் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.


சமூக ஊடகங்களில் இது குறித்த தகவல்களை பதிவிட்டு;ள்ள பெனிவொங் இந்த விசேடமான நாளை எங்களின் பல நண்பர்கள் குடும்பத்தவர்கள் எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடிந்தமை குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.


தனது வாழ்க்கை துணையுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட படத்தையும் பெனிவொங் வெளியிட்டுள்ளார்.


வெளிவிவகார அமைச்சர் 2007 இல் தனது வாழ்க்கை துணையை சந்தித்தார்.இவர்களிற்கு இரு பெண்பிள்ளைகள் உள்ளனர்.எனினும் இருவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விடயங்களை மிகவும் இரகசியமாக பேணிவருகின்றனர்.

அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர், தனது நீண்டகால தோழியுடன் திருமண பந்தத்தில் இணைந்தார். அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர், தனது நீண்டகால தோழியுடன்  திருமண பந்தத்தில் இணைந்தார். Reviewed by Madawala News on March 17, 2024 Rating: 5

நாட்டில் வேலைவாய்ப்பு வீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு



பண்டிகை காலத்தையொட்டி நிறுவனங்களுக்கு புதிய பணியாளர்களை உள்வாங்குதல் காரணமாக நாட்டில் வேலைவாய்ப்பு வீதம் அதிகரித்துள்ளது.


அதன்படி கடந்த ஜனவரி மாத்தில் 48.5 சதவீதமாக காணப்பட்ட வேலைவாய்ப்பு வீதம் பெப்ரவரி மாதத்தில் 51 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


அத்துடன், பெப்ரவரி மாதத்தில் பணிகளுக்கான இலங்கை கொள்வனவாளர் முகாமையாளர் சுட்டெண் 53 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.


அத்தோடு, போக்குவரத்து மற்றும் நிதிச் சேவைகளின் துணைத் துறைகளிலும் மேம்பாடுகளை அவதானிக்க கூடியதாக உள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

நாட்டில் வேலைவாய்ப்பு வீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு நாட்டில் வேலைவாய்ப்பு வீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு Reviewed by Madawala News on March 17, 2024 Rating: 5

ஆயிரக்கணக்கான இஸ்ரேல் மக்கள் டெல் அவிவ் நகரில் மாபெரும் போராட்டம்



 ஹமாஸ் போராளிகள் பிடியில் உள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்கக் கோரி  இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன.

இருப்பினும், அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு, ஹமாஸால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் இன்னும் ஹமாஸின் காவலில் உள்ளனர்.


பணயக்கைதிகளின்  புகைப்படங்களை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அதிகாரிகள் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி பணயக்கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.


இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசும் போராட்டக்காரர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு வருகிறது.


ஆயிரக்கணக்கான இஸ்ரேல் மக்கள் டெல் அவிவ் நகரில் மாபெரும் போராட்டம் ஆயிரக்கணக்கான இஸ்ரேல் மக்கள்  டெல் அவிவ் நகரில் மாபெரும் போராட்டம் Reviewed by Madawala News on March 17, 2024 Rating: 5
Powered by Blogger.