கத்தார் வாழ் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட போட்டி
ஒலுவில் துறைமுகத்தை தாரைவார்க்கும் எண்ணத்துடன் மோடியின் பிரதிநிதியை கிழக்குக்கு அழைத்து வர வேண்டாம்.
சஜித் பிரேமதாசவை, ஈரான் ஜனாதிபதியுடன் சந்திக்க விடாமல் சதி செய்தனர் ; முஜிபுர் ரஹ்மான்
புதுவருட கொண்டாட்ட தினத்தில் முன்னாள் காதலனின் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த யுவதி சிகிச்சைகள் பலனின்றி இன்று உயிரிழப்பு.
கடந்த 174 வருடங்களில் பதிவாகாத அளவு புவியின் வெப்பநிலை, இந்த வருடத்தில் அதிகரிப்பு
synewsline பிரதம ஆசிரியர் சில்மியா யூசுப், கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பாடல் மற்றும் இதழியல் கற்கை நெறி பட்டம் பெற்றார்.
தடை செய்யப்பட்ட பகுதியால் ஓடிவந்து அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வரும் ஸ்ரீ லங்கன் விமானத்தில் ஏற முயன்ற நபர் கைது.
119க்கு சென்ற தகவலை அடுத்து ஆசிரியர் ஒருவரும் மாணவியும் பொலிஸாரால் கைது
பூக்களுக்கு அடியில் ஒளித்து வைத்து ஹெரோய்ன் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றத்தில் 'மல் கமலா' கைது
உங்கள் பல் பிரச்சனைகளுக்கு சரியான சிகிச்சையைப் பெறுங்கள் - சோதனை இலவசம்
கண்டி பிரதேச சொகுசு வீடொன்றில் தாயும் மகளும் நடத்தி வந்த விபச்சார விடுதி பொலிஸாரால் முற்றுகை - மூன்று பேர் கைது
அனைத்து வகையான வியாபாரம், அலுவலகங்கள், ஷோரூம்களுக்கு ஏற்ற இரண்டு மாடிகளை கொண்ட கட்டிடம் விற்பனைக்கு #மாவத்தகம
மழை பெய்ய சாத்தியமான பிரதேசங்கள் தொடர்பில் (எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிவித்தல்) வௌியிடப்பட்டது.
காதலியின் வீட்டுக்குச் சென்ற 36 வயது இளைஞன் மாயம் - "அவனால் இனி வர முடியாது" என காதலியின் தந்தை நண்பனிடம் தெரிவிப்பு
பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய பாரிய அளவிலான பெறுமதி கூடிய போதைப்பொருட்கள்
வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு தொடர்பில் மத்திய வங்கி தெரிவித்தவை
"ரணிலுக்கு செய்ய விடுவோம்" என்ற தொனியுடன் நாடு முழுதும் மோட்டார் சைக்கிள் பேரணி" - இன்று கொழும்பில் ஆரம்பம்.
வீதியின் குறுக்கே நின்றிருந்த மாட்டில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞன் பலி.
கடலரிப்பை உடனே தடுங்கள்! இல்லையேல் - இராஜினாமா செய்க !! -
ஜனாதிபதிக்கு கை கொடுப்பதை விடுத்து சாய்ந்தமருது உட்பட - அம்பாரை மாவட்ட கடலோர மண்ணரிப்பை தடுக்க நிரந்தர திட்டமொன்றை செயற்படுத்துங்கள்.
இவ்வாறு - முஸ்லிம் காங்கிரஸ் பிரதிப் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் - அம்பாரை மாவட்ட எம்பிக்களுக்கு பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அறிக்கை ஒன்றின் மூலமாக - யஹியாகான் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :-
சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்ற ரீதியில் - சாய்ந்தமருது பகுதி கடலரிப்பு உட்பட மாவட்ட கடலரிப்பு தொடர்பில் நான் உட்பட பலரும் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றோம். ஆனால் , எதுவித தீர்வும் இதுவரை எட்டப்படவே இல்லை.
தேசிய காங்கிரஸ் தலைவரும் - அண்மையில் சாய்ந்தமருதில் , கடலரிப்பை தடுத்து விட்டது போன்று வீடியோ , புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தார். ஆனால் , அதுவும் சாத்தியப்படவில்லை என்றே புலனாகியது.
ஜனாதிபதியுடன் கைகொடுத்து , அருகில் நின்று - புகைப்படம் எடுக்கும் மாவட்ட எம்பீமார் - சாய்ந்தமருது கடலரிப்பை தடுக்க ஆர்வம் காட்டுவதில்லை ஏன் ? என்ற கேள்வி மக்கள் மத்தியில் இன்று பரவலாக எழுந்துள்ளது.
இவ்வாறு - கைகொடுக்கும் சந்தர்ப்பத்திலாவது இந்த கடலரிப்பு குறித்து ஜனாதிபதியிடம் தெளிவாக பேசியிருக்க முடியும்.
அம்பாரை மாவட்ட எம்பீக்களே ! ஜனாதிபதியை இவ்வாறு தனித்தனியாக சந்திப்பதை விடுத்து கட்சி ரீதியாக அல்லது மாவட்ட எம்பீக்கள் அனைவரும் ஒன்றுபட்டு முகா. தலைவர் ஹக்கீமுடன் சென்று சந்திக்க முடியுமாக இருந்தால் இன்னும் வலுவாக இருக்கும். தனித்தனியாக சென்று சந்திப்பதனால்தான் சகல அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் இடைநடுவில் நிற்கின்றன என்பது மக்களின் ஆதங்கமாக இருக்கின்றது.
கடலரிப்பு காரணமாக மீனவ சமுகம் மட்டுமன்றி முழு மக்களுமே கடும் ஆவேஷத்துடன் மாவட்ட எம்பீமாருடன் இருக்கின்றனர். இந்த எம்பீக்களை தேடித் தேடி தோற்கடிக்க வேண்டும் என்ற ஆத்திரம் மக்கள் மத்தியில் மேலோங்கி உள்ளது.
தயவுசெய்து - சாய்ந்தமருது பிரதேச கடலரிப்பு உட்பட மாவட்ட கரையோர கடலரிப்பை தடுக்க நிரந்தர முயற்சி செய்யுங்கள்; இல்லையேல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்யுங்கள்.
அம்பாரை மாவட்ட எம்பிக்களுக்கு - இன்று நல்ல செல்வாக்கு அரசாங்கத்துடன் உள்ளதாக - அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகின்றது. அதைப் பயன்படுத்தியாவது - தலைவர் ஹக்கீமின் தலைமையில் சென்று - ஜனாதிபதியை சந்தித்து தீர்வைப் பெற முயற்சி செய்யுங்கள் என்றும் அந்த அறிக்கையில் - யஹியாகான் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித உடலை ஒத்த உருவத்துடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த சம்பவம் இலங்கையில் பதிவு
ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் தலதா மாளிகை தாக்குதல், காத்தான்குடி பள்ளிவாசல் தாக்குதல் என மத தலங்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றன... ஆனால் கோட்டபய ராஜபக்ஷவை மாத்திரமே விமர்சிக்கிறார்கள் ; மஹிந்தானந்த
மனிதர்கள் மட்டுமல்ல.... மிருகமும் சாப்பிட முடியாத அரிசி அரசாங்கத்தால் வழங்கப்பட்டது தொடர்பில் விசாரணை
கர்ப்பம் தரித்த சிறுமி ஒருவர், உடல் நீதியான உறவில் ஈடுபட்ட அறிகுறிகள் எதுவும் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்ததை அடுத்து அவர், மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட்ட சம்பவம் பதிவு.
உடலுறவு கொள்ளாமல் கர்ப்பம் தரித்த 13 வயது சிறுமி மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குருணாகல், ஹெட்டிப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியே இவ்வாறு கர்ப்பம் தரித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் வைத்தியர்கள் விசாரணைகளை மேற்கொண்ட போதும் இது தொடர்பில் எந்தவித தகவலும் கிடைக்காததால் சிறுமி மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வயிற்று வலியினால் அவதிப்பட்டுள்ள நிலையில் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வைத்திய பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மேலதிக பரிசோதனைகளில் பாதிக்கப்பட்ட சிறுமி உடலுறவு கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
மகளையும், மகளின் நண்பியையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்தை மீது பிரதேச மக்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து குறிப்பிட்ட தந்தை கைது.
தனது பன்னிரெண்டு வயது மகளையும் மகளின் 11 வயது தோழியையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரதேச மக்கள் வழங்கிய அறிவித்தலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர்.
சந்தேக நபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.