வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தேர்தலின் போது இலங்கைக்கு வந்து எமது கட்சிக்கு வாக்காளிக்க வேண்டும் ; அனுரகுமார

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு வெளிநாட்டு இலங்கையர்கள் முக்கியப் பங்காற்றியதாகக் கூறிய NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இம்முறை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் முதன்மைத் தேர்வாக தேசிய மக்கள் சக்தியே உள்ளது என்றார்.

ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தற்போது அமைப்பு மாற்றம் மற்றும் இலங்கைக்கான புதிய மாற்றத்திற்காக பிரச்சாரம் செய்து வருவதாகவும், அந்த மாற்றத்தை செய்வதற்கு NPP அவர்களின் விருப்பமாக இருப்பதாகவும் கூறினார்.

சுவீடனில் உள்ள இலங்கையர்களை இலங்கைக்கு வந்து NPPக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது NPPக்கு ஆதரவை வழங்க நிகழ்நிலையில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

"இலங்கையில் உள்ள உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் போதெல்லாம் அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்" என்று அவர் கூறினார்.

எதிர்வரும் தேர்தல்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் ஒரு முக்கிய சக்தியாக இருப்பதாகத் தெரிவித்த திஸாநாயக்க, அதிகாரத்தைப் பெறுவதற்கும், அதிகாரத்தைப் பெற்ற பின்னர் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் NPP க்கு ஆதரவளிக்குமாறு அவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

"கோட்டாபயவை ஆட்சிக்குக் கொண்டுவருவதில் வெளிநாட்டு இலங்கையர்கள் முக்கியப் பங்காற்றினர். அதேபோன்று அவர் மக்களின் அபிலாஷைகளை தகர்த்தெறிந்த பின்னர், கோட்டாபய வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற பொதுக்கருத்தையும் அவர்கள் உருவாக்கினர். வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அமைப்பு மாற்றத்திற்கான பொதுக் கருத்தை தற்போது உருவாக்கியுள்ளனர். அவர்களின் முக்கிய தேர்வு இன்று NPP ஆகும்," என்று அவர் கூறினார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடம் சமீபகாலமாக வேறு எந்த கட்சியாலும் இவ்வாறு தொடர்பு கொண்டு பேச முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தேர்தலின் போது இலங்கைக்கு வந்து எமது கட்சிக்கு வாக்காளிக்க வேண்டும் ; அனுரகுமார வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தேர்தலின் போது இலங்கைக்கு வந்து எமது கட்சிக்கு வாக்காளிக்க வேண்டும் ; அனுரகுமார Reviewed by Madawala News on April 28, 2024 Rating: 5

கத்தார் வாழ் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட போட்டி



Addon It நிறுவனத்தின் பிரதான அனுசரணையால் கத்தார் வாழ் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து ஸோன் கத்தார் ஏற்பாடு செய்த கரப்பந்தாட்ட போட்டியானது நேற்றைய தினம்(26) தோஹா கேம்பிரிட்ஜ் பாடசாலையில் 11 அணிகளாக பிரிக்கப்பட்டு இப்போட்டி நடைபெற்றது.

இதில் Z-12 அணியினை வீழ்த்தி Z Force அணியினர் சம்பியன் பட்டத்தினை தமதாக்கிக்கொண்டனர்.

இந்நிகழ்வில் அதிதியாக AddonIT நிறுவனத்தின் தலைவர்களான ஷாஹித் சராபத், இம்ரான் காசிம்,ஸ்கை தமிழ் ஊடகத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான ஜே.எம் பாஸித் மற்றும் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் முஹம்மட் ஷரஃப் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.




கத்தார் வாழ் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட போட்டி கத்தார் வாழ் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட போட்டி Reviewed by Madawala News on April 28, 2024 Rating: 5

ஒலுவில் துறைமுகத்தை தாரைவார்க்கும் எண்ணத்துடன் மோடியின் பிரதிநிதியை கிழக்குக்கு அழைத்து வர வேண்டாம்.



ஒலுவில் துறைமுகத்தை தாரைவார்க்கும் எண்ணத்துடன் மோடியின் பிரதிநிதியை கிழக்குக்கு அழைத்து வர வேண்டாம் - இந்திய தூதுவரின் வருகைக்கு எதிர்ப்பு !!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்ற பாதுகாப்பு மற்றும் பொருளாதார மையங்களை அண்மைய நாடொன்றுக்கு வழங்குவதற்கு ஒருசில அரசியல் கட்சிகள் முயற்சிப்பதை தேசப்பற்றுள்ள இலங்கையர்களாக ஒன்றிணைந்து நாம் முறியடிக்க வேண்டும். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் நமது அண்டை நாடான இந்தியாவை அண்மித்த மாகாணங்களாகும்.

எனவே, அந்த மாகாணங்களில் இத்தகைய பாதுகாப்பு மற்றும் பொருளாதார மையங்களை அபிவிருத்தி செய்ய அல்லது பராமரிக்க போகின்றோம் என்ற தோரணையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாம் ஒத்துழைப்பது புத்திசாலித்தனம் அல்ல. அது இலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்தாகும் என கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ.கலிலூர் ரஹ்மான் தெரிவித்தார்.


அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒலுவில் துறைமுகத்தினால் அண்மைய பிரதேசங்கள் கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்டு துறைமுகமும் ஒழுங்காக இயங்க முடியாமல் உள்ள சூழ்நிலையை சீரமைக்க இலங்கை அரசாங்கமும், கிழக்கு மாகாண ஆளுநரும் அலட்சியப்போக்கில் உள்ளதை காரணமாக வைத்து அந்த துறைமுகத்தை சீரமைக்கும் நோக்கில் இந்திய உயர்ஸ்தானிகர் கிழக்குக்கு விஜயம் செய்து குறித்த துறைமுகம் தொடர்பில் ஆய்வு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஊடக செய்திகளினூடாக அறிந்துகொள்ள முடிந்தது.


எதிர்காலத்தில் இந்தத் துறைமுகத்தை அண்டை நாடான இந்தியாவுக்குக் கொடுப்பதற்காக ஒலுவில் கடலை அழிக்க பொறுப்பான அதிகாரிகள் குழு எவரேனும் சதி செய்கிறார்களா? என்பதை அரசாங்கம் பரிசீலித்து, இந்தத் துறைமுகத்தை இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் எடுத்து, அபிவிருத்தி செய்து, அதனை முதலீட்டு திட்டங்களுக்குத் திறந்து, அங்கு வாழும் மக்களுக்கு ஆபத்துக்களோ நாட்டின் இறையாண்மைக்கு பங்கமோ வந்துவிடாத வகையில் பாரபட்சமில்லாது வெளிநாட்டுத் திட்டத்திற்கு கையளிப்பதில் முஸ்லிம் சமூக அரசியல் இயக்கம் என்ற வகையில் எமக்கு ஆட்சேபனை இல்லை. 


வடகிழக்கில் அண்டை நாடான இந்தியாவுக்கு நிறைவான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் வடக்கு மற்றும் மலையக பிரதேசங்களிலும் இந்தியாவுக்கு வழங்கப்படும் பெரும் மரியாதை போதுமானது.  இந்தியாவை மேலும் கௌரவிக்க வேண்டும் என்றால், புவியியல் ரீதியாக இலங்கையின் கிழக்கில் கொடுக்காமல் தெற்கு, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் கொடுப்பது நல்லது என்பது எங்களின் கருத்தாக உள்ளது. 


எமது இலங்கை மண்ணுக்குள் இந்திய அமைதிப் படை நுழைந்து செய்த அநியாயங்கள், பலாத்காரமாக திணித்த மாகாண சபை முறையான வெள்ளை யானையால் இந்தியாவைக் கண்டு நாம் மிகவும் பயப்படுகிறோம். இலங்கை உள்நாட்டு போரின் போது இந்தியா கடைபிடித்த ராஜதந்திர விடயங்கள், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதியின் அறிக்கையின் அடிப்படையில் பயன்படுத்தப்பட்ட கருத்துக்கள் இந்தியா தொடர்பில் எங்களுக்கு மேலும் அச்சத்தை கொடுத்துள்ளது. அதனாலே தான் இந்த நிலைப்பாட்டுக்கு நாங்கள் வரவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. 

நாங்கள் கடந்த காலங்களில் பாரத தேசமான இந்தியாவை நேசித்தோம். நாங்கள் முகலாயப் பேரரசை ஏற்றுக்கொண்டோம்.  எனினும், தற்போதைய இந்திய ஜனாதிபதி நரேந்திர மோடி மற்றும் அவரது குழுவினர் நாட்டின் சிறுபான்மை சமூகத்தின் மீது காட்டும் அக்கறையாலும், தற்போதைய தேர்தல் காலத்தில் முஸ்லிம் சமூகத்தை அவமானப்படுத்தும் வகையில் பேசியதாலும், முஸ்லிம் சமூகம் வாழும் கிழக்கு மாகாணத்தில் இந்திய பிரவேசத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. போன்ற காரணங்கள் ஏராளமாக உள்ளது.

எனவே முஸ்லிம் சமூகத்தை அவமரியாதை செய்யும் ஒரு நாட்டின் அரச தலைவருக்கு எதிராக அறிக்கை விடாமல் பயந்து அவர்களுக்கு அடிபணிந்து இருக்கும் அரசியல்வாதிகள் அந்த நாட்டின் தூதுவரை கிழக்கு மாகாணத்திற்கு அழைக்க வேண்டாம் என கிழக்கு மாகாணத்தில் அரசியல் செய்யும் அரசியல் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறோம். கிழக்கின் உரிமைகள், சொத்துக்கள், இருப்புக்கள், பாதுகாப்பு தொடர்பில் கிழக்கு மாகாணத்தின் மத, அரசியல் மற்றும் சிவில் அமைப்புக்களின் தலைவர்கள் விழிப்புடன் இருக்குமாறும் இவ்வாறான காட்டிக்கொடுப்புக்களுக்கு எதிராக எழுந்து நின்று குரல் கொடுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.- என்று தெரிவித்துள்ளார்
ஒலுவில் துறைமுகத்தை தாரைவார்க்கும் எண்ணத்துடன் மோடியின் பிரதிநிதியை கிழக்குக்கு அழைத்து வர வேண்டாம். ஒலுவில் துறைமுகத்தை தாரைவார்க்கும் எண்ணத்துடன் மோடியின் பிரதிநிதியை கிழக்குக்கு அழைத்து வர வேண்டாம். Reviewed by Madawala News on April 28, 2024 Rating: 5

சஜித் பிரேமதாசவை, ஈரான் ஜனாதிபதியுடன் சந்திக்க விடாமல் சதி செய்தனர் ; முஜிபுர் ரஹ்மான்



எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (28) நடந்த ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான், ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவரை சந்திக்காமை தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளிவந்த கருத்துகளுக்கு பதிலளித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தினை தொடரந்து கடந்த வாரம் சமூக ஊடகங்களில் பல நாடுகளின் வேண்டுகோளின் பிரகாரம் சஜித் பிரேமதாச ஈரான் ஜனாதிபதியை சந்திக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக பல தகவல்கள் வந்து கொண்டிருந்ததை நாம் அறிவோம்.


இந்த பிரச்சாரங்களை முன்னெடுக்கும் கூட்டத்தினரை எங்களுக்கு தெரியும். ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்ததைத் தொடர்ந்து சஜித் பிரேமதாச ஈரான் தூதுவருடன் பேசி சந்திப்பதற்கு நேரம் கேட்டார். எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமல்ல எதிர்க்கட்சித் தலைவரின் பாராளுமன்ற செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திசத் விஜயகுணவர்தனவுடன் ஈரான் தூதரத்தை தொடர்பு கொண்டு எதிர்க்கட்சித் தலைவருக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டார்.


ஈரான் ஜனாதிபதி நான்கரை மணித்தியாலம் அல்லது எத்தனை மணித்தியாலங்களே இங்கு இருக்கப் போகிறார், இதனால் இக்குறிப்பிட்ட நேரத்திற்கு பல வேலைகள் இருப்பதால் நேரம் தருவதற்கு முயற்சி செய்வதாக ஈரான் தூதுவர் தெரிவித்தார். ஆனால் இறுதி வரை நேரம் தரவில்லை.


பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இராபோசனம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார். அன்று காலையிலையே ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது இந்த இராபோசனத்தில் கலந்து கொள்ளுமாறு.

அன்று இரவு நடக்கும் இராபோசனத்துக்கு அன்று காலை அதுவும் தொலைபேசி அழைப்பு மூலம் அங்கு வேலை செய்யும் ஒருவர் அழைப்பு விடுக்கிறார்.


இந்நாட்டுக்கு வெளிநாட்டில் இருந்து இவ்வாறு பிரமுகர்கள் வந்தால் அதன் ஏற்பாடுகளை வெளிவிவகார அமைச்சே மேற்கொள்ளும். விருந்துபசாரங்களாக இருந்தாலும், பயணமாக இருந்தாலும், யாரை சந்திக்க வேண்டும் என்பதையெல்லாம் நிரல் படுத்துவது வெளிவிவகார அமைச்சே. இது தான் Protocol. ஆனால் ஈரான் ஜனாதிபதியின் விஜயத்தை வெளிவிவகார அமைச்சு ஒழுங்கு செய்யவில்லை. ஜனாதிபதி செயலாகத்தாலயே ஒழுங்கு செய்நப்பட்டிருந்தது.


அதனால் ஈரான் ஜனாதிபதியும் சஜித் பிரேமதாசவும் சந்திக்கக் கூடாது என ஜனாதிபதி செயலகத்திற்கு தேவை இருந்தது. இதனால் தான் திட்டமிட்டு சஜித் பிரேமதாச ஈரான் ஜனாதிபதியை சந்திக்க விடாமல் வேலை பார்த்தனர்.


அதனால் தான் அன்றைய இராபோசன விருந்துக்கு அன்று காலையில் தொலைபேசி வாயிழாக அறிவிக்கின்றனர். இவ்வாறான சதித்திட்டங்களை போட்டனர்.


சஜித் பிரேமதாசவிற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் இடையேயுள்ள உறவை சீர்குலைக்கவே இதனால் திட்டம் போட்டனர். நான் ஒன்றை தெளிவாக கூற வேண்டும். கொரோனா காலத்தில் ஜனாசா விடயத்தில் கோட்டாபய ராஜபக்ஷ எமது மையத்துகளை எரிக்க வேண்டும் என முடிவெடுத்த நேரத்தில், அடக்கக்கூடாது எரிக்க வேண்டும் என முடிவெடுத்த நேரத்தில், முஸ்லிம்கள் எல்லோரும் சேர்ந்து பொரளை கனத்தை மயானத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினோம். அந்த ஆர்ப்பட்டத்தில் எமது உரிமைகள் பாதுகாக்க சஜித் பிரேமதாச எம்மோடு கலந்து கொண்டார்.


பாராளுமன்றத்தில் தொடர்ந்து இதைப் பற்றி கதைத்தார்கள். இதைப் பற்றி பேசினார்கள். இது அநியாயம் என்று கூறினார்கள். இந்த உரிமையை பாதுகாக்க வேண்டும் என பேசினார்கள்.


ஆனால் தற்போதைய ஜனாதிபதி அன்று மௌனமாக இருந்தார்,கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இந்த விடயத்தில் ரணில் விக்ரமசிங்க மௌனமாக இருந்தார்.


கட்சித்தலைவர்கள் மௌனமாக இருந்தனர். அந்த உறவை சீர்குலைக்க சதித்திட்டங்களை தீட்டி வருகின்றனர்.


அதுமட்டுமல்ல பலஸ்தீனம் சம்பந்தமாக ஆரம்ப நாட்களில் இருந்து சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில், பலஸ்தீனத்தில் நடந்து வரும் கொடுமை, தாக்குதல்களுக்கு எதிராக தெளிவாக பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக போராடினார்.

ஆனால் இந்த அரசாங்கம் பலஸ்தீன் விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டில் செயற்பட்டு வருகிறது. ஒருபுறம் பலஸ்தீனத்துக்காக பணம் சேகரிக்கின்றனர், மறுபுறம் இஸ்ரோலில் தூதரகம் இருக்கத்தக்க ரணில் விக்ரமசிங்க வீசா வசதிகளை துரிதமாக வழங்க புதிய காரியாலயம் ஒன்றையும் திறக்கிறார். தூதரகமும் இருக்கிறது. தூதரகத்திற்கு பதிலாக இஸ்ரேலில் இன்னுமொரு பிரதேசத்தில் புதிய காரியாலயம் ஒன்றை ஒரு மாத்ததிற்கு முன்னர் திருந்தார்.இலங்கைக்கு துரிதமாக வருகை தரும் பொருட்டு வீசா வழங்கவே இது திறக்கப்பட்டது.


பலஸ்தீனத்திற்கு பணமும் சேர்கிறார் அதேபோல இஸ்ரேலில் வேலை செய்ய தொழிலாளர்களை இங்கு இருந்து அனுப்புகின்றனர். இஸ்ரேலில் வேலை செய்ய இந்த ரணில், ராஜபக்ச அரசாங்கம் இடம்கொடுத்துள்ளது. அது குறித்து பேசிகிறார்கள் இல்லை. இது குறித்து மௌனமாக இருக்கிறார்.


அதே போல தான் செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக தாக்குதல் நடத்துகிறார்கள். ஐரோப்பிய நாடுகள்,அமெரிக்க போன்ற நாடுகள் ஹூதி கிளர்ச்சியாளர்களை தாக்க கப்பல் அனுப்பியிருக்கிறார்கள்.


ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி என்ன செய்தார்? அவரும் அமெரிக்காவுடன் சேர்ந்து ஹூதி கிளர்ச்சியாளர்களை தாக்க கப்பல் அனுப்பினார்.


இது எப்படி வெளிவந்தது ? அவர் செல்லவில்லை.


எங்களுக்கு உதவியாக இலங்கை அரசாங்கமும் கப்பல் அனுப்பி இருப்பதாக அமெரிக்கா தூதுவர் கூறினார்.


இந்த முஸ்லிம் மக்களை கவர இங்கு பணம் சேகரிக்கிறார். அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளை சந்தோசப்படுத்த ஹூதி அங்கத்தவர்களை தாக்க கப்பல் அனுப்புகிறார். இது தான் இவர்களுடைய இரட்டை வேடம். எனவே இந்த ஜனாதிபதி செயலகத்தில் இருந்து சம்பளம் எடுக்கக் கூடிய சில சமூக ஊடகங்களை நடத்தும், சிலர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைப் படி சஜித் பிரேமதாச மற்றும் முஸ்லிம் சமூகத்திற்கிடையே நிலவிவரும் சிறந்த உறவை பிரிப்பதற்கு திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர்.இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
சஜித் பிரேமதாசவை, ஈரான் ஜனாதிபதியுடன் சந்திக்க விடாமல் சதி செய்தனர் ; முஜிபுர் ரஹ்மான் சஜித் பிரேமதாசவை, ஈரான் ஜனாதிபதியுடன் சந்திக்க விடாமல் சதி செய்தனர் ; முஜிபுர் ரஹ்மான் Reviewed by Madawala News on April 28, 2024 Rating: 5

புதுவருட கொண்டாட்ட தினத்தில் முன்னாள் காதலனின் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த யுவதி சிகிச்சைகள் பலனின்றி இன்று உயிரிழப்பு.



துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த யுவதி உயிரிழப்பு
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த யுவதி உயிரிழப்பு

மின்னேரிய கிரித்தலே பகுதியில் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற புதுவருட கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


கிரித்தலை பகுதியைச் சேர்ந்த ஜே.ஐ.கோசலா சாமோத்ய பண்டார என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.


கடந்த 14ஆம் திகதி இந்த யுவதி தனது வீட்டுக்குப் பக்கத்து வீடொன்றில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்ற போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த சிறுமியின் முன்னாள் காதலனே துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியதாக தெரியவந்துள்ளது.

அதேநேரம், பிரதேசவாசிகள் அவரை ஹிகுராக்கொட வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளனர்.


பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு பின்னர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர் அங்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மீண்டும் பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


அண்மையில், பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

புதுவருட கொண்டாட்ட தினத்தில் முன்னாள் காதலனின் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த யுவதி சிகிச்சைகள் பலனின்றி இன்று உயிரிழப்பு. புதுவருட கொண்டாட்ட தினத்தில் முன்னாள் காதலனின் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த யுவதி சிகிச்சைகள் பலனின்றி இன்று உயிரிழப்பு. Reviewed by Madawala News on April 28, 2024 Rating: 5

கடந்த 174 வருடங்களில் பதிவாகாத அளவு புவியின் வெப்பநிலை, இந்த வருடத்தில் அதிகரிப்பு



கடந்த 174 வருடங்களில் பதிவாகாத அளவில் இந்த வருடத்தில் புவியின் வெப்பநிலை அதிகரித்துள்ளது. அத்துடன் 65 ஆண்டுகளின் பின்னர் கடலின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.


2027ஆம் ஆண்டுக்குள், புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக உயர்வடைவதற்கு 66% வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், வெப்பநிலை வேகமாக அதிகரிக்கும் பட்சத்தில் பனிப்பாறைகள் உருகுவதும் அதிகரிக்கும்.

அத்துடன் கடல் மட்டமும் வேகமாக உயரக்கூடிய அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் எதிர்வரும் மே மாதம் வரையில் அதிகமான வெப்பநிலை பதிவாகும் எனவும், எல் நினோ உச்சத்தை அடைய வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அறிவித்துள்ளது.

இந்த வெப்பநிலை உயர்வு என்பது எதிர்வரும் காலங்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புவிக்கு எதிராக, அதன் வளங்களை அழிக்கும் அனைத்து நடவடிக்கைகளும் ஒரு தனி நபரிடமிருந்து ஆரம்பிக்கப்படுவது போன்று, புவி மாசடைவதை தடுக்கும் நடவடிக்கைகளும் தனி நபரிடமிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்.

மனிதர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க புவியின் வளங்கள் குறைந்து கொண்டே செல்கின்றது.

உலகில் ஒவ்வொரு நாளும் 700இற்கும் அதிகமான சிறுவர்கள் உயிரிழப்பதாகவும், ஒரு கோடிக்கும் அதிகமான சிறுவர்கள் தீவிர மாசடைந்த பகுதிகளில் வாழ்ந்து வருவதாகவும் யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

புவியில் உள்ள வாயு, நீர் உள்ளிட்ட சகல வளங்களையும் நாம் பயன்படுத்தி வருகின்றோம். சனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப எல்லையற்ற வளங்களும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றன. இந்த நிலையில் காலநிலை மாற்றம் போன்ற காரணிகளால் புவியிலுள்ள வளங்கள் மாசடையும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

புவியின் பாதுகாப்பிற்காக மாத்திரமின்றி மனிதனின் பாதுகாப்பிற்காகவும் அன்றாட வாழ்வில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.

இந்த நிலையில், எம்மை வாழ வைக்கும் புவி ஆரோக்கியமாக இருந்தால் தான், நாம் ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதைக் கருத்திற் கொண்டு, நிலம், நீர் மற்றும் காற்று மாசுபாட்டை குறைத்து, புவியைப் பாதுகாக்க உறுதியேற்க வேண்டும் என்றும் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அறிவித்துள்ளது.
கடந்த 174 வருடங்களில் பதிவாகாத அளவு புவியின் வெப்பநிலை, இந்த வருடத்தில் அதிகரிப்பு கடந்த 174 வருடங்களில் பதிவாகாத அளவு புவியின் வெப்பநிலை, இந்த வருடத்தில் அதிகரிப்பு  Reviewed by Madawala News on April 28, 2024 Rating: 5

synewsline பிரதம ஆசிரியர் சில்மியா யூசுப், கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பாடல் மற்றும் இதழியல் கற்கை நெறி பட்டம் பெற்றார்.



கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பாடல் மற்றும் இதழியல் கற்கை நெறி பட்டம் பெற்ற ஊடகவியலாளர் சில்மியா யூசுப்.


கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பாடல் மற்றும் இதழியல் கற்கை நெறியினை ஊடகவியலாளர் சில்மியா யூசுப் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.


ஊடகப்பயணத்தில் வளர்ந்து வரும் இவர்
2020 ம் ஆண்டு தகவல் தொடர்பாடல் மற்றும் இதழியல் கற்கை நெறியினை ஆரம்பித்து 92 மாணவர்களுடன் 2024 .04. 27ம் திகதி சனிக்கிழமை தகவல் தொடர்பாடல் மற்றும் இதழியல் பட்டத்தினை பெற்றுள்ளார்.


மேலும் இவரது இளம் வயதில் B.Ed, HNDE, Mass Media Communication Studies, Creative development & Graphics, MoJo Journalism , Migration Law & Policy போன்ற பாடநெறிகளை கற்று சான்றிதழ்களும் பட்டமும் பெற்றுள்ளார்.

அத்துடன் ZAZAM நிறுவனத்தில் Exemplary Youth leadership
ஒரு சிறந்த முன்மாதிரி இளைஞர் தலைமைத்துவத்திற்கான
fellowship இல் பங்கு பற்றி பயிற்சிகளையும் பெற்றுள்ளார்.

குறிப்பாக பலதுறைகளில் பயணிக்கும் இவர் சமூக ஆர்வலராகவும் செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடதக்கது.

இவர் synewsline இன் பிரதம ஆசிரியராகவும்,
கொழும்புடைம்சின் ஆசிரியராகவும் கடமையாற்றுவதோடு
The Great India News, Supeedsam இவற்றுக்கு நிருபராகவும் கடமையாற்றி வருகின்றார்.


synewsline பிரதம ஆசிரியர் சில்மியா யூசுப், கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பாடல் மற்றும் இதழியல் கற்கை நெறி பட்டம் பெற்றார். synewsline பிரதம ஆசிரியர் சில்மியா யூசுப், கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பாடல் மற்றும் இதழியல் கற்கை நெறி பட்டம் பெற்றார். Reviewed by Madawala News on April 28, 2024 Rating: 5

தடை செய்யப்பட்ட பகுதியால் ஓடிவந்து அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வரும் ஸ்ரீ லங்கன் விமானத்தில் ஏற முயன்ற நபர் கைது.



அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் பாதுகாப்பு உத்தரவை மீறி ஓடுபாதைக்கு அருகில் ஓடி விமானத்தில் ஏற முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிட்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கிடைத்த அழைப்பிற்கமைய, அவுஸ்திரேலிய பொலிஸ் அதிகாரிகள் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 30 வயதுடைய நபர், பாதுகாப்பு பகுதியினூடாக ஓடிச்சென்று தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை வரும் விமானத்தின் சரக்கு பெட்டிக்குள் அவர் நுழைய முயன்றதாகவும், பொருட்களை கையாளுபவர்கள் தலையிட்டு சந்தேக நபரை பொலிஸ் அதிகாரிகளின் காவலில் வைத்ததாகவும் கூறப்படுகிறது.

அவர் மீது வேறு எந்த குற்றமும் சுமத்தப்படவில்லை எனவும் அடுத்த 12 மாதங்களுக்கு சிட்னி சர்வதேச விமான நிலையத்திற்குள் நுழைய தடை விதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பகுதியால் ஓடிவந்து அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வரும் ஸ்ரீ லங்கன் விமானத்தில் ஏற முயன்ற நபர் கைது. தடை செய்யப்பட்ட பகுதியால் ஓடிவந்து அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வரும் ஸ்ரீ லங்கன் விமானத்தில் ஏற முயன்ற நபர் கைது. Reviewed by Madawala News on April 28, 2024 Rating: 5

119க்கு சென்ற தகவலை அடுத்து ஆசிரியர் ஒருவரும் மாணவியும் பொலிஸாரால் கைது



தான் தங்கியிருக்கும் விடுதில், மாணவி ஒருவர் இருந்தார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், அந்த விடுதியில் தங்கியிருக்கும் ஆசிரியர் ஒருவர், சனிக்கிழமை (27) கைது செய்யப்பட்டார். 

இந்த சம்பவம், ஹட்டன் பிராந்திய கல்வி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியரேசந்தேகத்தின் பேரில் கினிகத்தேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


 மற்றுமொரு பாடசாலையிலிருந்து 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியை ஆசிரியர் தங்கியிருக்கும் பாடசாலையின் ஆசிரியர் விடுதிக்கு அழைத்து வந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஆசிரியர் கினிகத்தேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் தற்போது பணிபுரியும் பாடசாலைக்கு முன்னதாக அந்த மாணவி கல்விப்பயிலும் பாடசாலையில் பல வருடங்களாக சேவையாற்றி வந்துள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.   

மேலதிக வகுப்பு ஆரம்பிப்பதற்கு தாமதமானதால், ஆசிரியரின் விடுதிக்கு தான் சென்றதாக பொலிஸாரிடம் மாணவி தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் இல்லத்திற்கு தான் சென்ற போதும் ஆசிரியர் தன்னை துன்புறுத்தவில்லை என பாடசாலை மாணவி ,பொலிஸாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.


பாடசாலை மாணவி மருத்துவ பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலை சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபரான ஆசிரியரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119க்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே, ஆசிரியர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
119க்கு சென்ற தகவலை அடுத்து ஆசிரியர் ஒருவரும் மாணவியும் பொலிஸாரால் கைது 119க்கு சென்ற தகவலை அடுத்து ஆசிரியர் ஒருவரும் மாணவியும் பொலிஸாரால் கைது Reviewed by Madawala News on April 28, 2024 Rating: 5

பூக்களுக்கு அடியில் ஒளித்து வைத்து ஹெரோய்ன் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றத்தில் 'மல் கமலா' கைது



ஹெரோய்ன் போதைப்பொருள் விற்பனை செய்ததாக கூறப்படும் பெண்ணொருவர், கெட்டம்பே, ராஜோபா வானராம விகாரைக்கு முன்பாக பூக்கடை ஒன்றை நடத்திக் கொண்டிருந்த போது இரண்டு கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக கண்டி ஊழல் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மல் கமலா என்ற பெண், பூக்களுக்கு அடியில் வைத்து தனக்குத் தெரிந்த வாடிக்கையாளர்களுக்கு ஹெராய்ன் போதைப்பொருள் விற்பனை செய்தது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சனிக்கிழமை (27) கைது செய்யப்பட்ட பெண்ணின் இரண்டு மகன்களும் ஹெரோய்ன் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய விசேட பொலிஸ் குழுவொன்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
பூக்களுக்கு அடியில் ஒளித்து வைத்து ஹெரோய்ன் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றத்தில் 'மல் கமலா' கைது பூக்களுக்கு அடியில் ஒளித்து வைத்து ஹெரோய்ன் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றத்தில் 'மல் கமலா' கைது Reviewed by Madawala News on April 28, 2024 Rating: 5

உங்கள் பல் பிரச்சனைகளுக்கு சரியான சிகிச்சையைப் பெறுங்கள் - சோதனை இலவசம்



உங்கள் பல் பிரச்சனைகளுக்கு சரியான சிகிச்சையைப் பெறுங்கள்.
தினமும் மாலை 5 மணி முதல்...

(அனைத்து சோதனைகளும் இலவசம்!!!)

இடம் : i pharma channeling center madawala

0718618493
0722664659

ඔබගේ ඕනෑම දන්ත ගැටලුවකට හරියටම Treatment එක කර ගන්න ,
i pharma dental surgery වෙත පැමිනෙන්න...
සෑම දිනකම සවස 5 සිට..


(පරීක්ෂා කිරිම් සියල්ල නොමිලේ !!!)

0718618493
0722664659




உங்கள் பல் பிரச்சனைகளுக்கு சரியான சிகிச்சையைப் பெறுங்கள் - சோதனை இலவசம் உங்கள் பல் பிரச்சனைகளுக்கு சரியான சிகிச்சையைப் பெறுங்கள் - சோதனை இலவசம் Reviewed by Madawala News on April 28, 2024 Rating: 5

கண்டி பிரதேச சொகுசு வீடொன்றில் தாயும் மகளும் நடத்தி வந்த விபச்சார விடுதி பொலிஸாரால் முற்றுகை - மூன்று பேர் கைது



கண்டி - ஹந்தான பிரதேசத்தில் உள்ள சொகுசு வீடொன்றில் தாயும் மகளும் நடத்தி வந்த விபச்சார விடுதியை சுற்றிவளைத்து, சந்தேக நபர்கள் மூவரை கைது செய்ததாக கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.


மகள் விபச்சார மையத்தின் மெனேஜராகவும், தாய் காசாளராகவும் பணிபுரிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த விபச்சார விடுதி குறித்து இரண்டு வாரங்களாக பொலிஸ் அதிகாரிகள் தொடர் விசாரணை செய்து வந்ததாகவும்

5000 ரூபாவு செலுத்தி வாடிக்கையாளர் போன்று சென்றே சந்தேகநபர்களை கைது செய்ததாகவும் கிடைக்கப்பெற்ற தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி பிரதேச சொகுசு வீடொன்றில் தாயும் மகளும் நடத்தி வந்த விபச்சார விடுதி பொலிஸாரால் முற்றுகை - மூன்று பேர் கைது கண்டி பிரதேச சொகுசு வீடொன்றில் தாயும் மகளும் நடத்தி வந்த விபச்சார விடுதி பொலிஸாரால் முற்றுகை - மூன்று பேர் கைது Reviewed by Madawala News on April 28, 2024 Rating: 5

அனைத்து வகையான வியாபாரம், அலுவலகங்கள், ஷோரூம்களுக்கு ஏற்ற இரண்டு மாடிகளை கொண்ட கட்டிடம் விற்பனைக்கு #மாவத்தகம



*BUILDING For SALE *கட்டிடம் விற்பனைக்கு

மாவத்தகம நகரில் கட்டிடம் விற்பனைக்கு உள்ளது

அனைத்து வகையான வியாபாரம், அலுவலகங்கள், ஷோரூம்களுக்கு ஏற்றது

❰❰ புதிதாக கட்டப்பட்ட இரண்டு அடுக்கு கட்டிடம்
❰❰ ஒவ்வொரு தளமும் 1000 சதுர அடி
❰❰ அனைத்து வசதிகளும் உள்ளன
(தண்ணீர் மின்சாரம், கழிப்பறை மற்றும் குளியலறை)

❰❰ மாதம் ரூ100,000/-க்கு மேல் வாடகை பெரும் இடம்
❰❰ விலை பேசித் தீர்மானிக்கலாம்

மேலும் விவரங்களுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும்
📞 0774235975

*》Suitable For All Kinds Of Business, Offices, Showrooms*
*》Newly Built Two Stored Building*
*》1000 sqft Each Floor*
*》All The Facilities Are Available*
Water, Electricity, Toilet And Bathroom

⬤ Receiving Rent Per Month Above Rs 100,000/-
⬤ Price Is Negotiable



அனைத்து வகையான வியாபாரம், அலுவலகங்கள், ஷோரூம்களுக்கு ஏற்ற இரண்டு மாடிகளை கொண்ட கட்டிடம் விற்பனைக்கு #மாவத்தகம அனைத்து வகையான வியாபாரம், அலுவலகங்கள், ஷோரூம்களுக்கு ஏற்ற இரண்டு மாடிகளை கொண்ட கட்டிடம் விற்பனைக்கு #மாவத்தகம Reviewed by Madawala News on April 28, 2024 Rating: 5

மழை பெய்ய சாத்தியமான பிரதேசங்கள் தொடர்பில் (எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிவித்தல்) வௌியிடப்பட்டது.



மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு வானிலை அறிவித்தலை வௌியிட்டு அந்த திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வடமத்திய மாகாணத்தில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் வானிலை நிலவும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை கோரியுள்ளது
மழை பெய்ய சாத்தியமான பிரதேசங்கள் தொடர்பில் (எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிவித்தல்) வௌியிடப்பட்டது. மழை பெய்ய சாத்தியமான பிரதேசங்கள் தொடர்பில் (எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிவித்தல்) வௌியிடப்பட்டது. Reviewed by Madawala News on April 27, 2024 Rating: 5

காதலியின் வீட்டுக்குச் சென்ற 36 வயது இளைஞன் மாயம் - "அவனால் இனி வர முடியாது" என காதலியின் தந்தை நண்பனிடம் தெரிவிப்பு



காதலியின் வீட்டுக்குச் சென்ற இளைஞன் காணாமல் போன சம்பவம் குளியாபிட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் இளைஞர் ஒருவரே காணாமல் போயுள்ளார்.

குளியாபிட்டிய - கபலேவ பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான சுசித ஜயவன்ச என்ற இளைஞன் தொடர்பில் ஆறு நாட்கள் ஆகியும் இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

இவர் கடந்த 22ஆம் திகதி குளியாப்பிட்டி வஸ்ஸாவுல்ல பிரதேசத்தில் உள்ள தனது காதலியின் வீட்டிற்கு தனது கடையின் ஊழியர் ஒருவருடன் சென்றுள்ளார்.

அவர் குறித்த வீட்டிற்குச் சென்ற நேரம் முதல் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

காணாமல் போவதற்கு முன்னர் சுசித சென்றதாக கூறப்படும் வீட்டின் உரிமையாளரான சிங்கிதி என்ற நபரால், சுசிதவின் நண்பருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

காணாமல் போனதாகக் கூறப்படும் சுசிதவின் நண்பர் கூறும் போது,

செவ்வாய்க்கிழமை இரவு 7:58 மணிக்கு சிங்கிதி என்ற நபர் எனக்கு போன் செய்தார். அப்பாவாக என் மகளுக்கு நியாயம் செய்தேன். இப்போது அதை பேசி பலனில்லை. அவனை நான் கொன்று விட்டேன். அவனால் இனி வர முடியாது" என்றார்.

சம்பவம் தொடர்பில் குளியாபிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகத்திற்கிடமான வகையில் மோட்டார் வாகனமொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது
காதலியின் வீட்டுக்குச் சென்ற 36 வயது இளைஞன் மாயம் - "அவனால் இனி வர முடியாது" என காதலியின் தந்தை நண்பனிடம் தெரிவிப்பு காதலியின் வீட்டுக்குச் சென்ற 36 வயது இளைஞன் மாயம் - "அவனால் இனி வர முடியாது" என காதலியின் தந்தை நண்பனிடம் தெரிவிப்பு Reviewed by Madawala News on April 27, 2024 Rating: 5

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய பாரிய அளவிலான பெறுமதி கூடிய போதைப்பொருட்கள்



பியகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 15 கிலோ 81 கிராம் ஐஸ் போதைப்பொருள், 14 கிலோ 527 கிராம் ஹேஷ் போதைப்பொருள் மற்றும் 941 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பண்டாரவத்தை பிரதேசத்தில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன் அவர் வாழ்ந்த வீடு மற்றும் காரினை சோதனை செய்தபோதே இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் போமிரிய கடுவலை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது இந்த சந்தேக நபர் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

நேற்று (26) இரவு பண்டாரவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது ஒருவரிடம் இருந்து 02 கிராம் 310 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் மற்றைய நபாிடம் இருந்து 05 கிராம் 310 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் 31 மற்றும் 40 வயதுடைய கடுவலை மற்றும் சியம்பலாபே பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய பாரிய அளவிலான பெறுமதி கூடிய போதைப்பொருட்கள் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய பாரிய அளவிலான பெறுமதி கூடிய போதைப்பொருட்கள் Reviewed by Madawala News on April 27, 2024 Rating: 5

வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு தொடர்பில் மத்திய வங்கி தெரிவித்தவை



இந்த ஆண்டு இம்மாதம் 26ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில், டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு 9 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.


மேலும், ஏனைய வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக, மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, ஜப்பானிய யெனுக்கு நிகராக ரூபாயின் மதிப்பு 20 சதவீதமும் , ஸ்ரேலிங் பவுண்ஸ்க்கு நிகராக 11 சதவீதமும் அதிகமாக இருந்தது.
யூரோவுக்கு நிகரான ரூபாவின் மதிப்பு 12.6 சதவீதமும் , இந்திய ரூபாய்க்கு நிகராக 9.2 சதவீதமும் அதிகமாக உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு தொடர்பில் மத்திய வங்கி தெரிவித்தவை வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு தொடர்பில் மத்திய வங்கி தெரிவித்தவை Reviewed by Madawala News on April 27, 2024 Rating: 5

"ரணிலுக்கு செய்ய விடுவோம்" என்ற தொனியுடன் நாடு முழுதும் மோட்டார் சைக்கிள் பேரணி" - இன்று கொழும்பில் ஆரம்பம்.



"ரணிலுக்கு இடம் கொடுப்போம் நாடு முழுவதும் மோட்டார் சைக்கிள் பேரணி" இன்று (27) காலை கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரைக்கு அருகில் ஆரம்பமானது.

நாடு முழுவதும் பல மாவட்டங்களில் பயணிக்கும் இந்த மோட்டார் சைக்கிள் பேரணி, எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி மாளிகாவத்தையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்திற்கு வர உள்ளது .

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான ருவான் விஜயவர்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த மோட்டார் சைக்கிள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்த தேசிய இளைஞர் முன்னணி உள்ளிட்ட இளைஞர் அமைப்புக்களின் பழைய உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இந்த மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெறவுள்ளது.


"ரணிலுக்கு செய்ய விடுவோம்" என்ற தொனியுடன் நாடு முழுதும் மோட்டார் சைக்கிள் பேரணி" - இன்று கொழும்பில் ஆரம்பம். "ரணிலுக்கு செய்ய விடுவோம்" என்ற தொனியுடன் நாடு முழுதும் மோட்டார் சைக்கிள் பேரணி" - இன்று கொழும்பில் ஆரம்பம். Reviewed by Madawala News on April 27, 2024 Rating: 5

வீதியின் குறுக்கே நின்றிருந்த மாட்டில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞன் பலி.



பொலன்னறுவை , வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவர் பொலன்னறுவை , வெலிகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞராவார்.


இவர் வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது வீதியின் குறுக்கே நின்று கொண்டிருந்த மாட்டின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரொருவரும் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிள் செலுத்தியவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
வீதியின் குறுக்கே நின்றிருந்த மாட்டில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞன் பலி. வீதியின் குறுக்கே நின்றிருந்த மாட்டில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞன் பலி. Reviewed by Madawala News on April 27, 2024 Rating: 5

கடலரிப்பை உடனே தடுங்கள்! இல்லையேல் - இராஜினாமா செய்க !! -





ஜனாதிபதிக்கு கை கொடுப்பதை விடுத்து சாய்ந்தமருது உட்பட - அம்பாரை மாவட்ட கடலோர மண்ணரிப்பை தடுக்க நிரந்தர திட்டமொன்றை செயற்படுத்துங்கள்.


இவ்வாறு - முஸ்லிம் காங்கிரஸ் பிரதிப் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் - அம்பாரை மாவட்ட எம்பிக்களுக்கு பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அறிக்கை ஒன்றின் மூலமாக - யஹியாகான் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :-


சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்ற ரீதியில் - சாய்ந்தமருது பகுதி கடலரிப்பு உட்பட மாவட்ட கடலரிப்பு தொடர்பில் நான் உட்பட பலரும் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றோம். ஆனால் , எதுவித தீர்வும் இதுவரை எட்டப்படவே இல்லை.


தேசிய காங்கிரஸ் தலைவரும் - அண்மையில் சாய்ந்தமருதில் , கடலரிப்பை தடுத்து விட்டது போன்று வீடியோ , புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தார். ஆனால் , அதுவும் சாத்தியப்படவில்லை என்றே புலனாகியது.


ஜனாதிபதியுடன் கைகொடுத்து , அருகில் நின்று - புகைப்படம் எடுக்கும் மாவட்ட  எம்பீமார் - சாய்ந்தமருது கடலரிப்பை தடுக்க ஆர்வம் காட்டுவதில்லை ஏன் ? என்ற கேள்வி மக்கள் மத்தியில் இன்று பரவலாக எழுந்துள்ளது. 


இவ்வாறு - கைகொடுக்கும் சந்தர்ப்பத்திலாவது இந்த கடலரிப்பு குறித்து ஜனாதிபதியிடம் தெளிவாக பேசியிருக்க முடியும். 


அம்பாரை மாவட்ட எம்பீக்களே ! ஜனாதிபதியை இவ்வாறு தனித்தனியாக சந்திப்பதை விடுத்து கட்சி ரீதியாக அல்லது மாவட்ட எம்பீக்கள் அனைவரும் ஒன்றுபட்டு முகா. தலைவர் ஹக்கீமுடன் சென்று சந்திக்க முடியுமாக இருந்தால் இன்னும் வலுவாக இருக்கும். தனித்தனியாக சென்று சந்திப்பதனால்தான் சகல அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் இடைநடுவில் நிற்கின்றன என்பது மக்களின் ஆதங்கமாக இருக்கின்றது.


கடலரிப்பு காரணமாக மீனவ சமுகம் மட்டுமன்றி முழு மக்களுமே கடும் ஆவேஷத்துடன் மாவட்ட எம்பீமாருடன் இருக்கின்றனர். இந்த எம்பீக்களை தேடித் தேடி தோற்கடிக்க வேண்டும் என்ற ஆத்திரம் மக்கள் மத்தியில் மேலோங்கி உள்ளது.


தயவுசெய்து - சாய்ந்தமருது பிரதேச கடலரிப்பு உட்பட மாவட்ட கரையோர கடலரிப்பை தடுக்க நிரந்தர முயற்சி செய்யுங்கள்; இல்லையேல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்யுங்கள்.


அம்பாரை மாவட்ட எம்பிக்களுக்கு  - இன்று நல்ல செல்வாக்கு அரசாங்கத்துடன் உள்ளதாக - அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகின்றது. அதைப் பயன்படுத்தியாவது - தலைவர் ஹக்கீமின் தலைமையில் சென்று - ஜனாதிபதியை சந்தித்து தீர்வைப் பெற முயற்சி செய்யுங்கள் என்றும் அந்த அறிக்கையில் - யஹியாகான் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடலரிப்பை உடனே தடுங்கள்! இல்லையேல் - இராஜினாமா செய்க !! - கடலரிப்பை உடனே தடுங்கள்! இல்லையேல் - இராஜினாமா செய்க !!  - Reviewed by Madawala News on April 27, 2024 Rating: 5

மனித உடலை ஒத்த உருவத்துடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த சம்பவம் இலங்கையில் பதிவு



மனித உடலை ஒத்த ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த சம்பவம், இலங்கையில் பதிவாகியுள்ளது.
தெனியாய - விஹாரஹேன, செல்வகந்த பகுதியில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.


குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்ட ஆடு ஒன்று, இவ்வாறு மனித உடலை ஒத்த ஆட்டுக்குட்டியை ஈன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


எவ்வாறாயினும், குறித்த ஆட்டுக்குட்டி பிறந்த சில நிமிடங்களிலேயே, உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உடலை ஒத்த உருவத்துடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த சம்பவம் இலங்கையில் பதிவு மனித உடலை ஒத்த உருவத்துடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த சம்பவம் இலங்கையில் பதிவு Reviewed by Madawala News on April 27, 2024 Rating: 5

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் தலதா மாளிகை தாக்குதல், காத்தான்குடி பள்ளிவாசல் தாக்குதல் என மத தலங்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றன... ஆனால் கோட்டபய ராஜபக்ஷவை மாத்திரமே விமர்சிக்கிறார்கள் ; மஹிந்தானந்த



(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தை அரசியலாக்குவதை பேராயரும், கத்தோலிக்க சபையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பேராயருக்கு சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரிடம் மாத்திரமா டீல் உள்ளது.

சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் வாக்களிக்குமாறு அஸ்கிரிய பீடம் குறிப்பிடவில்லை. கத்தோலிக்கர்களின் கௌரவத்தை இல்லாதொழிப்பதை கத்தோலிக்க சபை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் பல விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்காக மாத்திரம் 150 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பேராயரும், கத்தோலிக்க சபையும் மக்கள் மத்தியில் மாறுப்பட்ட நிலைப்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறது. கத்தோலிக்கர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக அவர்கள் குரல் கொடுக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

இருப்பினும் இந்த தாக்குதல் நாட்டில் இடம்பெற்ற முதலாவது தாக்குதல் அல்ல, தலதா மாளிகை, ஸ்ரீ மா விகாரை,காத்தான்குடி பள்ளிவாசல் தாக்குதல் என மத தலங்கள் மீது அடிப்படைவாதிகளாலும்,
பயங்கரவாதிகளாலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

தலதா மாளிகை தாக்குதல், அரந்தலாவ பிக்குகள் படுகொலை சம்பவங்களை சிங்கள பௌத்தர்கள் இழுத்துக் கொண்டு செல்லவில்லை. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்தாரிகளையும், தாக்குதலை தடுக்க தவறியவர்களையும் கத்தோலிக்க சபை குற்றஞ்சாட்டுவதில்லை. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை மாத்திரமே விமர்சிக்கிறார்கள். குற்றஞ்சாட்டுகிறார்கள்.

கத்தோலிக்க மக்களுக்கு இந்த நாட்டில் உள்ள கௌரவத்தை இல்லாதொழிக்க வேண்டாம் என பேராயரிடமும், கத்தோலிக்க சபையிடமும் கைக்கூப்பி வேண்டிக் கொள்கிறேன். சஜித்துக்கும், அநுரவுக்கும் வாக்களிக்குமாறு பேராயர் குறிப்பிடுகிறார். தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று இவரால் எவ்வாறு குறிப்பிட முடியும்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோட்டபய ராஜபக்ஷவுக்கு சிங்கள பௌத்தர்கள் வாக்களித்தார்கள். ஆனால் அஸ்கிரிய பீடம் கோட்டபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்குமாறு சிங்கள மக்களிடம் குறிப்பிடவில்லை. மத தலைவர்கள் அரசியல் மேடைகளுக்கு வருவதில்லை. சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரிடம் மாத்திரமா பேராயர் டீல் வைத்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களிக்குமாறு பேராயர் குறிப்பிடுகிறார்.ஆனால் குண்டுத்தாக்குதல்தாரிகளின் தந்தை மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினர். இந்த கட்சிக்கு வாக்களிக்குமாறு குறிப்பிடும் அளவுக்கு பேராயர் ஏன் தள்ளப்பட்டுள்ளார் என்பதை அறியவில்லை. ஆகவே இவரது கருத்துக்கள் துரதிஷ்டவசமானது.

தலதா மாளிகைக்கு தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் நாங்கள் ஒருபோதும் சிங்களவர்களுக்கு மாத்திரம் வாக்களிக்குமாறு குறிப்பிடவில்லை. ஆகவே உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களை அரசியலுக்காக பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டாம் என்பதை கத்தோலிக்க சபையிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் தலதா மாளிகை தாக்குதல், காத்தான்குடி பள்ளிவாசல் தாக்குதல் என மத தலங்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றன... ஆனால் கோட்டபய ராஜபக்ஷவை மாத்திரமே விமர்சிக்கிறார்கள் ; மஹிந்தானந்த ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் தலதா மாளிகை தாக்குதல், காத்தான்குடி பள்ளிவாசல் தாக்குதல் என மத தலங்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றன... ஆனால் கோட்டபய ராஜபக்ஷவை மாத்திரமே விமர்சிக்கிறார்கள் ;  மஹிந்தானந்த Reviewed by Madawala News on April 27, 2024 Rating: 5

மனிதர்கள் மட்டுமல்ல.... மிருகமும் சாப்பிட முடியாத அரிசி அரசாங்கத்தால் வழங்கப்பட்டது தொடர்பில் விசாரணை



நாட்டின் சில பகுதிகளுக்கு வழங்கப்பட்ட தரக்குறைவான அரிசி தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (26.04.2024) கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.

சபை நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


“ஏப்ரல் மாதம் முதல் அரிசி வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டத்தை நாங்கள் பாராட்டுகிறோம்.


ஆனால் தேர்வு நடைமுறையில் கடுமையான சிக்கல்கள் உள்ளன. சில இடங்களில் தரமற்ற அரிசி விநியோகம் நடக்கிறது. அவ்வாறானதொரு சம்பவம் ஹாலிஎல பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.


ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றும் ராஜித கீர்த்தி தென்னகோன் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

விநியோகிக்கப்பட்ட அரிசியின் தரத்தை பராமரிக்க வேண்டும். ஏனெனில் இவை நம் நாட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்டவை” என கூறியுள்ளார்..

தகவல் விபரம்....
நேற்று (25) ஹாலிஎல பிரதேசத்தில் ஜய maga திட்டத்தில் வழங்கிய இலவச அரிசியைப் பெற்றுக்கொண்ட நபர் ஒருவர், கெட்டுப்போன, உண்பதற்குத் தகுதியற்ற அரிசி பொதியை பெற்றுக்கொண்டதாகக் கூறி ஹாலிஎல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.


ஹாலிஎல, மெதபிடகம பிரதேசத்தைச் சேர்ந்த எச்.பண்டார என்பவர், அரசாங்கத்தினால் தமக்கு வழங்கப்பட்ட அரிசி பாவனைக்குத் தகுதியற்றது எனக் கூறி, தனக்குக் கிடைத்த அரிசியில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு, ஹாலிஎல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குச் சென்று, இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஹாலியால பொதுச் சுகாதார பரிசோதகர் திரு.தனுஜய பிரதீப் தெரிவிக்கையில், ஹாலியால மெதபிடகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் ஹாலியால சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு வந்து 10 கிலோ அரிசி அடங்கிய பையில் அரிசி இருந்ததாக முறைப்பாடு செய்துள்ளார். அரசாங்கம் கெட்டுப்போனது மற்றும் நுகர்வுக்கு தகுதியற்றது என்பது தொடர்பான விசாரணைகள் செய்யப்படுகின்றன.


மனிதர்கள் மட்டுமல்ல.... மிருகமும் சாப்பிட முடியாத அரிசி அரசாங்கத்தால் வழங்கப்பட்டது தொடர்பில் விசாரணை மனிதர்கள் மட்டுமல்ல....  மிருகமும் சாப்பிட முடியாத அரிசி அரசாங்கத்தால் வழங்கப்பட்டது தொடர்பில் விசாரணை Reviewed by Madawala News on April 26, 2024 Rating: 5

கர்ப்பம் தரித்த சிறுமி ஒருவர், உடல் நீதியான உறவில் ஈடுபட்ட அறிகுறிகள் எதுவும் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்ததை அடுத்து அவர், மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட்ட சம்பவம் பதிவு.



 உடலுறவு கொள்ளாமல் கர்ப்பம் தரித்த 13 வயது சிறுமி மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.


குருணாகல், ஹெட்டிப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியே இவ்வாறு கர்ப்பம் தரித்துள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் வைத்தியர்கள் விசாரணைகளை மேற்கொண்ட போதும் இது தொடர்பில் எந்தவித தகவலும் கிடைக்காததால் சிறுமி மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.


இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வயிற்று வலியினால் அவதிப்பட்டுள்ள நிலையில் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  பின்னர் வைத்திய பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.


இந்நிலையில், மேலதிக பரிசோதனைகளில் பாதிக்கப்பட்ட சிறுமி உடலுறவு கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கர்ப்பம் தரித்த சிறுமி ஒருவர், உடல் நீதியான உறவில் ஈடுபட்ட அறிகுறிகள் எதுவும் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்ததை அடுத்து அவர், மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட்ட சம்பவம் பதிவு. கர்ப்பம் தரித்த சிறுமி ஒருவர், உடல் நீதியான உறவில் ஈடுபட்ட அறிகுறிகள் எதுவும் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்ததை அடுத்து அவர்,  மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட்ட சம்பவம் பதிவு. Reviewed by Madawala News on April 26, 2024 Rating: 5

மகளையும், மகளின் நண்பியையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்தை மீது பிரதேச மக்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து குறிப்பிட்ட தந்தை கைது.



 தனது பன்னிரெண்டு வயது மகளையும்  மகளின் 11 வயது தோழியையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர்.


பிரதேச  மக்கள் வழங்கிய அறிவித்தலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர்.


சந்தேக நபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மகளையும், மகளின் நண்பியையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்தை மீது பிரதேச மக்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து குறிப்பிட்ட தந்தை கைது. மகளையும், மகளின் நண்பியையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்தை மீது பிரதேச மக்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து குறிப்பிட்ட தந்தை கைது. Reviewed by Madawala News on April 26, 2024 Rating: 5
Powered by Blogger.