வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களால் இவ்வருடம் முதல் 4 மாதங்களில் மட்டும் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு கிடைத்தது.



புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகளவான பணத்தினை சட்டரீதியான வங்கி முறையில் இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் மட்டும் புலம்பெயர் தொழிலாளர்கள், சுமார் 543 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இது 11.4 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த வருடம் ​​ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்த நாட்டிற்கு வெளிநாட்டுப் பணம் அனுப்பப்பட்ட தொகை 19.7 சதவீதத்தால் அதிகரித்துள்ளது
வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களால் இவ்வருடம் முதல் 4 மாதங்களில் மட்டும் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு கிடைத்தது. வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களால் இவ்வருடம் முதல் 4 மாதங்களில் மட்டும் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு கிடைத்தது. Reviewed by Madawala News on May 12, 2024 Rating: 5

தொல்பொருட்களை வீட்டில் மறைத்து வைத்திருந்த நபர் கைது - புத்தளம் பொலிஸ் குற்ற விசாரணை பிரிவினரிடம் ஒப்படைப்பு



கற்பிட்டி - ஆலங்குடா பகுதியில் வீடொன்றிலிருந்து , சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் , தங்கத்தலானது என சந்தேகிக்கப்படும் தொல்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் சனிக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார்.

கற்பிட்டி, ஏத்தாளை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படைக்கு சொந்தமான விஜய கடற்படையினரும், புத்தளம் பிரிவு குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளும் இணைந்து குறித்த பகுதியில் விஷேட சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்ட நிலையில் வீடொன்றினை சோதனை செய்த போது, அந்த வீட்டிற்குள் சட்டவிரோதமாக பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தொல்பொருட்கள் மிகவும் சூட்சகமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

இதன்போது ,தங்கத்தில் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாள் ஒன்றும், ஆமை , குதிரை மற்றும் இரண்டு சிறிய சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், இது தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், பறிமுதல் செய்யப்பட்ட தொல்பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் குற்ற விசாரணை பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர் .

ரஸீன் ரஸ்மின்
தொல்பொருட்களை வீட்டில் மறைத்து வைத்திருந்த நபர் கைது - புத்தளம் பொலிஸ் குற்ற விசாரணை பிரிவினரிடம் ஒப்படைப்பு தொல்பொருட்களை வீட்டில் மறைத்து வைத்திருந்த நபர் கைது - புத்தளம் பொலிஸ் குற்ற விசாரணை பிரிவினரிடம் ஒப்படைப்பு Reviewed by Madawala News on May 12, 2024 Rating: 5

ட்ரோன் தொழில் நுட்ப முறை மூலமாக கிருமி நாசினி தெளிக்கும் கிண்ணியா விவசாயிகள்



ஹஸ்பர் ஏ.எச்_

முதன் முறையாக கிண்ணியா விவசாயிகள் ட்ரோன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தங்களது நெற் பயிர்ச் செய்கைகளுக்கு கிருமி நாசினியை விசிரினர். கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட பீங்கான் உடைந்தாரு,வன்னியனார் மடு விவசாய நிலத்தில் கலை கொள்ளிகளை இன்று (12) விசிரினர். ட்ரோன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி முதன் முறையாக இதனை முன்னெடுத்ததாகவும் இதன் மூலம் புதிய அனுபவம் பயிற்சிகளை பெற்றதாகவும் அப் பகுதி விவசாய சம்மேளன ஊடக பேச்சாளர் எம்.எம்.மஹ்தி தெரிவித்தார்.
பல ஏக்கர் வயல் நிலங்களுக்கு நெற் செய்கையின் போது சிறந்த அறுவடை இதன் மூலம் கிடைக்கப் பெறவும் இலகுவாகவும் புதிய தொழில் நுட்பம் ஊடாக முன்னெடுப்பது இதுவே முதன் முறையாகும் என்பது கிடைக்கத்தக்கது.
ட்ரோன் தொழில் நுட்ப முறை மூலமாக கிருமி நாசினி தெளிக்கும் கிண்ணியா விவசாயிகள் ட்ரோன் தொழில் நுட்ப முறை மூலமாக கிருமி நாசினி தெளிக்கும் கிண்ணியா விவசாயிகள் Reviewed by Madawala News on May 12, 2024 Rating: 5

பசுக்களை கொல்வதற்கு எதிராக ஆர்பாட்டம்



இலங்கை சிவசேனை சிவத் தொண்டர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பசுக்கொலைக்கு ஏதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்று காலை 09.30 மணிக்கு இலங்கை சிவசேனை தலைவர் மூதறிஞர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தலைமையில் நடைபெற்றது.


காசாவுக்கு ஒரு நீதியா?இந்துக்களுக்கு இன்னொரு நீதியா?

நிறைவேற்று நிறைவேற்று 
பசுவதைதடைச் சட்டத்தினை நிறைவேற்று, இலங்கை சிவபூமி 

முகமதியரே புனித சின்னத்தினை சிதைக்காதீர், 


பொஸிசாரே, பொஸிசாரே பசுத்திருடர்களை கைது செய், 

பசுக்கள் மீதும் இறை
தூதர்கள் மீதும் 
கைவைத்தால்
அழிவாய், 

அறுக்காதே அறுக்காதே கோமாதாவினை அறுக்காதே,

 கோமாதாவினை வெட்டி இந்து சமயத்தவர்களின் மனதில் ஈட்டிபாய்ச்சாதே? 


என்ற பாததைகள் ஏந்திய வண்ணம் கோசங்கள் இட்டு தமது எதிர்ப்பு போட்டத்தினை முன்னெடுத்தனர்.


இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் தமது ஆதரவினை வழங்க சிவபூமி அறக்கட்டளை தலைவரும், தெல்லிப் பளை துர்க்கா தேவஸ்தான தலைவரும் ஆகிய கலாநிதி ஆறு. திருமுருகன், யாழ்ப்பாணம் மத்தியஸ்தான நாகவிகாரை விகாராதிபதி விமலரத்தன தேரர், இந்து சமயப்பேரவையின் தலைவர் சக்தி கீரிவன் மற்றும் இலங்கை சிவசேனை சிவத்தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டு தமது பசுக்கொலைக்கு ஏதிராக தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

பு.கஜிந்தன்
பசுக்களை கொல்வதற்கு எதிராக ஆர்பாட்டம் பசுக்களை கொல்வதற்கு எதிராக ஆர்பாட்டம் Reviewed by Madawala News on May 12, 2024 Rating: 5

மின்னல் தாக்கத்தினால் முற்றாக சேதமடைந்த வைத்தியசாலை - சுமார் 50 மில்லியன் ரூபாவரை பொருள்சேதம்



வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு (ETU) கடும் மழையுடன் கூடிய மின்னல் தாக்கத்தினால் முற்றாக சேதமடைந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற மின்னல் தாக்கத்தினால் வைத்தியசாலையில் இருந்த அனைத்து மின் உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளதுடன், மின்னல் தாக்கத்தினால் கட்டிடமும் சேதமடைந்துள்ளது.



விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று (11) வைத்தியசாலைக்கு விஜயம் செய்து வைத்தியசாலைக்கு ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார்.

மின்னல் தாக்கத்தால் ETU க்கு ஏற்பட்ட சேதங்கள் சுமார் ரூ. 50 மில்லியன் ஆகுமென அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் நேற்று (11) தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுடன் தொலைபேசியில் கலந்துரையாடிய அமைச்சர், இந்த அவசர சிகிச்சைப் பிரிவை புனரமைப்பதற்கு பணம் ஒதுக்கப்படும் எனவும், ஆளுநர் இன்று வைத்தியசாலையை பார்வையிடுவார் எனவும் தெரிவித்தார்.

மின்னல் தாக்கத்தின் போது பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூன்று நோயாளர்கள் காயமடையவில்லை. எவ்வாறாயினும், மின்னல் தாக்கத்தின் பின்னர் தீ பரவியமையினால் நோயாளிகளை வெளியேற்ற பெரும் முயற்சிகளில் ஈடுபட வேண்டியிருந்ததாக வைத்தியசாலை ஊழியர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.
மின்னல் தாக்கத்தினால் முற்றாக சேதமடைந்த வைத்தியசாலை - சுமார் 50 மில்லியன் ரூபாவரை பொருள்சேதம் மின்னல் தாக்கத்தினால் முற்றாக சேதமடைந்த வைத்தியசாலை - சுமார் 50 மில்லியன் ரூபாவரை பொருள்சேதம் Reviewed by Madawala News on May 12, 2024 Rating: 5

வினாத்தாளை புகைப்படம் எடுத்து, வட்ஸ்அப் குரூப்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பில் கண்டியில் ஆசிரியர் ஒருவர் கைது.



க.பொ.த சாதாரண தர ஆங்கில மொழி வினாத்தாளை புகைப்படம் எடுத்து, வட்ஸ்அப் குரூப்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பாக தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் குறித்த ஆசிரியரை கண்டியில் வைத்து இன்று (12) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
வினாத்தாளை புகைப்படம் எடுத்து, வட்ஸ்அப் குரூப்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பில் கண்டியில் ஆசிரியர் ஒருவர் கைது. வினாத்தாளை புகைப்படம் எடுத்து, வட்ஸ்அப் குரூப்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பில் கண்டியில் ஆசிரியர் ஒருவர் கைது. Reviewed by Madawala News on May 12, 2024 Rating: 5

நாட்டிலுள்ள பிரதான கட்சிகள் பலவும் இன்று எமது ஐக்கிய மக்கள் சக்தியைக் கண்டு அஞ்சுகின்றன



(எம்.மனோசித்ரா)

நாட்டிலுள்ள பிரதான கட்சிகள் பலவும் இன்று ஐக்கிய மக்கள் சக்தியைக் கண்டு அஞ்சுகின்றன. எனவே, அவை அனைத்தும் ஒன்றிணைந்து சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருக்கின்றன. ஆனால் எந்தவொரு சதித்திட்டத்துக்கும் மக்கள் ஏமாறப் போவதில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை (11) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட விவசாயிகள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இவ்வாண்டிறுதியில் பொது மக்கள் யுகம் உருவாகும். எம்மைப் பற்றி சிந்தித்து அனைவரும் அச்சமடைந்துள்ளனர். மொட்டு, யானை, திசைக்காட்சி என அனைவரும் எம்மைக் கண்டு அஞ்சுவதால் அவர்கள் அனைவரும் இணைந்து எமக்கெதிராக சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றனர். எந்தவொரு சதித்திட்டத்தாலும் 220 இலட்சம் மக்களை ஏமாற்ற முடியாது.

அதிகாரம் எதுவுமின்றி பல சேவைகளை நாட்டுக்கு செய்யும் ஒரேயொரு எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே. அதே போன்று தற்போது வழங்கும் சகல வாக்குறுதிகளையும் எமது ஆட்சியில் நிச்சயம் நிறைவேற்றுவேன் என உறுதியளிக்கின்றேன். புதிய நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத்தை அடுத்த மட்டத்துக்கு எடுத்துச் செல்வோம்.

விவசாயிகளின் பயிர்செய்கைக்கான ஸ்திர விலை நிர்ணயிக்கப்படும். அதேபோன்று விவசாயிகளுக்கான ஓய்வூதிய முறைமையையும் நாம் மறக்கவில்லை. இவ்வாண்டிறுதிக்குள் விவசாயிகளுக்கான ஓய்வூதிய முறைமையை நடைமுறைப்படுத்துவோம். யானை - மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படும். விவசாயிகளின் விவசாய நிலத்துக்கான உரிமம் வழங்கப்படும்.

சஜித் பிரேமதாச எந்தவொரு நாட்டுக்கும் அடிபணிய மாட்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதே போன்று வர்த்தக நிறுவனங்களால் என்னை விலைக்கு வாங்கவும் முடியாது. எமது மக்களின் உரிமைகளைப் பாதுகாத்துக்கொண்டு, வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவோம் என்றார்.


நாட்டிலுள்ள பிரதான கட்சிகள் பலவும் இன்று எமது ஐக்கிய மக்கள் சக்தியைக் கண்டு அஞ்சுகின்றன நாட்டிலுள்ள பிரதான கட்சிகள் பலவும் இன்று எமது ஐக்கிய மக்கள் சக்தியைக் கண்டு அஞ்சுகின்றன Reviewed by Madawala News on May 11, 2024 Rating: 5

அடுத்த வருடம் ஒரு பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆராய்ச்சி பணிகள் ஆரம்பிக்கப்படும்.



புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆராய்ச்சிப் பணிகளுக்கு அடுத்த வருடம் ஒரு பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.



புத்தரின் போதனைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை இவ்வருடத்தில் ஆரம்பிக்க எதிர்பார்த்த போதிலும், செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான சட்டங்கள் இதுவரை சமர்ப்பிக்கப்படாததால், அடுத்த வருடம் வரை அந்தப் பணிகளை ஒத்திவைக்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, புதிய சட்டங்களை நிறைவேற்றிய பிறகு அடுத்தகட்ட பணிகள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.



மொரட்டுவ பௌத்த மன்ற மண்டபத்தில் இன்று (11) நடைபெற்ற மொரட்டுவ இலங்கை பௌத்த சங்கத்தின் 100 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.



1924 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி ஆர்தர் வி.தியெஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட மொரட்டுவ இலங்கை பௌத்த சங்கத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மொரட்டுவ பௌத்த மண்டபத்திற்கு 1925 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.



இந்தக் கட்டிடம் 1929 ஜூன் 24 ஆம் திகதி மொரட்டுவ பௌத்தர்களின் பௌத்த தலைமையகமாக அப்போதைய இலங்கை ஆளுநர் ஹெர்பர்ட் ஜே. ஸ்டென்லி இதனைத் திறந்து வைத்தார்.



மொரட்டு மகா வித்தியாலயத்திற்கான அடிக்கல்லும் அன்றைய தினம் நடப்பட்டது.



நூறு வருடங்களைப் பூர்த்தி செய்யும் மொரட்டுவ பௌத்த மண்டபத்தின் திருத்தப் பணிகள் அரசாங்க செலவில் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.



ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பிற்பகல் மொரட்டுவ பௌத்த விகாரைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார். மொரட்டுவ பௌத்த சங்கத்தின் 100 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வளாகத்தில் சந்தன மரச்செடியை நடும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.



மொரட்டுவ பௌத்த சங்கத்தின் உப தலைவர் தம்மிக்க சந்திரநாத் பெர்னாண்டோ, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நூற்றாண்டு நினைவுப் பதிப்பை வழங்கி வைத்தார்.



மொரட்டுவை பௌத்த சங்கத்தின் மூத்த உறுப்பினர் ரஞ்சித் கமநாயக்க, உப தலைவர்களான பிரதீப் ஸ்ரீயந்த பெர்னாண்டோ, தம்மிக்க சந்திரநாத் பெர்னாண்டோ, காமினி பெரேரா, பிரதேச செயலாளர் கீர்த்தி பெரேரா ஆகியோர் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசை வழங்கி வைத்தனர்.

'இன்று முழு உலகமும் காலநிலை மாற்றத்தால் பெரும் அச்சுறுத்தலைச் சந்தித்து வருகிறது. இந்நாட்களில் நாம் எதிர்கொள்ளும் கடுமையான சூரிய வெப்பம் நாம் இதுவரை சந்திக்காத ஒரு சூழ்நிலை. இந்தக் காலநிலை வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டிய கடினமான சூழ்நிலை இன்று உருவாகியுள்ளது. இத்துடன், கடும் நீர் பிரச்சினையையும் சந்திக்க வேண்டியுள்ளது. பௌத்த தர்மத்தின்படி இந்த சிக்கலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

அடுத்த இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களில் உலகின் முக்கிய பிரச்சினையாக காலநிலை மாற்றப் பிரச்சினை மாறும். புத்தரின் போதனைகளின்படி பார்த்தால் நாகரீகத்தின் பேராசையின் காரணமாகவே நாம் இந்த நிலையை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது. அனைவரும் வேகமாக முன்னேற விரும்பினர். வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அதன்படி மனித சமுதாயம் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவித்துள்ளது. எனவே, காலநிலை மாற்றத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதில் நாம் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.



மேலும் உலகம் இன்று விரைவான தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. குறிப்பாக 1945 இல் அணுகுண்டு வெடித்தபோது, இனி தொழில்நுட்ப முன்னேற்றம் இருக்காது என்று கருதப்பட்டது. ஆனால் தற்போது அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்பத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் பாடசாலையில் படிக்கும் போது கணனி, கையடக்கத்தொலைபேசி எதுவும் இருக்கவில்லை. ஆனால் தற்போது, நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால், இன்று செயற்கை நுண்ணறிவு வரை சென்றுள்ளோம்.



இப்போது இருப்பது செயற்கை நுண்ணறிவின் ஆரம்பமாகும். அடுத்த இரண்டு தசாப்தங்களில் செயற்கை நுண்ணறிவு எங்கே செல்லும் என்ற கேள்வியை நாம் எதிர்கொள்கிறோம். செயற்கை நுண்ணறிவுக்கும் புத்த மதத்துக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.



நம் மனதால் அனைத்தும் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதே புத்தரின் போதனைகள் சுட்டிக்காட்டுகிறது. மனதைக் கட்டுப்படுத்தினால் முன்னேறலாம். மனதைக் கட்டுப்படுத்தாவிட்டால் நமக்கு எதிர்காலம் இல்லை. மனதைக் கட்டுப்படுத்துவது மனிதனுக்கு மட்டுமே உள்ளது. அதனால்தான் புத்தரின் போதனைகள் மனித குலத்திற்காக செய்யப்பட்டது. மனதைக் கட்டுப்படுத்தினால் பேராசையை ஒழிக்க முடியும். இந்த மனித மனதிற்கு இணையாக செயற்கை நுண்ணறிவு தற்போது வந்துவிட்டது. செயற்கை நுண்ணறிவுக்கு பல்வேறு தகவல்களை இணைக்க முடியும். செயற்கை நுண்ணறிவு அதற்கேற்ப செயல்படுகிறது. அப்படியானால், புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். என மேலும் தெரிவித்தார்
அடுத்த வருடம் ஒரு பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆராய்ச்சி பணிகள் ஆரம்பிக்கப்படும். அடுத்த வருடம் ஒரு பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆராய்ச்சி பணிகள் ஆரம்பிக்கப்படும். Reviewed by Madawala News on May 11, 2024 Rating: 5

கணக்கியல் துறை பட்டப்படிப்பான B.Sc (Hons) in Applied Accounting Degree சர்வதேச கணக்கியல் தகைமையான ACCA வை ICST University Park, Punanai வளாகத்தில் தொடரும் அரிய வாய்ப்பு - Conducted by ACHIEVERS



Registrations are Now Open to June Intake 2024 for Level-I and Level-II for ACCA (Association of Chartered Certified Accountants) Plus B.Sc (Hons) in Applied Accounting Degree 2 in 1 Program conducted by ACHIEVERS at International Campus of Science and Technology (ICST) University Park, Punanai.

கணக்கியல் துறை பட்டப்படிப்பான B.Sc (Hons) in Applied Accounting Degree சர்வதேச கணக்கியல் தகைமையான ACCA (Association of Chartered Certified Accountants) வை International Campus of Science and Technology (ICST) University Park, Punanai வளாகத்தில் தொடரும் அரிய வாய்ப்பு.

வரப்பிரசாதமாக எமது பிராந்தியத்தில் ACCA கற்கைநெறியானது எமது ICST University Park, Punanai வளாகத்தில் கொழும்பின் மிகப் பிரபலமான கற்கை நிலையமான ACHIEVERS இன் விரிவுரையாளர்களைக் கொண்டு அனைத்து Level-I and Level-II வகுப்புக்களும் நடைபெறவுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ACCA என்பது "Association of Chartered Certified Accountants" என்பதன் சுருக்கமாகும். இது உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தகுதி வழங்கும் நிறுவனம் ஆகும். இது "Chartered Certified Accountants" என்ற தகுதியை வழங்குகிறது. முக்கியமாக சர்வதேச அளவில் அனைத்து நிறுவனங்களாலும் அங்கீகரிக்கப்பட்ட உயர் கணக்கீட்டுத் தகைமையாக இது காணப்படுகிறது.

இதனை எமது மண்ணிலேயே இலங்கையின் மிகப்பிரபலமான ACHIEVERS இன் விரிவுரையாளர் குழாமிடமிருந்து கற்பதற்கான அரிய வாய்ப்பை ICST University Park, Punanai தற்போது வழங்குகிறது என்பதையும், இதற்கான பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன என்பதையும் மகிழ்வோடு அறிவிக்கிறோம்.

யார் யார் விண்ணப்பிக்கலாம்?

ACCA படிப்பு எந்த கல்வித் தகுதியையும் (Qualifications) கொண்ட எவருக்கும் திறந்தே இருக்கும். இதில் G.C.E (A/L) படிப்பவர்கள், G.C.E (O/L) முடித்தவர்கள், பட்டப்படிப்பு மாணவர்கள், பட்டதாரிகள், தொழில்முறையாளர்கள் (Professionals), ACCA படிப்பை மேற்கொள்ள விரும்பும் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பாக நீங்கள் AAT முடித்த ஒருவர் என்றால் நேரடியாக Level-II வை தொடர முடியும்.

ICST University Park, Punanai ல் ACHIEVERS வழங்கும் ACCA படிப்பின் நன்மைகள் என்ன?

நேரடி விரிவுரையாளர்கள் (Physical Lecturers) / வார நாட்கள் மற்றும் வார இறுதி விருப்பங்கள் (முழு நேர மற்றும் பகுதி நேர) /உலகத்தரப்பட்ட விரிவுரையாளர் குழு (Worldwide Lecturers Panel) / முன் பதிவு செய்பவர்களுக்கு கல்விச்சம்பலுடன் (Scholarship will be Provided) கிடைக்கும்.

இலவச சலுகை (Complimentary Offering) தொழில்முறை ஆங்கில மொழி திறன் மேம்பாட்டு திட்டத்தின் சான்றிதழ் (Certificate in Professional English Skill Development Program) சான்றிதழ் வழங்கப்படும்.

• சிறந்த வசதிகள் கொண்ட கற்றல் சூழலை அனுபவிக்கவும்.

• Air Conditioning (A/C) பொருத்தப்பட்ட வகுப்பறைகள்.

• வசதியான தங்குமிடம் (On-Site Hostel / Accommodation Facilities).

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் (Student Consultant): 0761487511

The submission deadline is on or before 28.05.2024.

Please fill the following Google Form Application Link:




கணக்கியல் துறை பட்டப்படிப்பான B.Sc (Hons) in Applied Accounting Degree சர்வதேச கணக்கியல் தகைமையான ACCA வை ICST University Park, Punanai வளாகத்தில் தொடரும் அரிய வாய்ப்பு - Conducted by ACHIEVERS கணக்கியல் துறை பட்டப்படிப்பான B.Sc (Hons) in Applied Accounting Degree சர்வதேச கணக்கியல் தகைமையான ACCA வை ICST University Park, Punanai வளாகத்தில் தொடரும் அரிய வாய்ப்பு - Conducted by ACHIEVERS Reviewed by Madawala News on May 11, 2024 Rating: 5

டயனா கமகேவை போன்று இன்னும் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளனர்.



தற்போது மேலும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

“உச்ச நீதிமன்ற தீர்ப்பை பரிசீலிக்குமாறு இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். டயானா கமகேவைப் போன்று 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருப்பதால் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு தகுதியற்றவர்கள் என்ற செய்திகளை நாங்கள் கேள்விப்படுகிறோம்” என சோபித தேரர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இந்த விடயங்கள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு செல்வது நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கும் செயலாகும் எனவும் சோபித தேரர் தெரிவித்துள்ளார். "இந்த எம்.பி.க்கள் தங்கள் பதவிகளை மரியாதையுடன் ராஜினாமா செய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று சோபித தேரர் கூறியதுடன், கட்சித் தலைவர்கள் தங்கள் பிரதிநிதிகளை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைவூட்டினார்.
டயனா கமகேவை போன்று இன்னும் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளனர். டயனா கமகேவை போன்று இன்னும் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளனர். Reviewed by Madawala News on May 11, 2024 Rating: 5

குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி, வைத்தியசாலையிலேயே குழந்தையை விட்டுவிட்டு தப்பியோட்டம் #இலங்கை



குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி, குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவமொன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.



வடமராட்சி துன்னாலைப்பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியொருவர் கர்ப்பமாக இருந்த நிலையில் தனது தாயுடன் பிரசவத்திற்காக நேற்று மாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் நேற்று இரவு குழந்தையை பிரசவித்த சிறுமி குழந்தையை அநாதரவாக விட்டுவிட்டு சிறுமியும் அவரின் தாயும் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



குறித்த சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி, வைத்தியசாலையிலேயே குழந்தையை விட்டுவிட்டு தப்பியோட்டம் #இலங்கை குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி, வைத்தியசாலையிலேயே குழந்தையை விட்டுவிட்டு தப்பியோட்டம் #இலங்கை Reviewed by Madawala News on May 11, 2024 Rating: 5

இனந்தெரியாத நபரின் கைங்கர்யம் - வீடு எரிந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதம்



ஹஸ்பர் ஏ.எச்_

திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இல_38ல் உள்ள,பெரியகுளம் -விருகம்மான வீட்டுத் தொகுதியில் வீடொன்று தீப்பற்றியுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (09) அதிகாலை 12 .30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது அன்றைய தினம் வீட்டை பூட்டி விட்டு திருகோணமலை கடற்படைக்கு முன்னால் தனது கடையில் தங்கியுள்ள்ள நிலையில் தூங்கிக் கொண்டிருக்கும் போது தனது வீடு தீப்பற்றி எரிவதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. இந் நிலையில் இத் தீ சம்பவம் இடம் பெற்றுள்ளதை அறிந்து உடனடியாக பொலிஸ் அவசரப் பிரிவு இலக்கமான 119 க்கு அறிவித்துள்ள நிலையில் தீயனைப்பு பிரிவுக்கும் அறிவித்ததாக குறித்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார். இதில் பல பெறுமதியான வீட்டு உபகரணங்கள் எறிந்து நாசமாகியுள்ளதால் பல இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
உயிர் சேதம் எதுவும் இடம் பெறவில்லை .

இனந்தெரியாத நபரால் தீயிட்டு சென்றதாக இச்சம்பவம் தொடர்பில் உரிமையாளர் தெரிவித்தார்

இச் சம்பவம் தொடர்பில் நிலாவெளி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்


இனந்தெரியாத நபரின் கைங்கர்யம் - வீடு எரிந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதம் இனந்தெரியாத நபரின் கைங்கர்யம் - வீடு எரிந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதம் Reviewed by Madawala News on May 11, 2024 Rating: 5

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வையில்லா சொகுசு வாகன அனுமதிப்பத்திரம் கிடைக்காது?



நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வையில்லா வாகன அனுமதிப்பத்திரம் வழங்கும் தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுவில் இது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், பல்வேறு முரண்பாடுகள் காரணமாக தெளிவான முடிவு எடுக்க முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் வேளையில் வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவது பொருத்தமானதல்ல என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் குழுவில் கடுமையாக சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போது வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு சமகி ஜன பலவேகய எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக திரு.கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

அங்கு திரு.கிரியெல்லவின் ஆட்சேபனையை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

அண்மையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் 116 பேர் வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம் கோரி சபாநாயகரிடம் ஆவணம் ஒன்றை கையளித்தனர். கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு சபாநாயகர் ஆவணத்தை சமர்ப்பித்துள்ளார், அங்கு விவாதிக்கப்பட்டாலும் தெளிவான முடிவு எடுக்க முடியவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வையில்லா சொகுசு வாகன அனுமதிப்பத்திரம் கிடைக்காது? நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வையில்லா சொகுசு வாகன அனுமதிப்பத்திரம் கிடைக்காது? Reviewed by Madawala News on May 11, 2024 Rating: 5

ஒரு முன்மாதிரியான நிகழ்வு - சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் தனது திருமணத்தை நடத்திய சகோதரர் பஸ்லான்



அன்பின் உறவுகளே!

எம் நிகாஹ் வைபவம் 09.05.2024 அன்று ஹெம்மாதகமை தாருல் ஹஸனாத் சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் மன மகிழ்வுடன் நடைபெற்றது.

"நம் சமூகம் பசியில்லாத இடத்திலே அதிகம் விருந்து வழங்குகிறது."
"இதுவரை ஓர் திருமண வைபவம் எப்படி நடக்கும் என்பதை வாழ்விலே பார்த்தே இல்லாத இந்த சிறுவர்களிடத்தில் இது ஓர் முதல் வைபவம்"
-சிறுவர் பாராமரிப்பு இல்லத்தின் தலைவர் ஸாலிம் ஹஸ்ரத்-

இது போன்ற புனித இடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் கிடைத்த மிகப்பெரும் பாக்கியம் என்ற உணர்வை ஏற்படுத்தியது. அல்ஹம்துலில்லாஹ்!

நம் வீடுகளில் கோலாகலமாக நடைபெறும் வைபவங்களில், உறவுகளுக்காவும், அன்புக்காகவும் ஏங்கும் அனாதைகள்; ஆதரவற்ற முதியோர்களையும் இணைப்பது பெரும் தர்மமாக அமையும்.

இறைவன் எமது எண்ணங்களையும், செயல்களையும், உறவுகளையும் ஏற்றுக்கொள்வானாக.

எமது நண்பர், அயலவர், உறவினர்களுக்கான வலீமா வைபவம் டிசம்பர் மாதம் வைப்பதற்கு தீர்மானித்து இருக்கின்றோம், இன்ஷா அல்லாஹ்!

Fazlan A Cader With Afra Akram

May 9th, 2024, we celebrated our nikah at Dharul Hasanath Children's Home. 💖 Choosing this venue underlines our belief in providing emotional support to children in need. May Allah bless me, my wife, and our family abundantly.


#NikahAtOrphanage #NikahCelebration #BlessedFamily @highlight Fazlan A Cader Fazlan A Cader Husni Haneefa Azmy Izzadeen Dharul Hasanath Children's Home
ஒரு முன்மாதிரியான நிகழ்வு - சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் தனது திருமணத்தை நடத்திய சகோதரர் பஸ்லான் ஒரு முன்மாதிரியான நிகழ்வு - சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் தனது திருமணத்தை நடத்திய சகோதரர் பஸ்லான் Reviewed by Madawala News on May 10, 2024 Rating: 5

VIDEO > பட்டப்பகலில் நகைக்கடையில் துணிகர கொள்ளை - துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி அடாவடி



ஹோமாகம நகரில் உள்ள நகைக்கடை ஒன்றுக்கு கைத்துப்பாக்கியுடன் வந்த இனந்தெரியாத இருவர், நிறுவனத்தில் இருந்த பணம் மற்றும் தங்கப் பொருட்களை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இன்று (10) முற்பகல் 11.45 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேரில் இருவர் கடைக்குள் நுழைந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

இருவரும் தங்கம் வாங்குவது என்ற போர்வையில் சிறிது நேரம் அங்கேயே இருந்துவிட்டு, அவர்களில் ஒருவர் கடைக்காரர்களை நோக்கி கைத்துப்பாக்கியை காட்டி தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளார்.

3 லட்சம் ரூபாய் பணம் ,
36 மோதிரங்கள்,
48 பென்டன் ஆகியவற்றை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றதாக நகைக்கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.

கொள்ளையர்கள் சென்ற பின், கடையில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

கொள்ளையர்கள் எடுத்துச் சென்ற தங்க மோதிரங்கள் மற்றும் பென்டன்கள் சாலையில் கிடப்பதையும், அவ்வழியாக சென்றவர்கள் அவற்றை கடைக்கு கொண்டு வந்த விதமும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

ஹோமாகம காவற்துறையினர் உடனடியாக அங்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்ததில் கொள்ளையர்கள் வந்த மோட்டார் சைக்கிள்களின் இலக்கத் தகடுகள் போலியானது என தெரியவந்துள்ளது.
VIDEO > பட்டப்பகலில் நகைக்கடையில் துணிகர கொள்ளை - துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி அடாவடி VIDEO > பட்டப்பகலில் நகைக்கடையில் துணிகர கொள்ளை - துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி அடாவடி Reviewed by Madawala News on May 10, 2024 Rating: 5

இன்று பூமியைத் தாக்கும் சூரிய காந்த புயல் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை



 9 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதிக்குள் நொடிக்கு 451 - 615 கிலோமீட்டர் வேகத்தில் மிதமான புவி காந்தப் புயலால் பூமி பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://awarenessact.com/severe-solar-storm-could-trigger-northern-lights-as-far-as-alabama/

அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் சூரிய காந்த புயலுக்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது. 


அதன்படி இன்று (10) இரவு முதல் நாளை (11) இரவு வரை கலிபோர்னியா – தெற்கு அலபாமா வரை அரோரா காந்த புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


பூமியின் வட அரைக்கோளத்தில் காந்த புயல் காரணமாக தகவல் தொடர்பில் பாதிப்பு ஏற்படலாமெனத் தகவல் வெளியாகியுள்ளது.


இதனால் செயற்கைக் கோள்களின் செயற்பாடுகளும் முடங்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க ஆய்வகம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.


இதற்கு முன்னாள் ஏற்பட்ட புவி காந்த புயல் பூமி மற்றும் விண்வெளியில் சில பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. முன்னர் பூமியைத் தாக்கிய புவி காந்த புயல் ரஷ்யாவில் ஒட்டுமொத்தமாக ரேடியோ பிளாக் அவுட் விளைவை ஏற்படுத்தியுள்ளது. 

இன்று பூமியைத் தாக்கும் சூரிய காந்த புயல் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை  இன்று பூமியைத் தாக்கும் சூரிய காந்த புயல் -  விஞ்ஞானிகள் எச்சரிக்கை Reviewed by Madawala News on May 10, 2024 Rating: 5

வீதிகளில் சுற்றித்திரியும் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை செய்யும் நடவடிக்கை ஆரம்பம்.



(ஹஸ்பர் ஏ.எச் )

கிழக்கு மாகாண கால் நடை சுகாதாரத் திணைக்களமும் திருகோணமலை நகரசபையும் இனைந்து திருகோணமலை நகரில் கட்டாக்காலியாக திரியும் நாய்களின் பெருக்கக்கை கட்டுப்படுத்தும் முகமாக நாய்களுக்கு கருத்தடை செயற்பாடு நேற்று (09) திருகோணமலை நகரில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கால் நடைசுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர் , திருகோணமலை நகரசபையின் செயலாளர் வெ. இராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வீதிகளில் சுற்றித்திரியும் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை செய்யும் நடவடிக்கை ஆரம்பம். வீதிகளில் சுற்றித்திரியும் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை செய்யும் நடவடிக்கை ஆரம்பம். Reviewed by Madawala News on May 10, 2024 Rating: 5

மகளிர் படை முகாமிற்குள் உறங்கிக்கொண்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வன்புனர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது



பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வன்புனர முயன்ற குற்றத்தின் பேரில், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், மாங்குளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


மேலும், மாங்குளம் பொலிஸ் விசேட அதிரடிப்படைப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


கொழும்பு கரையோரப் பொலிஸாரின் மகளிர் படை முகாமிற்கு இன்று அதிகாலை அத்துமீறி நுழைந்த குறித்த கான்ஸ்டபிள், அங்கு உறங்கிக்கொண்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வன்புனர முயன்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.


சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

மகளிர் படை முகாமிற்குள் உறங்கிக்கொண்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வன்புனர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது மகளிர் படை முகாமிற்குள் உறங்கிக்கொண்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வன்புனர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது Reviewed by Madawala News on May 10, 2024 Rating: 5

ஹமாஸுக்கு எதிரான போரில் அமெரிக்கா எமக்கு உதவி செய்யாவிட்டால் நாம் தனித்து நின்று போராடுவோம் - ஆயுதம் தராவிட்டால் எமது விரல் நகங்களால் கூட போராடுவோம் ; இஸ்ரேல் பிரதமா்



இஸ்ரேலுக்கான ஆயுத விநியோகத்தை நிறுத்துவோமென அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில்,''ஹமாஸுக்கு எதிரான போரில் தனித்து நின்று போரிடவும் தயார்" என இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளார்.


''தெற்கு காஸாவின் ரஃபா நகரில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கினால், இஸ்ரேலுக்கு ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் வழங்குவதை நிறுத்துவோம்" என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இந்நிலையில் இது தொடா்பில் கருத்து வெளியிட்டுள்ள இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாஹு


''ஹமாஸுக்கு எதிரான போரில் தனித்து நின்று போரிட வேண்டிய சூழல் உருவானால், தனித்து நிற்கவும் தயார். விரல் நகங்களால்கூட நாங்கள் போரிடுவோம். ஆனால், விரல் நகங்களைவிட பலமான ஆயுதங்கள் எங்களிடம் உள்ளன''- என்றார்.



அதேபோல், ரஃபா தாக்குதலுக்குப் போதுமான ஆயுதங்கள் தங்கள் வசமிருப்பதாக இஸ்ரேல் இராணுவச் செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஹமாஸுக்கு எதிரான போரில் அமெரிக்கா எமக்கு உதவி செய்யாவிட்டால் நாம் தனித்து நின்று போராடுவோம் - ஆயுதம் தராவிட்டால் எமது விரல் நகங்களால் கூட போராடுவோம் ; இஸ்ரேல் பிரதமா் ஹமாஸுக்கு எதிரான போரில் அமெரிக்கா எமக்கு உதவி செய்யாவிட்டால் நாம் தனித்து நின்று போராடுவோம் - ஆயுதம் தராவிட்டால் எமது விரல் நகங்களால் கூட போராடுவோம் ; இஸ்ரேல் பிரதமா் Reviewed by Madawala News on May 10, 2024 Rating: 5

நாட்டில் மதுபான பாவனை குறைவடைந்தது - பாவனையாளர்கள் சுமார் 65 சதவீதமானோர் குடியை குறைத்தனர்.



கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தின் தமிழ், சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது மதுசாரப் பாவனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட ஆய்வொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.


குறித்த ஆய்வுக்காக நாடளாவிய ரீதியில் 415 பேரிடம் தகவல்கள் பெறப்பட்டுள்ளன.


அவர்களில் 192 பெண்களும் அடங்குவர் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் படி இந்த ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டக் காலங்களில் மதுசாரப் பாவனை குறைவடைந்துள்ளதாக 64.4 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர்.


அதில் 26 சதவீதத்தினர் இந்த காலகட்டத்தில் மதுசாரப் பாவனையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை எனவும் 10 சதவீதத்தினர் மதுசாரப் பாவனை அதிகரித்திருந்ததாகவும் தகவல் வழங்கியுள்ளனர்.


புதுவருட கொண்டாட்டக் காலங்களில் மதுசாரப் பாவனை குறைவடைந்தமைக்கான காரணங்கள் தொடர்பான கருத்துக்களுக்கு மதுசாரத்தின் விலை அதிகரிப்பே காரணம் என ஆய்வில் பங்கேற்ற 71.5 சதவீதமானோர் தகவல் வழங்கியுள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் குறிப்பிட்டுள்ளது.


இது சமூகத்தில் சிறந்த போக்கை எடுத்துக்காட்டுவதாகவும், சுகாதாரத்துறையின் அதிக செலவினத்தை தவிர்க்க முடியும் எனவும் அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.


நாட்டில் மதுபான பாவனை குறைவடைந்தது - பாவனையாளர்கள் சுமார் 65 சதவீதமானோர் குடியை குறைத்தனர். நாட்டில் மதுபான பாவனை குறைவடைந்தது - பாவனையாளர்கள் சுமார் 65  சதவீதமானோர் குடியை குறைத்தனர். Reviewed by Madawala News on May 10, 2024 Rating: 5

நடைபெற்று வரும் சாதாரணதர பரீட்சையில், வினாத்தாளை மொபைல் தொலைபேசியில் புகைப்படம் எடுத்து அனுப்பி, விடைகளை பெற முயன்ற மாணவர்கள் சிலர் சிக்கினர்.



இந்த நாட்களில் இடம்பெறும் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (10) முறைப்பாடுகள் செய்யவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.



கொழும்பில் உள்ள இரண்டு பரீட்சை நிலையங்களிலும் ஹசலக்க பிரதேசத்தில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்திலும் இந்த முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.



தேர்வு எழுதியவர்கள் நேற்று வழங்கப்பட்ட ஆங்கில வினாத்தாளை செல்போன்களை உன்னிப்பாகப் பயன்படுத்தி படம் எடுத்து மற்ற தரப்பினருக்கு அனுப்பி விடை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.



குறித்த நேரத்தில் பரீட்சை நிலையங்களில் இருந்த அதிகாரிகள் கையடக்கத் தொலைபேசிகளைக் கைப்பற்றியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது
நடைபெற்று வரும் சாதாரணதர பரீட்சையில், வினாத்தாளை மொபைல் தொலைபேசியில் புகைப்படம் எடுத்து அனுப்பி, விடைகளை பெற முயன்ற மாணவர்கள் சிலர் சிக்கினர். நடைபெற்று வரும் சாதாரணதர பரீட்சையில், வினாத்தாளை மொபைல் தொலைபேசியில் புகைப்படம் எடுத்து அனுப்பி, விடைகளை பெற முயன்ற மாணவர்கள் சிலர் சிக்கினர். Reviewed by Madawala News on May 10, 2024 Rating: 5

ரஃபா மீது தாக்கினால் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள், பீரங்கி குண்டுகளை வழங்குவதை நிறுத்துவோம்.



தெற்கு காஸாவின் ரஃபா நகரம் மீது தாக்குதல் நடத்தினால், ஆயுத உதவிகளை நிறுத்துவோம் என இஸ்ரேலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஃபாவுக்குள் இஸ்ரேல் இராணுவம் தரைவழி தாக்குதலை நடத்தினால், அந்த நாட்டுக்கு ஆயுதங்கள் மற்றும் பீரங்கி குண்டுகளை வழங்கப் போவதில்லை என ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

ரஃபாவின் தற்போதைய நிலைமையை தரைப்படை நடவடிக்கையாக அமெரிக்கா வரையறுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்
ரஃபா மீது தாக்கினால் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள், பீரங்கி குண்டுகளை வழங்குவதை நிறுத்துவோம். ரஃபா மீது தாக்கினால் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள், பீரங்கி குண்டுகளை வழங்குவதை நிறுத்துவோம். Reviewed by Madawala News on May 10, 2024 Rating: 5

ரஷ்ய - உக்ரைன் போரில் இராணுவத்துடன் இணைந்த 6 இலங்கையர்கள் பலி



மனித கடத்தல்காரர்களால் அழைத்து செல்லப்பட்டு ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து அனுப்பப்பட்ட இலங்கையர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

மேலும் இந்த சம்பவத்துடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை கண்டறிய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ அதிகாரிகள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டமை குறிப்படத்தக்கது
ரஷ்ய - உக்ரைன் போரில் இராணுவத்துடன் இணைந்த 6 இலங்கையர்கள் பலி ரஷ்ய - உக்ரைன் போரில் இராணுவத்துடன் இணைந்த 6 இலங்கையர்கள் பலி Reviewed by Madawala News on May 09, 2024 Rating: 5

நான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாது என வெளியாகியுள்ள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.



இலங்கை நாடாளுமன்றத்தில் பதவி வகிக்க முடியாது என வெளியான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் டயானா கமகே ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


“நான் நீதித்துறையை மதிக்கும் நபர். இருப்பினும், பல காரணங்களால் இந்த தீர்ப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


இதன் பின்னணியில் பெரிய அரசியல் சதி உள்ளது” என்று கமகே கூறினார்.

சமகி ஜன பலவேகய (SJB) கட்சியில் அனைவரையும் நான் குற்றம் சாட்டவில்லை, இருப்பினும் சில உறுப்பினர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

பழிவாங்கும் அரசியலில் ஈடுபடும் சில சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் என கமகே கூறினார். "நேற்றைய தீர்ப்பு அவர்களின் வெறுப்பை மட்டுமே காட்டுகிறது," என்று அவர் கூறினார்.


இந்த தீர்ப்பு நாட்டின் ஒட்டுமொத்த பெண் மக்கள் மீதான தாக்குதலாகும் என்றும் கமகே கூறினார். “நான் ஒரு இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நான், இந்த நாட்டின் பெண்கள் மற்றும் மக்களுக்காக வெளிப்படையாகப் பேசியதுடன் நின்றுகொண்டேன். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர், கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு தனித்துப் பெண்ணை எதிர்த்துப் போராடுவதற்காக ஒரு பிச்சைக்காரனுடன் ஒன்று சேர்ந்துள்ளார்,” என்று அவர் கூறினார்.


“இந்த நாட்டில் உள்ள பெண்களுக்கு நான் ஒரு செய்தியைக் கூறுகிறேன். தேர்தல் வரும். கழுதை போல் நடந்துகொள்ளும் எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தால் மட்டுமே உங்கள் வாக்கைப் பயன்படுத்துங்கள். ஏனெனில் இந்த எதிர்கட்சித் தலைவர் பெண்களை மதிக்காதவர்” என கமகே கூறினார்
நான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாது என வெளியாகியுள்ள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மாட்டேன். நான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாது என வெளியாகியுள்ள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மாட்டேன். Reviewed by Madawala News on May 09, 2024 Rating: 5

கடும் மனஅழுத்தம் காரணமாக தனக்கு தானே தீ வைத்துக்கொண்டு உயிரிழந்த இளம் யுவதி #இலங்கை



வல்வெட்டித்துறை சிறி முருகன் குடியேற்றம் பகுதியில் யுவதி ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக்கொண்டு உயிரிழந்த சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது

மனஅழுத்தம் காரணமாக தீடிரென விபரீத முடிவு எடுத்து தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


இச் சம்பவத்தில் வல்வெட்டித்துறை ஸ்ரீ முருகன் குடியேற்றம் பகுதியைச் சேர்ந்த அன்ரன் மரியதாஸ் கிருபாகினி என்ற வயது 26 இளம் யுவதியை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
கடும் மனஅழுத்தம் காரணமாக தனக்கு தானே தீ வைத்துக்கொண்டு உயிரிழந்த இளம் யுவதி #இலங்கை கடும் மனஅழுத்தம் காரணமாக தனக்கு தானே தீ வைத்துக்கொண்டு உயிரிழந்த இளம் யுவதி #இலங்கை Reviewed by Madawala News on May 09, 2024 Rating: 5
Powered by Blogger.